சிவகிரியில் வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்கள்

ஈரோடு சிவகிரியில் தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் தமிழக பாஜக சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமயம் பார்த்து மிக கச்சிதமாக அண்ணாமலையின் சோளியை முடித்த எடப்பாடி பழனிசாமி

தாம் தூம் எகிறி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த வந்த அண்ணாமலையின் குரல் வலையை சமயம் பார்த்து மிக கச்சிதமாக எடப்பாடி பழனிசாமி அடக்கனார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்னாள் அமைச்சர்களான KP முனுசாமி, SP வேலுமணி, CV சண்முகம், M தம்பிதுரை MP ஆகியோரின் டெல்லி பயணம் பலரது புருவங்களை உயர்த்த வைத்தது. மேலும் எவ்வித முன்னறிவிப்புமின்றி எடப்பாடி பழனிசாமி அணியை சென்னை விமான நிலையத்தில் பார்த்த அடுத்த நொடியில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது.

இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அணி இறங்கியதில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வுகளையும் கேமராக்கள் வட்டமிட தொடங்கியது. ஆகையால், இந்த கேமராவின் மூன்றாவது கண்களுக்கு பயந்து சில கார்கள் மாறி மாறி செல்லவேண்டுய சூழ்நிலை ஏற்படாது. எப்படியோ ஒரு வழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது மட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி மட்டும் அமித் ஷாவை தனியே 50 நிமிடம் சந்தித்து பேசியது தமிழக அரசியல் பேசுபொருளாக மாறியது.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அணி அமித் ஷாவை நடத்திய சந்திப்பை வைத்து அதிமுகவைவும், எடப்பாடி பழனிச்சாமியையும் சமூக வலைத்தளங்களில் பங்கமாய் கலாய்க்க தொடங்கினர். தமிழக சட்டசபையிலும் இது எதிரொலிக்க தொடங்கியது. இந்நிலையில்,  தமிழக சட்டசபை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சிறப்பு திட்டங்கள் மீதான விவாதத்தின் போது, கடந்த 2022 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டம் முடிவடைந்து, அமைச்சர்கள், MLA -க்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் கார்கள் தயாராக இருந்தபோது ஆங்கில தொலைக்காட்சி நிரூபர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்விகள் கேட்க அவர்களுக்கு பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக சென்று அங்கு நின்ற சாம்பல் நிற காரில் ஏற கதவை திறக்க அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த காவலர் ஒருவர், சார் இது உங்கள் கார் இல்லை என சொன்னது சுதாரித்துக் கொண்டு பின்னர் அதற்கு முன்னால் நின்றிருந்த அதே நிற காரில் ஏறி எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.

அதன் பின்புதான் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்ற கார், உதயநிதி ஸ்டாலினின் கார் என தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து அன்று தமிழக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி எனது காரில் தவறுதலாக ஏற சென்றார். எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லட்டும், ஆனால் ரூட் மாறி கமலாலயத்திற்கு செல்லாமல் இருந்தால் சரி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ. பன்னீர்செல்வம், நாங்கள் ரூட் மாறி செல்ல மாட்டோம் என தெரிவித்தார். அந்த நிகழ்வை இன்று சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின் , அன்று ரூட் மாறாதுனு சொன்னீங்களே இன்று 3 கார்களில் மாறி மாறி அமித் ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி சென்றாரே என விமர்சனம் செய்த அடுத்த நொடியே தமிழக சட்டமன்றமே சிரிப்பொலியால் அதிர்ந்து போனது.

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.. என்ற எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ரிக்‌ஷாக்காரன் படத்தில் வரும் பாடல் வரிகளைப் போல டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,அதிமுக சார்பில், புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். அந்த அலுவலகத்தைப் பார்வையிடவே சென்றதாக எடப்பாடி பழனிசாமி ஒற்றை வாயில் பதிலளித்தார்.

மேலும், அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதில் பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஒழிப்பதே எனது இலக்கு என தெரிவித்தார்.

பாஜகவின் மேலிடமும் அனைவரும் ஒன்றிணைந்தால் 2026- ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பில் அண்ணாமலையை தமிழக பாஜகவிலிருந்து நீக்கினால் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வர தயார் என சமயம் பார்த்து மிக கச்சிதமாக எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தினர்.

