திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் குமாரனந்தபுரம் காமராஜர் தெருவில் வசித்து வந்த இந்து முன்னணியில் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவர் பாலமுருகன். இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாலமுருகன் பிணமாக கிடந்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த திருப்பூர் மாநகர காவல்துறை அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.