திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஆட்சியராக பணியாற்றி வரும் சிவராசு நேற்று சேலத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்று விட்டு இரவில் மீண்டும் திருச்சிக்கு திருப்பினார். அப்போது இரவு 10.15 மணி அளவில் சேலம் அருகே தாசநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அந்த கார் சென்று கொண்டிருந்தபோது தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பியில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசைக்கு திரும்பியது.

இதனிடையே அந்த வழியாக வந்த ஆட்சியரின் கார் மீது மினி லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. விபத்தில் ஆட்சியர் சிவராசுவின் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இதில் கலெக்டர் ஆட்சியர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *