சென்னை நீலாங்கரையில் இன்று காலை கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேனில் தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரது வாகனம் திடீரென திரும்பி திருச்சி நோக்கி செல்கிறது. தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார்.
அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டுக்குள் காவல்துறையினர் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை நீலாங்கரையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, வழியாக புதுவை, கடலூர் சென்று அங்கிருந்து வடலூர், சேத்தியாத்தோப்பு வழியாக போலீஸ் வாகனம் செல்லும். அங்கிருந்து அணைக்கரை, சோழபுரம், கும்பகோணம் சென்று இறுதியாக தஞ்சாவூர் கிட்டதட்ட 314 கி.மீ. தூரத்தை சென்றடைய குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். உதயநிதி கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழிகளில் உதயநிதி வேன் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் திட்டம் இல்லை என்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் கூறிய நிலையில், அவரை விசாரணைக்கு பிறகு இன்றே விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட உள்ள காவல் நிலையம் முன்பாக நூற்றுக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளனர். திமுகவினர் தொடர்ந்து குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. காவல்துறையினர் பேரி கார்டுகளை அமைத்து பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
தஞ்சாவூரில் திமுகவினர் குவிந்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினிடம் திருச்சியில் விசாரணை நடத்தப்பட உள்ளதா? என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தஞ்சாவூர் நோக்கி சென்ற வாகனம் திடீரென திருச்சி நோக்கி சென்றுள்ளது. அதாவது அரை மணி நேரத்தில் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம் சென்றடைய இருந்தது. ஆனால் அங்கு திமுகவினர் அதிகளவில் திரண்டு இருந்ததால் திருச்சிக்கு அந்த வாகனம் திரும்பியுள்ளது. திருச்சி அருகே உள்ள செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.