கர்நாடகாவில் கடன் பிரச்சினையால் தாய், சகோதரி மற்றும் சகோதரியின் மகனை கழுத்தை அறுத்துயைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த செய்தி ஒட்டுமொத்த பெங்களூரையும் அதிர வைப்பதாக இருக்கிறது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று பெரும் கடன் சுமையால் தற்கொலைக்கு முயன்றது. இதில் உயிரிழந்தவர்கள் ஆஷா மற்றும் அவரது மகள் வர்ஷிதா எனத் தெரிய வந்துள்ளது. வர்ஷிதாவின் சகோதரர் மோகன் கௌடா மற்றும் வர்ஷிதாவின் 11 வயது மகன் மயங்க் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்..
தங்கள் குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் கடன் அதிகமானதாலேயே வேறு வழியில்லாமல் மோகன் கௌடா தனது தாய், சகோதரி, சகோதரி மகனின் கழுத்தை அறுத்து பிறகு தானும் தற்கொலை முடிவை எடுப்பதாகச் சொல்லி வீடியோ பதிவு செய்து, அதை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதன் பிறகே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மோகன் கௌடா குடும்பத்தினர் இது போல தங்களுக்கு வீடியோவை அனுப்பியதால் பதறிய உறவினர்கள், இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வீடியோவை பார்த்த உறவினர்கள் சிலர் உடனே மோகன் கௌடா வீட்டிற்கு விரைந்தனர். இருப்பினும் கதவுகள் பூட்டியிருந்தது. இதையடுத்து பின்புற வாசல் வழியாக உறவினர்கள் நுழைந்துள்ளனர்.

நான்கு பேரும் இருந்த கோலத்தைப் பார்த்து ஒரு நொடி உறைய வைத்துவிட்டது. அதற்குள் தகவல் கிடைத்த காவல்துறையினரும், சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறையினர் அங்கு வந்தபோதே ஆஷா மற்றும் வர்ஷிதா உயிரிழந்திருந்தனர். இதையடுத்து அவர்களை உடலைக் கைப்பற்றிய பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த மோகன் கௌடா மற்றும் மயங்க் ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பினர்..
₹5 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான உகாதி மற்றும் தீபாவளி சீட்டுகளை மோகன் கௌடா நடத்தி வந்துள்ளார். ஆடம்பர வாழ்க்கை முறையில் மோகம் கொண்டிருந்த மோகன் கௌடா குடும்பத்தினர் இல்லாத பணத்தைக் கடன் வாங்கி செலவழிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மளமளவெனக் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் இந்த மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.