டிடிவி தினகரன்: திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை..!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அமமுக எட்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் அறிவார்ந்த கொள்கைகளையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனிதாபிமானக் கோட்பாடுகளையும் கலங்கரை விளக்கமாகப் பின்பற்றி, தமிழகத்தின் புகழை தரணி எங்கும் பரப்பி தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களை இத்தருணத்தில் வணங்குகிறேன்.

தனிப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவத்தை கழகக் கொடியில் ஏந்தியும், இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை மனதில் நிலைநிறுத்தியும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடவும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடவும், நாம் அனைவரும் இணைந்து கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 -ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் உருவாக்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்களின் அளவில்லா அன்போடும் ஏகோபித்த ஆதரவோடும் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அம்மா அவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றிடும் வகையில் தொடங்கப்பட்ட நம் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த அன்புச் சகோதரர்களான மேலூர் திரு.R.சாமி, செயல் வீரர் திரு.P. வெற்றிவேல் உள்ளிட்ட பலர் நம்மை விட்டு இயற்கையோடு இயற்கையாக கலந்திருந்தாலும், விசுவாசத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவர்களின் எண்ணம் ஈடேறும் நேரமும், காலமும் அருகில் வந்துவிட்டது.

மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்ட இயக்கங்களால் மட்டுமே வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டிய நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருக்கும் இயக்கமாக நம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திகழ்ந்து வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொகுதியான ஆர்.கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்ட கட்சி மற்றும் ஆளுங்கட்சியை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெற்று அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் நாம் தான் என்பதை அன்றே நிரூபித்துக் காட்டினோம். அதன் தொடர்ச்சியாக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து விதமான தேர்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை பெற்றதோடு உள்ளாட்சி தேர்தல்களில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வாகை சூடி, முக்கிய பொறுப்புகளையும் வென்றுகாட்டினோம்.

நாம் பெற்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வெறும் வாக்குகள் அல்ல, நம் இயக்கத்திற்கு தமிழக மக்கள் வழங்கிய நற்சான்றுகள். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு, இரும்புப் பெண்மணியாக செயல்பட்டு, தமிழக மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை தந்த புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களைக் கொண்டதுதான் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

நமது இயக்கம் என்பது மக்களுக்கு தொண்டாற்றும் பெருங்கடமையை முன்னேடுத்துச்செல்லும் ஒரு பொது வாழ்கை பயணம் என்ற எண்ணத்தோடு களப்பணியாற்றும் உங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கிவரும் அன்பை என்றென்றும் உறித்தாக்குகிறேன். மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நீங்கள் அளிக்கும் அன்பு, ஆதரவு, ஊக்கம் மற்றும் உறுதுணை என்ற இந்த பாசப் பிணைப்பை எவராலும், எக்காலத்திலும் பிரிக்க முடியாது என்ற நம்பிக்கை, மிகுந்த உத்வேகத்தையும் அளிக்கிறது.

இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பின் ஆட்சி பீடத்தில் நம்மால் அமரவைக்கப்பட்டவர்கள், நம் புரட்சித்தலைவி அவர்கள் தன் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் கட்டிக் காத்த இயக்கத்தை தங்கள் சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் மூடுவிழா காணும் முயற்சியில் மும்முரமாகவும், முழுமூச்சாகவும் இறங்கியுள்ளனர். எந்த தீயசக்தியை வீழ்த்த புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் போராடினார்களோ அதே தீய சக்திகளுடன் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு, நம் தலைவர்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் இயக்கத்தை பாதை மாற்றி அழைத்து சென்றுகொண்டிருக்கும் துரோகக் கும்பலை இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தேர்தலுக்கு முன் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில் அதனை நிறைவேற்ற மறுக்கிறது. பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் இளம் பெண்கள், பெண் காவலர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் தான் தற்போது நிலவுகிறது.

நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கும் நிலையில், குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திமுகவின் மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பை திசைதிருப்பும் வகையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை.

சவால்களை எதிர்கொள்வதற்கு உரிய துணிச்சலும், மன உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அத்தகைய துணிச்சல் மற்றும் மன உறுதியோடும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடி வரும் நாம், நமது களப்பணிகளை மேலும் தீவிரப்படுத்திடுவோம். மக்கள் நலனையும், மாநிலத்தின் உரிமையையும் பாதுகாக்கத் தவறிய மக்கள் விரோத திமுக அரசை அடியோடு துடைத்தெறிந்திடும் நோக்கத்தில், திமுக அரசின் அவலங்களை ஒவ்வொரு வாக்காளரிடமும் முன் நிறுத்தி, மக்களை திரட்டி போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திடுவோம்.

அதே நேரத்தில் மக்கள் விரோத திமுக அரசை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய காலமும் நேரமும் நெருங்கிவிட்டது. நாம் அனைவரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து பணியாற்றி மக்கள் விரோத திமுகவை வீழ்த்திடுவோம், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம்!” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்..!

இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி-ஒன்றிய பாசிச பாஜக அரசுக்கு எதிராக, திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலை மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் உடுமலை மேற்கு ஒன்றியம் தேவனூர் புதூர் அண்ணா திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் மோடி அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்து கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்பட போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து ‘கூட்டு நடவடிக்கை குழு”வை அமைத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 7 மாநிலங்களை சேர்ந்த 29 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க. சார்பில் வரும் 12-ம் தேதி “தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டங்கள் மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம்மை இரண்டாந்தர குடிமக்களாக்க நினைக்கும் மோடி அரசின் சதியை மக்களிடம் எடுத்து கூறும் விதமாகவும், மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரிய வைக்கும் விதமாகவும், மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெறும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களில் மாவட்டம், மாநகரம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டும் என திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலை மேற்கு ஒன்றியம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பாக ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசினைவில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து உடுமலை மேற்கு ஒன்றியம் மடத்துக்குளம் தொகுதி மாபெரும் பொதுக்கூட்டம் உடுமலை மேற்கு ஒன்றியம் தேவனூர் புதூர் அண்ணா திடலில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் க. ஈஸ்வரசாமி, ஜெய ராமகிருஷ்ணன், பத்மநாபன், ஜெயக்குமார், செயலாளர்.தி. செழியன், ஆடி வெள்ளி முரளி, கதிர்வேல், கமலக்கண்ணன், S.N. காணியப்பன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தை சிறப்பித்தார்கள்.

 

எடப்பாடி பழனிசாமி: அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா…?

அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மைக்கை பிடித்தாலே தேர்தல், கூட்டணி தொடர்பாகவே பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டித்து அதிமுக தரப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கையெழுத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டு தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு, “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என்றார்.

அதனைத் தொடர்ந்து, “அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

அண்ணாமலை: பாஜக தீண்டத்தகாத கட்சி..! பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலை..!

பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தரப்பில் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. ஏற்கனவே பாமக மூத்த தலைவர் ஜிகே மணி இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பழனிசாமி கலந்து கொண்டார். இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகன் விஜய் விகாஸ் இல்லத் திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வாழ்த்தினார். அப்போது அண்ணாமலைக்கு எழுந்துநின்று கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் வரவேற்பு அளித்தனர்.

இதனால் 2021 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி போல் மீண்டும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில், திமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது என்று அறிவித்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என்று தமிழக அரசியலில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார்.

பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என்று பேசினார்கள். ஆனால் இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலையை ஒவ்வொரு பாஜக தொண்டனும், தலைவனும் உருவாக்கி இருக்கிறார்கள். இதனை நினைத்து பெருமை கொள்கிறேன். பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம்.

நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எங்களின் நோக்கம் பாஜகவை நிலை நிறுத்துவதுதான். கடந்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் பேசினார்கள். அதனை கடந்து மற்ற கட்சித் தலைவர்கள் பேசுவதை பாருங்கள். சரியான நேரத்தில் கூட்டணி தொடர்பாக பேசுவோம். தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றி சரியான நேரத்தில் பேசுவோம்.

பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல்வேறு தலைவர்கள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேசிய கட்சி அப்படி பயணிக்க முடியாது. எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

தினகரன்: தலைமையில் இருப்பவர்கள் அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்..!

அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். தமிழகத்தை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக திமுக அரசு மாற்றிவிட்டதாக கூறி, தமிழக அரசைக் கண்டித்து அமமுக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமமுக பொதுசெயலர் டிடிவி தினகரன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “கடந்த 10 தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது. திருநெல்வேலியில் அதிமுக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும்.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு வலுவான கூட்டணியாக அமையும். தற்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம்” என்று அவர் கூறினார்.

#westandforwomenharassment பேனரை பார்த்து பெண்கள் ஷாக்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழக வெற்றி கழக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருப்பது சமூக வளைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில்,” உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்ல ஆசை தான்.

ஆனால் பாதுகாப்பே இல்லாமல் எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்வது. நாம் அனைவரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இந்த அரசை 2026-ல் வீட்டுக்கு அனுப்புவோம்” என பேசி இருந்தார்.

இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் வைத்த பேனர் தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. we stand against women harassment என்பதற்கு பதிலாக we stand for women harassment என ஆங்கில வாசகத்தோடு வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருக்கின்றனர். அதில் கையெழுத்திட வேண்டும் எனவும் பெண்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

சில படித்த பெண்கள் அதனை படித்து பார்த்துவிட்டு we stand against women harassment என்றால் தான் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் என்று அர்த்தம். we stand for women harassment என நீங்கள் பேனர் வைத்திருப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்பது போல இருக்கிறது என கூறி கையெழுத்திட மறுத்துவிட்டனர். தற்போது இந்த பேனர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

12 வயது மகளின் கதறலை கண்டுகொள்ளாத தாய்! தாயின் 3-வது கணவர் செய்த கொடூரம்..!

வீட்டில் தனியே இருந்த வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தாயின் 3-வது கணவர்.. 12 வயது மகளின் கதறலை கண்டுகொள்ளாத தாய்! ஒட்டுமொத்த நீலகிரி மாவட்ட மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து 2-வது திருமணம் செய்தார்.2-வது கணவருடன் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரையும் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரை அந்த பெண் மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெண் குழந்தைகள் தாய் மற்றும் வளர்ப்பு தந்தை என நான்கு பேரும் ஒன்று ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. கணவன் – மனைவி இருவருமே அந்த பகுதியில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இதனிடையே, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி, வளர்ப்பு தந்தை வேலையை முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் 12 வயது சிறுமி தனியாக இருந்த நிலையில், அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அத்துடன் இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்.

பிறகு வீட்டிற்குள் தன்னுடைய அம்மா வந்ததுமே, சிறுமி நடந்த விஷயத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். இதைக்கேட்ட தாய், சிறுமியிடம் இதனை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று மூன்றாவது கணவனின் செயலுக்கு துணைபோயுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமி, தன்னுடைய பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் முறையிட்டிருக்கிறார்.

அந்த ஆசிரியைதான், சிறுமியை வைத்து, உடனடியாக 1098 என்ற எண்ணில் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. சிறுமியிடமிருந்து புகார் வந்ததை அறிந்த, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட சிறுமியிடம் நேரடியாகவே இதுகுறித்து விசாரித்துள்ளனர். இதற்கு பிறகு குன்னூர் மகளிர் துறையினர், சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை மீது போக்சாவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், 3-வது கணவனுடன் சேர்ந்து, அந்த தாயும் இப்போது தலைமறைவாகி இயிருக்கிறார். எனவே, அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அதிகாரி வீட்டு வேலைகளுக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்..! பணம் கேட்டு மிரட்டல்..!

