2024-ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாளப் படத்தில் ராப் பாடகர், வேடன். சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு எதிராகவும் சமூக நீதி கருத்துகளையும் தன் பாடல் வரி எனும் பாடல் கேரளத்தைத் தாண்டி உலகெங்கும் வைரலானது. இந்தப் பாடல் வரிகளை எழுதி பாடிவர் வேடன்.
கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த வேடன் என்று அறியப்படும் ஹிரன்தாஸ் முரளி. ஈழத் தாய்க்கும் கேரளத் தந்தைக்கும் பிறந்த இவர், திருச்சூரில் ‘ஸ்வர்ணபூமி’ எனும் பிற்படுத்தப்பட்டோர் அதிகமாக வாழும் பகுதியில் வளர்ந்தார். ராப் இசைக் கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கும்போது ‘வேடன்’ எனும் புனைப்பெயரை சூட்டிக்கொண்டார்.
இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை பாடகர் வேடன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் ராப் பாடகர் வேடன் அவர்களுக்கு காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூலை உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.