மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4-வது கட்ட பயணத்தை நேற்றைய முதல் நாள் மதுரையில் இருந்து தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாலை 5 மணிக்கு மேலூர் பஸ் நிலையத்திலும், மாலை 6.30 மணிக்கு ஒத்தக்கடை பகுதியிலும், இரவு 8 மணிக்கு புதூர் பஸ் நிலையத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தமிழ்நாடு குறவர் பேரவை தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் குறவன் சித்தனார் ஏசி மலைக்குறவன் எஸ்டி வேடுவர் பிசி டிஎன்சி 27 குறவர்கள் அனைவரையும் ஒரே பெயரில் ஒரே பட்டியலில் கொண்டுவர வேண்டும், பெரும்பான்மையான குறவர்கள் SC பட்டியலில் இருப்பதால் 44 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை தமிழ்நாடு குறவர்கள் பேரவைக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.