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து திரும்பிய அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி விரைந்தார். அதற்கு முன்பு வரை தாம் தூம் எகிறி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த அண்ணாமலையின் குரல் வலையை எடப்பாடியின் சதுரங்க வேட்டையில் சிக்கி சின்னாபின்னமாகினார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு:மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவை மாடுகளுக்கு விற்கும் விடுதி ஊழியர்கள்?

சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, தரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும், இந்த வீணாகும் உணவு, கால்நடைப் பண்ணைகளுக்கு விற்கப்படுவதாகவும், இன்றைய தினமலர் இணையவழி செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு, அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்றும், மேலும், குறித்த நேரத்தில் மாணவர்கள் வரவில்லை என்றால், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என்றும் மாணவர்கள் புகார் கூறியிருக்கின்றனர். சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் இதே நிலைதான் நிலவுகிறது எனத் தெரிகிறது.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் 2024 – 25 ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 1,331 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருகின்றனர். மானிய கோரிக்கையின்படி இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், உணவுப் படி ஒருவருக்கு ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள். உணவுப் படி ஒரு நாளைக்கு ரூ. 50 என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. இந்தத் தொகையில் மாணவர்களுக்கு என்ன உணவு வழங்க முடியும்?

தமிழகத்தில் மொத்தம் 1,138 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, புதிய விளையாட்டுக் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்ட மொத்த தொகை, ரூ. 2 லட்சம். சராசரியாக, ஒரு பள்ளிக்கு, ரூ. 175. இந்தத் தொகையில் என்ன விளையாட்டுக் கருவிகள் வாங்க முடியும் என்பதைத் திமுக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைதான் கூற வேண்டும்.

இதே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 – 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 – 25 நடப்பாண்டில் விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு. ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த, நடப்பாண்டில் ரு.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில், விடுதிகள் மேம்பாட்டுக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, நடப்பாண்டில் ரூ. 7.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்றுடன் முடியும் நிதியாண்டில், அதில் 10 சதவீத நிதியைக் கூட, திமுக அரசு செலவிடவில்லை. வெறும் வாய்வார்த்தையில் சமூகநீதி பேசி, காலம் காலமாக மக்களை ஏமாற்றுவதிலேயே திமுக குறியாக இருக்கிறது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி இருப்பது குறித்து, தமிழக பாஜக கேள்வி எழுப்பியிருந்தது. தற்போது, தரமான உணவும் வழங்கப்படாமல், உண்மையில் எதற்காக இந்த மாணவர் விடுதிகளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக என்ற கேள்வி எழுகிறது.

பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் திமுக அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடவில்லை? ஏன் பட்டியல் சமூக மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது திமுக அரசு? உடனடியாக, ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான, சுவையான உணவு, மூன்று வேளையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர் விடுதிகளை மேம்படுத்தி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை விமர்சனம்: மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை..!

நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான் என ஆதவ் அர்ஜுனாவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுக்குழுவில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, “பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும், திமுகவின் பிரச்சினைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை.” என ஆதவ் அர்ஜுனா விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, “அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான். என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது” என அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை பேசுகையில், “திமுகவுக்கு எதிராக அதிக போராட்டங்களை நடத்திய கட்சி பாஜக. திமுகவுக்கு எதிராக பேசியதாக அதிக அவதூறு வழக்குகள் என் மீது தான் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலேயே ஒரு கட்சித் தலைவர் மீது அதிக FIR போட்டு இருக்கிறார்கள் என்றால் அது என் மீது தான். திமுகவை தீர்க்கமாக எதிர்த்து தினமும் பேசுவது யார்? வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம் இருக்கிறது. கொழுத்துப் போய் இருக்கிறார்கள். மைக் ஓசியில் வந்துவிடுகிறது, என்ன வேண்டுமானாலும் பேச வாய்ப்பு கிடைக்கிறது.

நேர்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். படித்து முடித்த முதல் நாளில் இருந்து எந்த தனியார் நிறுவனத்திலும் சம்பளம் பெறாதவன். என் முதல் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான். 10 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவன் நான். எனது சொந்த நிறுவனத்தில் கூட ஒரு ரூபாயைக் கூட நான் சம்பளமாகப் பெற்றதில்லை. இத்தனைக்கும் நான் இப்போது எந்த அரசுப் பதவியிலும் இல்லை, பஞ்சாயத்து தலைவராகக் கூட இல்லை என்றாலும், ஒரு ரூபாய் பணத்தை தனியாரிடம் இருந்து பெற்றதில்லை.

