அரியலூர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் N. பிரேம்குமார் அவர்கள் அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 150 மாணவர்களுக்கு இலவச டைரி மற்றும் ஐடி கார்டு ஆகியவற்றை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் வடக்கு ஒன்றிய இணை செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி துரைராஜ் , தலைமை ஆசிரியர் ஆசைதம்பி மற்றும் இருபாலர் ஆசிரியர்கள், எஸ்.எம்.சி தலைவர் பார்வதி முருகேசன் மற்றும் மாணவச் செல்வங்களும் கலந்து கொண்டனர்.