டோக்யோ ஒலிம்பிக் பி.வி சிந்து வெண்கல பதக்கம் வென்றார். இந்தியா பதக்க பட்டியலில் 59 இடத்திற்கு முன்னேறியது

டோக்யோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ் சிந்து எதிர்கொண்டார்.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டை கூட இழக்காமல் வீறுநடை போட்ட இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து, அரையிறுதியில் தைவானைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையிடம் 18-21, 12-21 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார்.இந்நிலையில்  வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ் சிந்து 21- 13, 21 -15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பெற்று தந்தார். இதன்மூலம் ஒரு வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் பெற்று இந்தியா பதக்க பட்டியலில் 59 இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *