அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு

கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் தமிழக அரசின்  பட்ஜெட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

அதன்படி குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60-ல் இருந்து ரூ.110 ஆக உயரும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *