டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி: பொதுமக்கள் பஸ் மறியல் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் போன்றவை செயல்படும் அரிமளத்தின் மையப்பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

ஆகவே, இந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், நேற்று பஸ் மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *