பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட ஈ.பி.காலனி, நாகாத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருவருவது மட்டுமின்றி அங்குள்ள குடிநீர் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டு இணைப்புகளுக்கு நல்ல தண்ணீர் முறையாக வழங்கக்கோரியும், பழுதடைந்த குழாய்களை சரி செய்யக்கோரியும் முன்னாள் கவுன்சிலர் நடராஜன் தலைமையில் 11-வது வார்டு பொதுமக்கள் நேற்றுகாலை அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *