தம்பி நீங்கள் முதல் கால் வைக்கும் போதே எதிராளிகளை குறைத்து மதிப்பிடவே கூடாது. திமுக, 75 வருட கட்சி. நீங்கள் இப்ப தான் லாலிபாப் சாப்பிடுகிர ஃபஸ்ட் இயர் பேபி என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் ஆட்சியர் அலுவலகம் முதல் கோட்டை மைதானம் வரை பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ரோடு ஷோ முடிந்த பின்பு பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.
அப்போது, பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இன்றைக்கு யாரெல்லாமோ 5 முனை போட்டி என்கிறார்கள். விஜயகாந்தும் சினிமாவில் இருந்து வந்தவர் தான், நான் இல்லையென்று சொல்லவில்லை. அதுமாதிரி இன்றைக்கு ஒரு தம்பி வந்திருக்கார். அவர் முதலில் நிரூபிக்கட்டும். சினிமாவில் இருந்து வந்தவர் அண்ணன் கமல்ஹாசன் இருக்கிறார், விஜயகாந்த் இருந்தார் என எவ்வளவோ பேர் இருந்தார்கள். அது போல தான் தம்பியும் வந்திருக்கிறார்.
நீங்கள் முதல் கால் வைக்கும் போதே எதிராளிகளை குறைத்து மதிப்பிடவே கூடாது. விஜயகாந்த் எப்படி துணிந்து தனித்து களம் கண்டு 2006-இல் தேர்தல், 2009-இல் 11 இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்களை சந்தித்து தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தாரோ அது போல் நீங்கள் உங்கள் வாக்கு வங்கியை நிரூபியுங்கள்.
அதற்கு பிறகு இரண்டு பேருக்கு தான் இங்கே போட்டி என்ற டயலாக்கை நீங்கள் பேசணும் தம்பி. இல்லையென்றால் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக, 75 வருட கட்சி. நீங்கள் இப்ப தான் லாலிபாப் சாப்பிடுகிர ஃபஸ்ட் இயர் பேபி. யூ ஆர் நாட் எ ஹீரோ, யூ ஆர் எ லிட்டில் பாய் இன் பாலிட்டிக்ஸ் (You are a hero, You are a little boy in politics). அதனால் அரசியல் ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை.
அரசியல் வேறு சினிமா வேறு. அது ஒரு தொழில், இது சேவை. இது மக்களை அன்றாடும் நாம் நேசிக்க வேண்டும். களத்தில் இறங்கி மக்களுக்காக போராட வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு சும்மா கை காட்டுறது கிடையாது அரசியல். களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இருந்த தலைவர்கள் தான் அரசியலில் வென்றிருக்கிறார்கள்” என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார்.