2011 IPS ரேங்க்கில் எனது ரேங்க் 2. நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. எதை இழந்தாலும் மீண்டும் வருவேன்” என ஆவேசமாக அண்ணாமலை பேசினார்.

பிரதமர் குறித்து மீடியா வெளிச்சத்திற்காக விஜய் பேசுகிறார் என அண்ணாமலை விமர்சனம்..!

மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல், மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய் என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக பரபரப்பான அரசியல் சூழலில் அமித் ஷாவின் அவசர அழைப்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று, டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன்; மாநில தலைவராக எனது கருத்தை கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நிறைய காலம் உள்ளது. பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை. கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம். எனது கட்சியை வலிமைப்படுத்தவே உழைத்து வருகிறேன்; தொண்டனாகவும் பணி செய்வேன். பாஜக தேசியத் தலைவர் தேர்தல், மாநிலத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கட்சி நலனைவிட தமிழக நலனே முக்கியம் என்று கூறினார்.

மேலும் அண்ணாமலை தொடர்ந்து பேசுகையில், மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய். மைக் எடுத்து பேசி, கைகாட்டிவிட்டு போவதில்லை அரசியல்; களத்தில் வேலை செய்ய வேண்டும். சக்திமிக்கவர்களை பேசினால் மைலேஜ் கிடைக்கும்; அதனால் பிரதமர் பற்றி விஜய் பேசுகிறார்.

தினமும் போராடுவது ஒரு அரசியல்; கட்சி தொடங்கி 3 முறை வெளியே வருவது ஒரு அரசியல். கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களை சந்தித்துள்ளார்? மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல். யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.

சேகர்பாபு அதிரடி: அண்ணாமலை டூப் போலீஸ்.. லஞ்சபேர்வழி..!

ஒரு டூப் போலீஸ், லஞ்சபேர்வழி என நானும் போகிற போக்கில் சொல்லலாம் என விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் தமிழக பாஜக சார்பில் மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் MLA, வானதி சீனிவாசன் MLA உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். அதற்கு கைதட்ட 100 பேர் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, 2026 -ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் திமுகவினர் இருக்கிறார்கள். வட இந்தியர்கள் யாரும் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசியதில்லை.

ஆனால் திமுகவினர் வடமாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களையும் இழிவாக பேசுகிறார்கள். இதற்கு அவர்களது பயம்தான் காரணம். பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியைப் பற்றி பேசுவார். அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து பேசுகிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?” என ஆவேசமாகப் அண்ணாமலை பேசியிருந்தார்.

சென்னையில் இன்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 73 நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இன்றைக்கு 33-வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கி வருகிறோம். இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்பதை உறுதி அளிக்கிறோம்.

குற்றப்பின்னணியில் இருக்கும் அமைச்சர்கள் என அண்ணாமலை சொல்வது, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார். படிக்காதவர்கள் எப்படி பள்ளியை பற்றி பேசலாம் என்கிறார் அண்ணாமலை.. ஒருவேளை காமராஜரை களங்கப்படுத்துகிறாரா அண்ணாமலை? அண்ணாமலை ஒரு தற்குறி படிப்பு, மனம், சேவைக்கு தொடர்பு இல்லை. மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செயல்படுவார்கள். இது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது. என்னை சரித்திரப் பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என நான் கூட சொல்கிறேன். ஆதாரம் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை. ஆதாரத்தை காட்டிதான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்.

போகிற போக்கில் ஏதாவது வாரித்தூற்றி விட்டு போனால் எப்படி முறையாகும்? ஆதாரத்தைக் காட்ட சொல்லுங்கள். ஊசிப் போன பண்டம் பாஜக அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். ஊசிப் போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026-ல் மக்கள் தூக்கி எறியவும் தயாராக இருக்கின்றனர்.

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். நீதிபதிகளையே தலைக்கு மேலே இருப்பதற்கு ஒப்பானவர்கள் என பேசுகிறவர்கள் நாங்கள் அல்ல. எங்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறை என்றாலும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள தயாராக் இருப்பதுதான் திமுக. இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது இந்தியாவின் வரைபடத்தில் கீழே இருக்கிற தமிழ்நாட்டை, வரைபடத்தில் மேலே இருக்கிற அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். லோக்சபா தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றி அலற்விட்டுள்ளோம். 2026 தேர்தலிலும் 200 தொகுதிகள் என்பது நிச்சயம்; 234 தொகுதிகளில் வெற்றி என்பது லட்சியம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அண்ணாமலை: “சேகர்பாபு ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் இருந்தவர்..! தமிழ்நாடு விளங்குமா..!?”

“சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?” என ஆவேசமாக அண்ணாமலை தெரிவித்தார். திருச்சியில் தமிழக பாஜக சார்பில் மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் MLA, வானதி சீனிவாசன் MLA உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். அதற்கு கைதட்ட 100 பேர் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, 2026 -ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் திமுகவினர் இருக்கிறார்கள். வட இந்தியர்கள் யாரும் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசியதில்லை.

ஆனால் திமுகவினர் வடமாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களையும் இழிவாக பேசுகிறார்கள். இதற்கு அவர்களது பயம்தான் காரணம். பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியைப் பற்றி பேசுவார். அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து பேசுகிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?” என ஆவேசமாகப் அண்ணாமலை பேசினார்.

எஸ்.வி.சேகர் அதிரடி: அண்ணாமலை அரசியலில் பூஜ்யம்..!

அண்ணாமலை அரசியலில் பூஜ்யம், ஒன்றுமே தெரியாது என எஸ்.வி.சேகர் அதிரடியாக தெரிவித்தார். நடிகரும், முன்னாள் MLA -வும், எஸ்.வி.சேகர் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, “தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணி மண்ணைக் கவ்வும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலிலும் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும். போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது.

தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை. அது வீக்கம் மாதிரி. பலூர் ஊதினால் பெரிதாகும், அதில் சக்தி இருக்காது. 2026-ல் பாஜக புஸ்ஸுனு போய்விடும். தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும். திமுக தலைமை கேட்டுக் கொண்டால் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப் போவதில்லை.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “ப்ரோ.. ப்ரோ” என்று சொல்வதெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ரசிகர்கள் பிடித்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள். ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவர் தான் தொண்டர்களுக்கு செலவு செய்ய வேண்டும். களத்துக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாடு முழுக்க சுற்றி வரவேண்டும். அப்போதுதான் அவருக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது தெரியும். இல்லையென்றால் நானும் அரசியலில் இருக்கிறேன் என சீமான் போல நிற்க வேண்டியது தான்.

நாடாளுமன்ற மறுசீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே விகிதாச்சாரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். அண்ணாமலை ஒரு உளறல் பேர்வழி. அவருக்கு வாய்தான் பேசுகிறது, பேசுவது எல்லாம் பொய். கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அண்ணாமலை முந்திக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசியல் தமிழ்நாட்டில் நடக்காது. அண்ணாமலை அரசியலில் பூஜ்யம். ஒன்றுமே தெரியாது” எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா…?

அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மைக்கை பிடித்தாலே தேர்தல், கூட்டணி தொடர்பாகவே பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டித்து அதிமுக தரப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கையெழுத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டு தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு, “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என்றார்.

அதனைத் தொடர்ந்து, “அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

அண்ணாமலை: பாஜக தீண்டத்தகாத கட்சி..! பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலை..!

பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தரப்பில் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. ஏற்கனவே பாமக மூத்த தலைவர் ஜிகே மணி இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பழனிசாமி கலந்து கொண்டார். இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகன் விஜய் விகாஸ் இல்லத் திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வாழ்த்தினார். அப்போது அண்ணாமலைக்கு எழுந்துநின்று கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் வரவேற்பு அளித்தனர்.

இதனால் 2021 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி போல் மீண்டும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில், திமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது என்று அறிவித்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என்று தமிழக அரசியலில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார்.

பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என்று பேசினார்கள். ஆனால் இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலையை ஒவ்வொரு பாஜக தொண்டனும், தலைவனும் உருவாக்கி இருக்கிறார்கள். இதனை நினைத்து பெருமை கொள்கிறேன். பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம்.

நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எங்களின் நோக்கம் பாஜகவை நிலை நிறுத்துவதுதான். கடந்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் பேசினார்கள். அதனை கடந்து மற்ற கட்சித் தலைவர்கள் பேசுவதை பாருங்கள். சரியான நேரத்தில் கூட்டணி தொடர்பாக பேசுவோம். தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றி சரியான நேரத்தில் பேசுவோம்.

பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல்வேறு தலைவர்கள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேசிய கட்சி அப்படி பயணிக்க முடியாது. எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.