அரியலூர் மாவட்டம், புது வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண். இவருக்கு பெரியசாமி என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில், நந்தினியின் கணவர் பெரியசாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். நந்தினி சமீபத்தில் பெரம்பலூரில் பிரபல தனியார் ஸ்வீட் கடையில் வேலைக்கு சேந்ததால் பெரம்பலூர், பாரதிதாசன் 4-வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த புவனேந்திரனுக்கு சொந்தமான மாடியில் உள்ள ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து கடந்த 40 நாட்களுக்கு முன்பு தங்கியுள்ளார்.
இந்நிலையில், பெரம்பலூரில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நந்தினியின் தாய் மாமன் பச்சமுத்து அடிக்கடி வந்து (நந்தினியின் தனிமையை தனது சாதகமாக பயன்படுத்து கொண்ட தாய் மாமன் பச்சமுத்து) உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், மது போதையில் இருந்த தாய் மாமன் பச்சமுத்துடன் நந்தினிக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பச்சமுத்து நந்தினியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து பச்சமுத்து பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற சரணடைந்து உள்ளார்.
தகவல் அறிந்த பெரம்பலூர் நகர காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு நந்தினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து இறந்த நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்ணை, பெண்ணின் தாய் மாமனே கள்ளக் காதலில் விழ வைத்து கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.