கொட்டும் மழையிலும் இளைய கலைஞர் வெளியில் வரும் வரை காத்திருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் திறந்தவெளி காரில் நின்று தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார். தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் இளைய கலைஞர் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் இளைய கலைஞர் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.
அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு இளைய கலைஞர் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இளைய கலைஞருக்கு எதிராக தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில்இளைய கலைஞரை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் காலை சுமார் 10.50 மணியளவில் கைது செய்தனர். வீட்டுக்குள் காவல்துறையினர் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சாலை மார்க்கமாக வேனில் அழைத்து செல்லப்பட்ட இளைய கலைஞரை மாலை 7.45 மணியளவில் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்திற்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது. விசாரணை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு பெற்றதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனால் அங்கு குவிந்து இருந்த திமுகவினர் விசில் அடித்து உற்சாகத்துடன் உதயநிதியை வரவேற்றனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் திறந்தவெளி காரில் வந்து தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார். கொட்டும் மழையிலும் உதயநிதி வெளியில் வரும் வரை காத்திருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்துவிட்டு மீண்டும் காரில் சென்னை புறப்பட்டுள்ளார். செங்கிப்பட்டி காவல் நிலையத்தில், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் காவல்துறையினர் 1 மணி நேரத்திற்கும் மேலாக உதயநிதியிடம் விசாரணையானது நடைபெற்றது.
செங்கிப்பட்டி காவல் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளனர். மழை பெய்து வரும் நிலையில் உதயநிதி விடுவிக்கப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று கூறி திமுகவினர் அங்கேயே காத்திருந்தனர். திமுகவினர் சிலர் பேரிகார்டுகளை நகர்த்திவிட்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திமுகவினர் தொடர்ந்து அங்கு குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து விசாரணை இரவு 8.10 மணி வரை நடைபெற்ற நிலையில் இளைய கலைஞர் விடுவிக்கப்பட்டார்.

இளைய கலைஞர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை பார்த்து உற்சாகத்தில் தொண்டர்கள் விசில் அடித்தும் இளைய கலைஞரருக்கு வாழ்க என கோஷம் எழுப்பியும் வரவேற்றனர். அப்போது இளைய கலைஞர் திறந்தவெளி காரில் வந்து தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார். கொட்டும் மழையிலும் இளைய கலைஞர் வெளியில் வரும் வரை காத்திருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்துவிட்டு மீண்டும் காரில் சென்னை புறப்பட்டுள்ளார்.