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயதான தாயை பராமரிக்க ஆள் தேவைப் பட்டுள்ளது. “தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வி என்கிற சூசையம்மாள் என்பவர், வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பி வைப்பது போன்ற பணிகளை செய்யும் “சன் லைட் ஹோம் கேர்”என்ற ‌ நிறுவனத்தில் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளி பகுதியை சேர்ந்த நளினி என்ற பெண்ணை மாதேஸ்வரன் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். மாதேஸ்வரன் வீட்டிலேயே நளினி தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நளினிக்கும், மாதேஸ்வரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த நளினி, மகேந்திரனுடன் தனிமையில் இருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவை “சன் லைட் ஹோம் கேர்” நிறுவனத்தின் உரிமையாளர் செல்விக்கு நளினி அனுப்பி உள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை மகேந்திரனுக்கு அனுப்பிய செல்வி, இந்த வீடியோ வெளியே வராமல் இருக்க வேண்டும் எனில் 5 லட்சம் ரூபாய் கேட்டு செல்வி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாதேஸ்வரன் 2 லட்சத்து 30ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது.பின்னர் மீதி பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் இதனால் செல்வி தொலைபேசியில் அழைத்தால் அதனை மாதேஸ்வரன் தவிர்த்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி அதன் வீடியோவை தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆம்பூர் பகுதி விமல் ராஜிக்கு அனுப்பி அவரிடம் பணம் கேட்கும்படி கூறியதன் காரணமாக விமல் ராஜ் மகேந்திரனுடைய வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார். இதனால் பயந்துபோன மாதேஸ்வரன் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நளினி, செல்வி மற்றும் விமல்ராஜ் 3 பேரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் 2 பெண்கள் உட்பட3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஃபஸ்ட் நைட்டில் கணவனுடன் தாம்பத்ய உறவுக்கு பதிலாக காதலனுடன் வீடியோ காலில் பேசிய பெண் ..!

காதலனுக்கு கசாயத்தில் விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த செய்தி பரபரப்பாக சமயத்தில் திருமணமான 25 -ஆவது நாளில் கணவருக்கு மனைவியே கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள கருவேப்பிலம்பாடியை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் கலையரசனுக்கு கடந்த ஜனவரி மாதம் 26 -ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கலையரசனுடன் முதலிரவுக்கு சென்ற போது காதலனுடன் வீடியோ கால் போட்டு ஷாலினி பேசியதாக தெரிகிறது. இதனால் கலையரசன் அதிர்ச்சி அடைந்து ஷாலினிக்கு புத்திமதி சொல்லி அனுப்புமாறு அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். பிறகு அந்த பெண்ணின் உறவினர்கள், எல்லாம் போக போக சரியாகிவிடும் என கூறி ஷாலினியை மீண்டும் கணவன் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் காதலனின் நினைவாகவே இருந்த ஷாலினி, கடந்த 20- ஆம் தேதி கலையரசனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கலையரசன் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஷாலினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலையரசனின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த கலையரசனின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

அந்த வாக்குமூலத்தில், ஜனவரி 26-ஆம் தேதி எனக்கு திருமணம் நடந்தது. ஜனவரி 25 -ஆம் தேதி அந்த மணப்பெண் விஷம் குடித்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த நாங்கள் என்னவென கேட்ட போது, “அப்பாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை” என மழுப்பினர். இதையடுத்து எனக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முதலிரவின் போது ஒரு பையனிடம் வீடியோ காலில் ஷாலினி பேசிக் கொண்டிருந்தார். உடனே நான், அது யார் என கேட்டேன். அது யாருமில்லை என மழுப்பிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

