இருளர் சமூதாயத்தை சேர்ந்த பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பயனில்லை. ஆகையால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமை ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மனுக்களோடு வரும் மக்கள், மனுக்களை பதிவு செய்து, அதன் பிறகே ஆட்சியரை நேரில் சந்தித்து மனுகள் வழங்கப்படும். இப்படி வழங்கப்படும் மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நடவடிக்கைக்கு ஆட்சியர் பரிந்துரை செய்வது வழக்கம்.

அந்த வகையில், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். அப்போது கஞ்சனூர் அருகேயுள்ள மாதம்பூண்டி மதுரா கிராமத்தை சேர்ந்த பழங்குடி இருளர் சமூதாயத்தை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் மனு அளிக்க வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து இருளர் சமூதாயத்தை சேர்ந்த பெண்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 62 பழங்குடி இருளர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றோம். கடந்த ஓராண்டாக எங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கவில்லை. பலமுறை மனு அளித்தும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆட்சியர் இந்த மனுமீது நடவடிக்கை எடுத்து குடிநீர்வழங்கிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.