பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் ராசக்காபாளையம்,புளியம்பட்டி, வெள்ளாள பாளையம், கொண்டே கவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி, கொல்லப்பட்டி ஊராட்சிகள் இணைந்து “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்டம். “எல்லோருக்கும் எல்லாம்””உங்கள் வீடு தேடி வரும் சேவை” விஜய் மகாலில் நடைபெற்றது.

அதுசமயம். மாவட்ட செயலாளர் பத்மநாபன், பொள்ளாச்சி (தெ) வடக்கு ஒன்றிய தலைவர் காணியப்பன், ராசக்காபாளையம் முன்னாள் தலைவர் கண்ணப்பன், பொள்ளாச்சி வட்டாட்சியார் பொள்ளாச்சி வடக்கு தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும். ஊராட்சி செயலாளர், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம், வீட்டுமனை பட்டா, ஆதார் கார்டு திருத்தம், குடும்ப அட்டை விண்ணப்பம், ஜாதி சான்று விண்ணப்பம், வருமான சான்று விண்ணப்பம் என திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தார்கள்.