அதற்கு அடுத்த நாளும் இரவு 2 மணி வரை யாரோ ஒரு பையனிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அவருடைய சித்தப்பா, மாமா உள்ளிட்டோரிடம் போய் சொன்னேன். பிறகு நான் வீட்டிற்கு வந்ததும் அந்த பெண்ணிடம் நான் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. உடனே அந்த பெண்ணின் சித்தப்பாவும் மாமாவும், அந்த பெண்ணை அழைத்து புத்திமதி சொல்லி, இனி அந்த பையனுடன் பேசாதே என தெரிவித்தனர். அன்று முதல் என்னிடம் அந்த பெண் பேசவே இல்லை. எங்களுக்குள் தாம்பத்ய உறவும் நடக்கவில்லை. அந்த பெண், அந்த பையனுடன் போன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த நான் கோபமடைந்து ஏன் இது போல் செய்கிறாய் என கேட்டேன். அதற்கு அந்த பெண், நான் யாருடன் வேண்டுமானாலும் போன் பேசுவேன். இதை நீ கேட்கக் கூடாது என கூறினார்.

இதையடுத்து பெண்ணின் உறவினர்களை வைத்து இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து நடந்தது. இதனிடையே எனக்கு பெண் மீது சந்தேகமாக இருப்பதால் அவருடைய தாய் வீட்டிற்கு கொண்டு போய் விட்டுவிட்டு வந்துவிட்டேன். இதனால் பஞ்சாயத்தில் “பெண்ணை ஏன் தாய் வீட்டில் விட்டு வந்தாய், தாலி கட்டியதால் நீ தான் அந்த பெண்ணை வைத்து வாழ வேண்டும்” என்றார்கள். அதற்கு நான், “பெண்ணின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை, என்னை ஏமாற்றுகிறார், அதனால் அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்” என்றேன்.

இதையடுத்து அவர்கள் அதெல்லாம் முடியாது என கூறி பஞ்யாயத்து செய்து பெண்ணுடன் என்னை வாழ வைத்தார்கள். அப்போது என் தம்பியும் அப்பாவும் காவல் நிலையத்தில் இருந்து போன் போட்டார்கள். உடனே பஞ்சாயத்து செய்த அந்த பெண்ணின் உறவினர்கள் என் கழுத்தில் கத்தியை வைத்து என்னை மிரட்டினார்கள். காவல் நிலையத்திற்கு போனால் கொன்றுவிடுவோம் என்றார்கள். உடனே நானும், என் தம்பியிடம் ஒன்றும் பிரச்சினை இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டேன்.

இதையடுத்து பெண்ணை அவருடைய தாய் வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தேன். என்னிடம் அந்த பெண் சரியாக பேசவில்லை. உடனே அந்த பெண்ணின் சித்தப்பா அவருக்கு போன் செய்து, “மாப்பிள்ளைக்கு எல்லாமே தெரிந்துவிட்டது, அவரை உயிருடன் விட்டால் உன்னை கொன்றுவிடுவான்” என கூறியிருந்தார். இந்நிலையில் நான் இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு போன போது, அசதியாக இருந்ததால் பால் கொடுக்குமாறு கேட்டேன்.

அதற்கு அந்த பெண், பால் இல்லை, கூல்டிரிங்ஸ் இருக்கிறது என கூறி கொடுத்தார். நான் அந்த குளிர்பானத்தை குடித்த போது கசப்பாக இருந்தது. அதை கேட்ட போது ஷாலினி சமாளித்துவிட்டார். இதையடுத்து ஷாலினி போய் தூங்கிவிட்டார். நானும் படுத்துவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து , என்னை ஷாலினி எழுப்பி, “நான் கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து விட்டேன். என் மாமா, சித்தப்பா ஆகியோர் சொல்லித்தான் இப்படி செய்தேன். என்னை பற்றி எல்லா விஷயமும் உனக்கு தெரிந்து விட்டது. உன்னை கொன்றால்தான் நான் என் காதலனுடன் சந்தோஷமாக வாழ முடியும். அதனால் கூல்டிரிங்ஸில் மருந்து வைத்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ செத்து போயிடுவ” என அந்த பெண் சொன்னதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

