இந்தியா கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு T- 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் அமைந்துள்ள ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 அயர்லாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் அமைந்துள்ள ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து அயர்லாந்து அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது.
இதனைத் தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே கடும் அதிர்ச்சியாக அமைந்தது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் மூந்த்ரா வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ரன் ஏதுமின்றி (கோல்டன் டக்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவும் அதே ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணி 2.4 ஓவரில் 19 ரன்கள் என்ற நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க இசான் கிசான் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 4.5 ஓவரில் 35 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்கள் மட்டுமே எடுக்க 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அயர்லாந்து அணி பதிவு செய்தது. மேலும் தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றி சாதனை படைத்தது.