4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் கோலி கூறியது, கேப்டனாக நான் பார்த்த டாப் 3 பந்து வீச்சுகளில் இதுவும் ஒன்றாகும்.

ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஷர்துல் தாகூர் அபாரமாக செயல்பட்டார். அவரது இரண்டு அரைசதங்களும் எதிரணியை நிலைகுலைய வைத்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஷர்துல் தாகூர் செயல்பட்டார். ரோகித் சர்மாவின் இன்னிங்சும் அற்புதமானது” என தெரிவித்தார்.