உடனே அந்த பெண்ணின் உறவினர்களிடம் இதை சொன்னேன். அப்போது அவர்கள் என்னை குள்ளஞ்சாவடியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள். அங்கு நான் பிழைக்க மாட்டேன் என சொல்லிவிட்டதால், என்னை புதுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறினார்கள். என்னை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு போய்விட்டார்கள். என்னை என் தம்பி, அவருடைய மனைவி, என் அப்பா, அம்மா, என் தங்கை, என் தங்கை கணவர் உள்ளிட்டோர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனது இந்த நிலைக்கு முழு காரணம் என் மனைவியும் அவரை சேர்ந்தவர்களும் தான் என கலையரசன் வாக்குமூலம் அளித்தார்.

H.ராஜா: சீமான் வீட்டுக்குள் ஏன் போனீங்க… இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க..!

ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் பொய் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருப்பவர் சீமான். அதனால் அனாவசியமாக சீமானை இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க.. இது ரொம்ப தப்பு என H. ராஜா தெரிவித்தார். தஞ்சாவூரில் H. ராஜா இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.  அப்போது, சீமான் வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருவரை கைது செய்த காவல் ஆய்வாளரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீங்க நோட்டீஸை சர்வ் செய்வது என்றால் என்ன? நோட்டீஸை வீட்டில் ஒட்டிவிட்டுப் போனால் முடிந்துவிட்டது. ஆக ஒட்டிவிட்டுப் போக வேண்டியதுதானே.. இதன் பின்னர் சீமான் வீட்டுக்குள் ஏன் போனீங்க? ஆகவே இந்த அரசாங்கம்.. ஈ.வெ. ராமசாமி நாயக்கரை சரியான முறையில் சீமான் அவர்கள் விமர்சித்து வருகிறார். இதனால் ஈ.வெ. ராமசாமியின் கைக்கூலிகள் இந்த மாதிரி மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

சீமான் மீதான புகார் என்பது நீதிமன்றத்தில் இருக்கிறது.. சட்டப்படி நீதிமன்றம் நடக்கட்டும். ஆனால் எல்லோரது கவனத்துக்காகவும் சொல்கிறேன். உச்சநீதிமன்றம், உடலுறவு தொடர்பாக அண்மையில் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது; இருவரும் பரஸ்பரம் ஒப்புதலுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் அல்ல என்பது தீர்ப்பு. அதனால் சட்டம் அதன் கடமையை செய்யட்டும். ஆய்வாளர் எதற்காக இப்படி செயல்பட வேண்டும்? ஆகவே இந்த அரசாங்கம், அவங்களால் தாங்க முடியவில்லை. ஈவெ ராமசாமி நாயக்கரின் பொய் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருப்பவர் சீமான். அதனால் அனாவசியமாக சீமானை இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க.. இது ரொம்ப தப்பு.

தமிழ்நாட்டில் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க காரணம் யார்? ஆட்சிக்கு வந்த உடன் இந்த திராவிடியன் ஸ்டாக் என்ன வேலை செஞ்சீங்க? அனைத்து பள்ளிக் கூடங்களிலும் நீதி போதனை வகுப்புகளை கேன்சல் செய்தீங்க.. அறம் செய்ய விரும்பு என்பதை நீக்கினீர்கள்.. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை எடுத்தீங்க.. தீய சக்திகள் ஆட்சிக்கு வந்த காரணத்தால் 1967-ல் இருந்து சமூக நன்னடத்தை கெட்டுப் போய்விட்டது. திராவிடியன் ஸ்டாக்கை தமிழ்நாட்டில் இருந்து அடித்து விரட்டாமல் பலாத்கார வன்முறைகளை நிறுத்த முடியாது என H.ராஜா தெரிவித்தார்.