சென்னை நீலாங்கரையில் இன்று காலை கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேனில் தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரது வாகனம் திடீரென திரும்பி திருச்சி நோக்கி செல்கிறது. தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.
அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து உதயநிதியை கைது செய்வதாக கிருத்திகாவிடம் காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவர், உதய் குளித்துக் கொண்டிருக்கிறார், சிறிது நேரம் பொருங்கள் என்றார். அதற்கு காவல்துறையினரே காலை 7 மணி முதல் நாங்கள் காத்திருக்கிறோம், இன்னும் எத்தனை மணி நேரம்தான் காத்திருப்பது என கேள்வி எழுப்பினர்.
உதயநிதியை கைது செய்ய போவதை அறிந்த திமுகவினர் அவரது வீட்டிற்கு படையெடுத்தனர். அது போல் முன்னாள் அமைச்சர்களும் உதயநிதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்களும் காவல்துறையினருடன் தஞ்சாவூருக்கு உதயநிதியை அழைத்துச் செல்வதாக கூறும் நீங்கள் காலை கடனை கூட கழிக்கவிடாமல் அவரை அழைத்துச் செல்ல பார்க்கிறீர்கள் என கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கிருந்த கிருத்திகாவிடம், உதயநிதி “போய்ட்டு வரேன்” என கைகளை அசைத்து போனில் பேசுவதாகவும் சைகையில் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த இன்பநிதியை உதயநிதி கட்டி அணைத்தார். பின்னர் கிருத்திகாவும் இன்பநிதியும் உதயநிதியை தைரியமாக இருக்குமாறு சொன்னார்கள். இதையடுத்து சிரித்த முகத்துடன் உதயநிதி வெளியே சென்றார்.