“உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமில் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் மேட்டுப்பாளையம் திருமதி பேபி என்பவருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணையை வழங்கினார். தமிழ்நாட்டில் அரசுத் துறை சேவைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் நவம்பர் 30-ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை பெற விடுபட்டவர்கள் இந்த முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான, இருப்பிட, சாதி சான்றிதழ்களை பெற முடியும்.

அதேபோல் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு தரப்பில் வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகை பெற இந்த திட்டர்த்தில் மனு அளிக்கலாம். அதுமட்டுமல்லாமல் கட்டிட வசதி, குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், சுய உதவிக்குழு மூலம் கடன் பெறவும் இந்த முகாம்களில் மனு அளிக்கலாம். அதேபோல் மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் மிணைப்பு, இணையவழி வீட்டு மனைபட்டா பெற மனு அளிக்கலாம்.
இந்த முகாம்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம்களில் பெறும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இந்த முகாம் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகின்றது.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம். குள்ளி செட்டிபாளையம் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமில் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் மேட்டுப்பாளையம் திருமதி. பேபி என்பவருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணையை வழங்கினார்.

இந்த நிழற்ச்சியில் மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு உடனடியாக தீர்வு காணும்படி அரசு அலுவலர்களியிடம் எடுத்துரைத்தார். அவருடன் சூளோஸ்வரன்பட்டி. தலைவர் சந்திர மோகன், சூளோஷ்வரன்பட்டி செயல் அலுவலர் அவர்களும், ஒன்றிய செயலாளர் கதிர்வேல், சமத்தூர் தலைவர் குழந்தைவேலு, மகளிர் அணியை சேர்ந்த திருமதி விஜி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் திமுக உடன் பிறப்புகளும் மாற்றும் திரளான ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மாநில தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் மகேந்திரன், பொது மக்களின் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார். அவர்களுடன் வடக்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பாளையம் ராசு, மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ், செயற்குழு உறுப்பினர் மு.க. முத்து, மெடிக்கல் பரமசிவம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் அவர்களும் மற்றும். திமுக.கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.