கல்யாணத்துக்கு வாங்க..! ‘ கல்யாண பரிசா உங்களின் ஓட்டு போடுங்க…’

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 3 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், மேதக் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக ரகுநந்தன் ராவ் களம் இறங்கி உள்ளார். இவரது ஆதரவாளர்களில் ஒருவரான சுரேஷ் நாயக்கின் தம்பியின் திருமணம் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான திருமண பத்திரிகையில் பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் புகைப்படத்தை அச்சிட்டதோடு, அதன் கீழே ‘திருமண பரிசே உங்களின் ஓட்டு தான்’ என சுரேஷ் நாயக் அச்சிட்டுள்ளார். இது குறித்து சந்திரய்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காடிபல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Prakash Raj: ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மோடி பருப்பு வேகாது..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 3 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பீர்கள்அதை எல்லாம் குழந்தைகள் அதிகம் வைத்துள்ளவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். இதுதேவைதானா?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் இதையே சொல்கிறது முன்பு மன்மோகன் சிங் ஆட்சி இருந்தபோதும் இதையே சொன்னார்கள் இதுதான் நகர்ப்புற பயங்கரவாதம்இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலி இருக்காது” இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் பேசியது குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் ”10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை திரித்து அதை இஸ்லாமியர்கள் என மோடி பேசும்போதே அவரின் திட்டம் நமக்கு தெரிகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் போதும், கர்நாடகாவில் இருக்கும் போது மோடி இப்படி பேச மாட்டார். அங்கு இவரது பருப்பு வேகாது. ஆனால் வடமாநிலங்களில் இப்படி பேசுவார். ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மாதிரி ஒரே நாடு ஒரே மொழி என பேசும் மோடிக்கு 2 நாக்குகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொறு கருத்துக்களை பேசுகிறது. இவை எல்லாம் நாம் தலைகுனிய வேண்டிய அசிங்கமான விஷயம்” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

Mamata Banerjee: என்ன சாப்பிட வேண்டுமென பாஜக எப்படி முடிவு செய்யும்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினார். கோழி முட்டை, இறைச்சியை ஏன் சாப்பிட வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும்.

இட்லி, தோசை மற்றும் பிற மாநிலங்களின் உணவை நீங்கள் சாப்பிடக் கூடாது என நாங்கள் கூற முடியுமா? நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 80% பேர் மாமிசம் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். இந்நிலையில், பாஜக ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மாமிச கடைகள் மூடப்படுவதாக கேள்விப்பட்டேன்.

நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு கட்சி, ஒரு நபர் எப்படி முடிவு முடிவு செய்ய முடியும்? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

Tejashwi Yadav: ‘‘பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம். அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை…!

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், “பாஜக தலைவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பேசுகின்றனர். இது பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம். அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை.” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

Sunita Kejriwal: ‘‘திகார் சிறையில் இன்சுலின் வழங்காமல் கெஜ்ரிவாலை கொல்ல சதி’’

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேசுகையில், “சிறையில் கெஜ்ரிவால் சாப்பிடும் ஒவ்வொரு சோறும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. குற்றத்திற்கான ஆதாரம் இல்லாமல் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தது சர்வாதிகாரம். கெஜ்ரிவாலையும், ஹேமந்த் சோரனையும் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமலேயே சிறையில் அடைத்துள்ளனர். இது ஒரு சர்வாதிகாரம். என் கணவரின் தவறு என்ன? நல்ல கல்வி, சுகாதார வசதிகளை வழங்கியதா?.

தேசபக்தி அவரது இரத்தத்தில் உள்ளது. அவர் ஒரு முன்னாள் ஐஐடி மாணவர். அவர் நினைத்திருந்தால் வெளிநாடு சென்றிருக்கலாம். ஆனால் அவர் தேசபக்திக்கு முன்னுரிமை கொடுத்தார். ஐஆர்எஸ் ஆக இருந்த அவர் பொது சேவை செய்ய பணியை ராஜினாமா செய்தார். தற்போது மக்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார்.

கெஜ்ரிவாலுக்கு அதிகார ஆசை இல்லை. அவர் நாட்டுக்கு சேவை செய்யவே விரும்புகிறார். என் கணவர் சிங்கம். சிறையில் இருக்கும்போதும் நாட்டைப் பற்றி அவர் கவலைப்படுகிறார். கெஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவரை கொல்ல விரும்புகிறார்கள்” எனசுனிதா கெஜ்ரிவால் பேசினார்.

Sanjay Singh: நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசும்போது, ​​ஒசாமா பின்லேடனும், கப்பர் சிங்கும் அகிம்சையைப் போதிப்பது போல் தெரிகிறது

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசும்போது, ​​ஒசாமா பின்லேடனும், கப்பர் சிங்கும் அகிம்சையைப் போதிப்பது போல் தெரிகிறது. ஊழலுக்கு எதிராகப் பேசுகிறார் நரேந்திர மோடி. ஆனால் ஹேமந்த் சோரன், கேஜ்ரிவாலை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார். இப்போது மோடி வாஷிங் பவுடர் வந்துள்ளது. அது உங்கள் ஊழல்கள் அனைத்தும் தூய்மையாக்கும்” என பேசினார்.

கர்நாடகாவில் லவ் ஜிகாத் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டு..!

கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத் தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃப‌யாஸ் நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து. ஹுப்ளி காவல்துறை ஃபயாஸை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், நேஹா முதலில் என்னை காதலித்தார். பின்னர் குடும்பத்தினரின் எதிர்ப்பால் பிரிந்து சென்றார். திருமணம் செய்ய மறுத்ததால் அவரை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏபிவிபி மாணவ அமைப்பினர், பாஜக, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர், நேஹா ஹிரேமத் கொலைக்குநீதி வேண்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் லவ் ஜிகாத் அதிகரித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Amit Shah: ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை மோடி கொண்டு வந்துள்ளார்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 40 தொகுதிகளை கொண்ட பிஹாரில் 5 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 5 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

பிஹாரில் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிரதமர் மோடி சாதி வெறியை அழித்து, ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பாடுபட்டுள்ளார். ஏழை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

இன்று லாலு பிரசாத் யாதவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து பாஜக மற்றும் ஜேடியு-க்கு எதிராக தேர்தலில் போட்டியிடுகின்றன. லாலு-ராப்ரி ஆட்சியில் பிஹார் கேங்ஸ்டர் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டது. இன்று லாலு காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எதிர்த்தது. அதோடு மண்டல் கமிஷன் அறிக்கையையும் எதிர்த்தது என்பதை நான் அவரிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஓபிசிகள் அனைவரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் நிதிஷ் முதல்வர் என்டிஏ கூட்டணிக்கு வந்து, முதல்வர் ஆனதுக்கு பிறகு பல கொடுமைகள் நிறுத்தப்பட்டன. நிதீஷ் குமார் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கியுள்ளார்.

ஆனால் இண்டியா கூட்டணி மீண்டும் அவர்களை ராந்தல் விளக்கு காலத்துக்கு இழுத்துச் செல்ல விரும்புகிறது. அதோடு ஓபிசிக்களை ஒடுக்க நினைக்கிறது.

மோடி நக்சலிசத்தை ஒழித்தார், பயங்கரவாதத்தை ஒடுக்கினார். ஓபிசி பிரிவை சேர்ந்த நரேந்திர மோடியை பாஜக தான் முதன்முதலாக பிரதமராக்கியது. ஒரு டீ விற்றவரின் மகனை பிரதமராக்கியுள்ளது. 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கியுள்ளோம். 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன, 10 கோடிக்கும் அதிகமான தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம்.” என அமித் ஷா உரையாற்றினார்.

Mamata Banerjee இதற்குதான் 7 கட்டமாக தேர்தலா…”

மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மால்டா மாவட்டத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது, “மத்தியில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். எனவே, தற்போதைய மக்களவைத் தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும். பா.ஜ.க.வின் ஆணையம் போல தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது. பா.ஜ.க.வின் தொண்டர்கள் போல மத்தியப் படையினர் பயன்படுத்தப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியுமா?

பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காகவே 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகளை நசுக்கி, அதன் மூலம் தன்னை நிலைநாட்டுவதில் பா.ஜ.க. நம்பிக்கை கொண்டுள்ளது. தேர்தல் ஆதாயத்துக்காக மக்களை பா.ஜ.க. பிளவுபடுத்துகிறது. பொது சிவில் சட்டத்தை அமலாக்குவது அக்கட்சியின் நோக்கம். இதன் மூலம் தங்களது சொந்த மதம், கலாச்சாரம், சடங்குகள் மீதான மக்களின் உரிமைகள் பறிபோகும்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Sharad Pawar: மோடி பா.ஜ.கவின் பிரதமர்..! இந்தியாவின் பிரதமர் அல்ல..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 5 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், அவுரங்காபாத் தொகுதியில் போட்டியிடும் மகா விகாஸ் அகாடி வேட்பாளர் சந்திரகாந்த கைரேவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதேபோல் ஜல்னா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண் காலேவை ஆதரித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, ” நான் பிரச்சாரத்திற்கு வரும் போது பிரதமர் மோடியின் பேச்சை கேட்டபோது அவர் நாட்டின் பிரதமர் அல்ல பா.ஜ.கவின் பிரதமர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடியும் பா.ஜ.கவும் நாட்டுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்?. ஆனால் இவர்கள் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும், ராகுல் காந்தியையும், என்னையும் விமர்சித்து வருகிறார்கள் என சரத்பவார் பேசினார்.