கணவனை ஏமாற்றி 2 கல்லூரி மாணவர்களுடன் புதுமணப் பெண் உல்லாசமாக இருந்ததை அலைபேசியில் வீடியோ எடுத்து தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அந்த பெண் இறந்தா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம பதேபூர் மாவட்டம் மோகன்பூர் கிராமத்தை சேர்ந்த சச்சின் சிங். அதே கிராமத்தை சேர்ந்த ஸ்வேதா சிங் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்துக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சச்சின் சிங் மற்றும் ஸ்வேதா சிங் ஆகியோர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறினர். அதன்பிறகு இருவரும் குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் தொழிற்சாலையில் வேலை செய்தனர். அதன்பிறகு இருவரும் உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு திரும்பிய நிலையில் மகாராஜ்பூரில் அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். சச்சின் சிங் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தினார். அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர்.
இதற்கிடையே ஸ்வேதா சிங்கின் வங்கி கணக்கிற்கு அதிகளவில் பணம் வந்து விழுந்தது. இதுபற்றி சச்சின் சிங் கேட்டபோது தனது பாட்டி அனுப்பி வைப்பதாக ஸ்வேதா சிங் கூறினார். ஆனால் சச்சின் சிங் நம்பவில்லை. ஸ்வேதா சிங்கிற்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகித்தார். அதாவது அவர்கள் வசித்து வரும் வீட்டின் அருகே இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்களும் சச்சின் சிங்கின் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி படித்து வந்தனர். இந்த கல்லூரி மாணவர்களுடன் ஸ்வேதா சிங்கிற்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சச்சின் சிங் சந்தேகித்தார். இதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று சச்சின் சிங் நினைத்தார்.
இதனால் சம்பவத்தன்று இரவில் நண்பர்களுடன் ‛பார்ட்டி’ உள்ளது. இதனால் வீட்டுக்கு இரவில் வரமாட்டேன் என்று தனது மனைவி ஸ்வேதா சிங்கிடம் கூறினார். இதனை ஸ்வேதா சிங்கும் நம்பினார். ஆனால் சச்சின் சிங் நள்ளிரவில் வீடு திரும்பினார். அப்போது மனைவி ஸ்வேதா சிங் வீட்டு உள்ளே 2 மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்தது அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து இருப்பதை தனது அலைபேசியில் வீடியோவாக எடுத்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்வேதா சிங், அந்த மாணவர்களை வைத்து கணவர் சச்சின் சிங்கை தாக்கினார். இந்த தகராறு பற்றி உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்ட காவல்துறையினர் விரைந்து சென்று சச்சின் சிங், அவரது மனைவி ஸ்வேதா சிங் மற்றும் 2 மாணவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது சச்சின் சிங், இந்த பிரச்சனை பற்றி தனது மனைவியிடம் பேசி தீர்த்து கொள்வதாக கூறினார். இதையடுத்து காவல்துறையினர் சச்சின் சிங் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா சிங் ஆகியோரை விடுவித்தனர். மாறாக இருமாணவர்களை காவல் நிலையத்திலேயே வைத்திருந்தனர். இதையடுத்து வீடு திரும்பிய ஸ்வேதா சிங், அந்த இருவரையும் விடுவிக்கும்படி காவல்துறையினரிடம் கூறும்படி சச்சின் சிங்கிடம் கூறினார்.
ஆனால் சச்சின் சிங் மறுப்பு தெரிவிக்க, கோபமான ஸ்வேதா சிங், இருவரையும் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரிந்து சென்று அவர்களுடன் வாழ்க்கை நடத்துவதாக மிரட்டினார். இது சச்சின் சிங்கிற்கு கடும் கோபத்தை ஏற்பட இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சச்சின் சிங் தனது மனைவி ஸ்வேதா சிங்கின் கழுத்தை நெரிக்க சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். அதன்பிறகு சச்சின் சிங் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.