சமீபத்தில் முதல்வர் விஜய் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த விழிப்புணர்வு வீடியோவில் முதல்வரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த சிலுவை தான் இவ்வளவு...
R Rajaram
இளமையிலிருந்தே நாட்டுபற்றுள்ளவனாக வளர்ந்த நான் நாடு பலத் துறைகளில் பின்னடைவில் உள்ளதைக் கண்டு நாட்டிற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று, அன்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பெறுப்பை ஏற்றேன். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது அரசியல் என்பது ஒரு… …. வேண்டாம் எல்லோருக்கும் தெரியும். அதனால் எந்த பணியும் செய்யாமலிருந்த நான் 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “இந்தியா ஃபஸ்ட்” மாத இதழின் ( INDIA FIRST TAMIL MONTHILY ) முதல் பிரதி வெளியீட்டில் அதன் அடிமட்ட தொண்டன் பொறுப்பிலிருந்து விலகிவதாக தெரிவித்தேன்.
அன்றைய முதல் பிரதியில், நாம் 21-ஆம் நூற்றாண்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற்றம் கண்டு ஒளிமயான எதிர் காலத்தை உருவாக்க வேண்டுமென்றால் இளைய தலைமுறையினர் சிந்தனை வளமும், செய்யத்தகு ஆற்றலும் ஆக்க சக்திக்குப் பயன்பட வேண்டும். அப்போதுதான் நன்மைகள் விளையும், நடுவளம் பெரும் இந்தியா ஃபஸ்ட் என்று அனைத்துத் துறைகளிலும் நாம் மார்தட்டிக் கொள்ளமுடியும்.
அதைவிடுத்து நம்முடைய எண்ணங்களும் செயல்களும் தீயசக்திகளாய் விசுவரூபமெடுத்து அழிவு சக்திக்குப் பயன்படும்போது நாட்டுப்பற்று குறையும், பிரிவினைவாதம் மேலோங்கும்; வன்முறை, தீவிரவாதம் தலைவிரித்தாடும். அதன் நச்சுவேர்கள் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைச் சீரழிக்கும். ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடி நாட்டின் வலிமை என்ற தூண்களை அசைத்துப்பார்க்கும் நாடு பின்னடைவை நோக்கிக் செல்லும் இதை வளர்ந்து வரும் இளையதலைமுறையினருக்கு நாம் எடுத்துச் சொல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இதற்கு காரணம்..!? கடந்த காலமும், நிகழ்காலமும் நமக்குப் பலவிதமான அச்சுறுத்தல்களைத் தந்திருக்கின்றன; தந்து கொண்டிருக்கின்றன. இன்று ஆக்கபூர்வமான செயல்களை நோக்கி அடியெடுத்து வைக்காமல் இளைஞர்களின் பயணம் வேறுதிசை நோக்கி சென்று என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவர்களைச் சரியானபாதைக்கு அழைத்துச் செல்கின்ற திசைகாட்டும் கருவியாகச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்று நாம் இருக்கின்றோம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பரந்த சிந்தனை நோக்கோடு மனிதநேயத்தின் மகத்துவத்தை உலகறியச் செய்த நாடு நம்நாடு. ஆனால், இன்று நாம் சாதி, மத இன உணர்வுகளால் இரணகளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
-என உரக்கப் பாடியவர் “மகாகவி பாரதி. ஆனால், இன்று கல்வி என்பது கடை வியாபாரக்காகிவிட்டது.
காசில்லை என்றால் கல்விக் கண் திறக்காது ஏழைகளுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்குத் தூண்களாய் நிற்க வேண்டிய துறைகள் அனைத்திலும் லஞ்சமும், ஊழலும் பல்கிப் பெறுகிச் சீர்கேடுகளால் செல்லரித்திக் போயிருக்கின்றன. காலத்தின் விரயத்தை மட்டுப்படுத்துகின்ற தகவல் தொடர்பு சாதனங்களும் மற்றும் தொலைக்காட்சி சேனல்களும் இளைய தலைமுறையை திசை திருப்பிவிடுகின்ற காரியத்தில் தான் மும்முரம் காட்டுகின்றனவே தவிர அவர்களது சிந்தனை வளத்திற்குத் தீனிபோடுகின்ற வகையில் காரியமற்றவில்லை.
