மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் மகளிர் பெருவிழாவில் கலந்துகொள்ள 200-க்கும் மேற்பட்டோர் பெண்கள் வேன் மூலம் புறப்பட்டு சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் மகளிர் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக, அரியலூர் மாவட்டத்திலிருந்து, பாமக மாவட்டச் செயலாளர் கே.பி.என். ரவி தலைமையில், அரியலூர் நகர வன்னியர் சங்க துணை தலைவர் அறவாழி, அரியலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், நகர பாமக செயலாளர் ஜி.கே. அருள், நகர பாமக தலைவர் செ. செந்தில் குமார், நகர வன்னியர் சங்க தலைவர் டி. முருகன், நகர வன்னியர் சங்க செயலாளர் சாத்தையா வெற்றி மற்றும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மகளிர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வேன் மூலம் புறப்பட்டு சென்றனர்.