வெற்று அறிக்கைகளிலேயே மக்கள் பணி செய்வதாக நடிக்கும் ஏமாற்று அரசியல் தலைவர் என்றால் அது நீங்கள் தான்! உச்சத்தில் இருக்கும் நடிகராக அல்லாமல், உண்மையான மக்கள் சேவகராக முயற்சியுங்கள் என திமுக உறுப்பினர் வைஷ்ணவி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.
தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது. தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில் தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கருதிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர்.
அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது, நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.
எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின்படியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153-இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும் என விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த விஜய் அவர்களின் கருத்திற்கு வைஷ்ணவி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த இன்ஸ்டா புகழ் வைஷ்ணவி, தவெகவின் மீது பல குற்றசாட்டுகளை அடுக்கி அந்த கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதன்பிறகு திமுகவிற்கு ஆதரவாகவும், தவெகவிற்கு எதிராகவும் கருத்துக்களை வைஷ்ணவி வெளியிட்டு வருகிறார்.
வெற்று அறிக்கைகளிலேயே மக்கள் பணி செய்வதாக நடிக்கும் ஏமாற்று அரசியல் தலைவர் என்றால் அது நீங்கள் தான்! மாநகராட்சி தூய்மை பணிகளை தனியார்மயம் ஆக்கியது அதிமுக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில்தான்.
தூய்மை பணியாளர்களுக்கு இத்தனை அன்பும் ஆதரவும் காட்டும் நீங்கள், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? தினமும் உங்கள் வீட்டு கழிவுகளை சேகரிக்கும் தூய்மை பணியாளரிடம் என்றாவது பேசியுள்ளீர்களா? நீங்கள் வசிக்கும் தெருவை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளரின் பெயர் தெரியுமா உங்களுக்கு?. அவர்களுக்கு ஒருநாளாவது உணவோ குடிநீரோ வழங்கியுள்ளீர்களா?. உச்சத்தில் இருக்கும் நடிகராக அல்லாமல், உண்மையான மக்கள் சேவகராக முயற்சியுங்கள் என