சும்மா சீன் போட்டு.. ரீல்ஸ் போட்டு செல்ல முடியாது. போட்டோ சூட் மட்டும் செய்து சென்றுவிடலாம் என நினைக்கிறார்கள். ரீல் ஹீரோ விஜய்..!!...
R Rajaram
இளமையிலிருந்தே நாட்டுபற்றுள்ளவனாக வளர்ந்த நான் நாடு பலத் துறைகளில் பின்னடைவில் உள்ளதைக் கண்டு நாட்டிற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று, அன்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பெறுப்பை ஏற்றேன். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது அரசியல் என்பது ஒரு… …. வேண்டாம் எல்லோருக்கும் தெரியும். அதனால் எந்த பணியும் செய்யாமலிருந்த நான் 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “இந்தியா ஃபஸ்ட்” மாத இதழின் ( INDIA FIRST TAMIL MONTHILY ) முதல் பிரதி வெளியீட்டில் அதன் அடிமட்ட தொண்டன் பொறுப்பிலிருந்து விலகிவதாக தெரிவித்தேன்.
அன்றைய முதல் பிரதியில், நாம் 21-ஆம் நூற்றாண்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற்றம் கண்டு ஒளிமயான எதிர் காலத்தை உருவாக்க வேண்டுமென்றால் இளைய தலைமுறையினர் சிந்தனை வளமும், செய்யத்தகு ஆற்றலும் ஆக்க சக்திக்குப் பயன்பட வேண்டும். அப்போதுதான் நன்மைகள் விளையும், நடுவளம் பெரும் இந்தியா ஃபஸ்ட் என்று அனைத்துத் துறைகளிலும் நாம் மார்தட்டிக் கொள்ளமுடியும்.
அதைவிடுத்து நம்முடைய எண்ணங்களும் செயல்களும் தீயசக்திகளாய் விசுவரூபமெடுத்து அழிவு சக்திக்குப் பயன்படும்போது நாட்டுப்பற்று குறையும், பிரிவினைவாதம் மேலோங்கும்; வன்முறை, தீவிரவாதம் தலைவிரித்தாடும். அதன் நச்சுவேர்கள் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைச் சீரழிக்கும். ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடி நாட்டின் வலிமை என்ற தூண்களை அசைத்துப்பார்க்கும் நாடு பின்னடைவை நோக்கிக் செல்லும் இதை வளர்ந்து வரும் இளையதலைமுறையினருக்கு நாம் எடுத்துச் சொல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இதற்கு காரணம்..!? கடந்த காலமும், நிகழ்காலமும் நமக்குப் பலவிதமான அச்சுறுத்தல்களைத் தந்திருக்கின்றன; தந்து கொண்டிருக்கின்றன. இன்று ஆக்கபூர்வமான செயல்களை நோக்கி அடியெடுத்து வைக்காமல் இளைஞர்களின் பயணம் வேறுதிசை நோக்கி சென்று என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவர்களைச் சரியானபாதைக்கு அழைத்துச் செல்கின்ற திசைகாட்டும் கருவியாகச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்று நாம் இருக்கின்றோம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பரந்த சிந்தனை நோக்கோடு மனிதநேயத்தின் மகத்துவத்தை உலகறியச் செய்த நாடு நம்நாடு. ஆனால், இன்று நாம் சாதி, மத இன உணர்வுகளால் இரணகளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
-என உரக்கப் பாடியவர் “மகாகவி பாரதி. ஆனால், இன்று கல்வி என்பது கடை வியாபாரக்காகிவிட்டது.
காசில்லை என்றால் கல்விக் கண் திறக்காது ஏழைகளுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்குத் தூண்களாய் நிற்க வேண்டிய துறைகள் அனைத்திலும் லஞ்சமும், ஊழலும் பல்கிப் பெறுகிச் சீர்கேடுகளால் செல்லரித்திக் போயிருக்கின்றன. காலத்தின் விரயத்தை மட்டுப்படுத்துகின்ற தகவல் தொடர்பு சாதனங்களும் மற்றும் தொலைக்காட்சி சேனல்களும் இளைய தலைமுறையை திசை திருப்பிவிடுகின்ற காரியத்தில் தான் மும்முரம் காட்டுகின்றனவே தவிர அவர்களது சிந்தனை வளத்திற்குத் தீனிபோடுகின்ற வகையில் காரியமற்றவில்லை.
அடுத்து அரசியல் அமைப்பில் அங்கம் வகிப்பர்கள் தொண்டுள்ளமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்களாக இருந்தால்தான் மக்களுக்குச் சிறந்த முறையில் செவ்வனே பணியாற்றமுடியும். ஆனால், இன்று அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது. மேலும் அரசியலில் அங்கம் வகிப்பவர்கள் சுயநலவாதிகளாகத் தங்களை மாற்றிக் கொண்டுவிட்டனர். இதற்கு மேல் வன்முறை கலாச்சாரம் அரசியலை ஆட்டிப் படைக்கின்றது. இதனால் நல்லவர்களும், வல்லுநர்களும் அரசியலை விட்டு ஒதுங்கிப் போய்க்கொண்டுள்ளனர்.
அடுத்து விளையாட்டுக்கள் மீதான வணிகமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கம், திறமையான சாதாரண வீரர்களை விட பண பலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள், காஸ்ட்லி பயிற்சி முகாம்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் ஆகியவை விளையாட்டை அடித்தட்டு மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி, ஒரு பணக்கார வர்க்கத்தின் கேளிக்கையாக மாற்ற விளையாட்டு வீரமில்லா பணக்காரவீட்டு களியாட்டமாகி விட்டது.
இப்படி அரசியல், கல்வி, விளையாட்டு, தொழில்வளர்ச்சி மற்றும் விவசாயம் என்று எந்த துறையை நாம் எடுத்தாலும் தீய சக்திகளின் ஆதிக்கமே மேலோங்கி நின்று நல்லகாரியங்கள் நடைபெறுவதற்குத் தடைக்கற்களாய் நிற்கின்றன. ஆகையால் அனைத்துத் துறைகளிலும் இருக்கின்ற தீயவைகளைச் சுட்டிக்காட்டிச் சுட்டெரித்து நல்லவைகளுக்குப் புகழாரம் சுட்டுகின்ற கடமையை இந்தியா ஃபஸ்ட் மாத இதழ் நிச்சயம் செய்யும்.
“நாடென்ன செய்தது நமக்கு என்பதை விட நாமென்ன செய்தோம் அதற்கு!” என்று வளரும் இளைய சமுதாயத்தினரிடையே சிந்தனையைத் தூண்டிவிட்டு எழுச்சியை உருவாக்கின்ற இதழாக இந்தியா ஃபஸ்ட் கண்ணுங்கருத்துமாக செயல்படும்.
தசரத மன்னன் 3 திருமணம் செய்தாரே. அதுபோல் தான் இதுவும் என்று 3 சகோதரிகளை ஒரே நேரத்தில் கேமராமேன் ஒருவரை திருமணம் செய்து...
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கியுள்ளதாக புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த...
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் என்ஐடி கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெளி மாவட்டம், வெளி மாநிலம்...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண், நேற்று ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில்,...
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரில் விளையாடுகிறது. ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல்...
அரசை, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது என்றும் சமூகத்திற்கு இடையே பகை, வெறுப்பை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது என்றும் ஜனநாயகத்தில்...
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் சிறை ஊழியர்களின் கொடூரத் தாக்குதலால் பலி தற்போது தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம் நிகழ்ந்துள்ளது. இன்னும்...
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்...
இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம்...