19-வது ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் நேற்று பிருந்தாவனத்தில் உள்ள ஆன்மீகத் தலைவர் பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.
இந்தத் தம்பதியினர் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜின் ராதா கேலி குஞ்ச் ஆசிரமத்திற்குச் சென்று அவரது ஆசிகளைப் பெற்றனர். ஆன்மீக குருவைச் சந்தித்த பிறகு விராட்டும் அனுஷ்கா ஷர்மாவும் ஆசிரமத்திலிருந்து வெளியே வருவதைக் காட்டும் அவர்களின் வருகை தொடர்பான பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.