அடுத்து அரசியல் அமைப்பில் அங்கம் வகிப்பர்கள் தொண்டுள்ளமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்களாக இருந்தால்தான் மக்களுக்குச் சிறந்த முறையில் செவ்வனே பணியாற்றமுடியும். ஆனால், இன்று அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது. மேலும் அரசியலில் அங்கம் வகிப்பவர்கள் சுயநலவாதிகளாகத் தங்களை மாற்றிக் கொண்டுவிட்டனர். இதற்கு மேல் வன்முறை கலாச்சாரம் அரசியலை ஆட்டிப் படைக்கின்றது. இதனால் நல்லவர்களும், வல்லுநர்களும் அரசியலை விட்டு ஒதுங்கிப் போய்க்கொண்டுள்ளனர்.
அடுத்து விளையாட்டுக்கள் மீதான வணிகமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கம், திறமையான சாதாரண வீரர்களை விட பண பலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள், காஸ்ட்லி பயிற்சி முகாம்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் ஆகியவை விளையாட்டை அடித்தட்டு மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி, ஒரு பணக்கார வர்க்கத்தின் கேளிக்கையாக மாற்ற விளையாட்டு வீரமில்லா பணக்காரவீட்டு களியாட்டமாகி விட்டது.
இப்படி அரசியல், கல்வி, விளையாட்டு, தொழில்வளர்ச்சி மற்றும் விவசாயம் என்று எந்த துறையை நாம் எடுத்தாலும் தீய சக்திகளின் ஆதிக்கமே மேலோங்கி நின்று நல்லகாரியங்கள் நடைபெறுவதற்குத் தடைக்கற்களாய் நிற்கின்றன. ஆகையால் அனைத்துத் துறைகளிலும் இருக்கின்ற தீயவைகளைச் சுட்டிக்காட்டிச் சுட்டெரித்து நல்லவைகளுக்குப் புகழாரம் சுட்டுகின்ற கடமையை இந்தியா ஃபஸ்ட் மாத இதழ் நிச்சயம் செய்யும்.
“நாடென்ன செய்தது நமக்கு என்பதை விட நாமென்ன செய்தோம் அதற்கு!” என்று வளரும் இளைய சமுதாயத்தினரிடையே சிந்தனையைத் தூண்டிவிட்டு எழுச்சியை உருவாக்கின்ற இதழாக இந்தியா ஃபஸ்ட் கண்ணுங்கருத்துமாக செயல்படும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் தோல்வி மற்றும் உட்கட்சி மோதல்களைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக அமைப்பு ரீதியான அதிரடி...
கோயம்புத்தூர் மாவட்டம், லிட்டில் ஊட்டி என்று அழைக்கப்படும் கோவைப்புதூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 4-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தவர்...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வசதியாக வாழ முடிவெடுத்த பெண் ஒருவர் தனது கணவரின் படுக்கையில் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்று நாடகமாடிய சம்பவம்...
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே தன்னை புறக்கணிப்பதாகவும், கட்சி நிர்வாகிகள் தன்னுடன் தொடர்பு கொண்டால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டதாகவும் தவெக...
பெண் ஜிம் பயிற்சியாளருக்கு மயக்க மருந்து கொடுத்து கணவன் பாலியல் பலாத்காரம் செய்தபோது மனைவி வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.50 லட்சம் பணம்...
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிக்கும் துஷ்ட சக்தியின் ஆட்சி!!
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிக்கும் துஷ்ட சக்தியின் ஆட்சி!!
‘கோடிகளில் பணம் பெற்றோம், கொடுத்த கால்ஷீட்படி நடித்துக் கொடுத்தோர், படம் ஓடினாலும் – ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உச்சத்தைத்...
விஜய் ரசிகர் மன்றம், கட்சி என 20 ஆண்டுகளாக உழைத்த என் மகனை ஏன் கூப்பிடலை என கேட்டு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்...
கணவரிடம் கோயிலுக்கு போகலாம் எனக்கூறி கோயிலுக்கு சென்ற மனைவி தனது கள்ளக்காதலனை வரவழைத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை...
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், வானூர், செஞ்சி உள்ளிட்ட 20 பேர் கொண்ட நீதிமன்றங்களில் தவெக அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் நேற்று முன்தினம்...