போக்குவரத்து காவல்துறையினர் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடக் கூடாது..!

சென்னையில் போக்குவரத்து காவல்துறை சாலையில் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழகத்தில் அதிக அளவிலான சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, தலைக்கவசம் அணியாதது, வாகனங்களை வேகமாக ஓட்டுவது, பைக்கில் வித்தை காட்டுவது, செல்போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவது என தினந்தோறும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை நாம் காண முடிகிறது.

சென்னையில் வாகன ஓட்டிகள் பலரும் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். ஒரு வழிச் சாலையில் கூட வாகனங்களை எதிர்ப்புறமாக வேகமாக ஓட்டுகின்றனர். போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து பொதுமக்கள் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில், சென்னையில் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் காவல்துறை அபராதம் வசூலிக்கின்றனர். வாகன ஓட்டிகளிடம் இருந்து பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாகவும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இ – செலானும் கொடுக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர் இ-செலானை வாங்கி விட்டு அபராதம் கட்டாமல் கிடப்பில் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து காவல்துறை ஈடுபடும்போது காவல்துறை இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வாகன ஓட்டிகள் வேகமாக வாகனங்களை இயக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து காவல்துறை கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் சோதனை நடத்தும் போக்குவரத்து காவல்துறை கும்பலாக நின்று சோதனை மேற்கொள்வது குறித்து பல்வேறு புகார்கள் வருவதால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவல்துறையினருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து காவல்துறை வாகன சோதனையில் ஈடுபடும்போது கும்பலாக நிற்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் மட்டுமே வாகன சோதனையின்போது இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காவலர் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்றும், உதவி காவல் ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சாலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது புல்லட் ஏறி விபத்து, அலட்சியமாக சென்ற SSI -யின் மகன்

திருச்சி சாலையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது அந்த வழியாக புல்லட்டில் வந்த 10-ஆம் வகுப்பு மாணவன் மூன்றரை வயது குழந்தையின் மீது புல்லட் ஏறி விபத்து ஏற்பட்டது. ஆனால் அந்த விபத்திற்கு காரணமாக மாணவன் மூன்றரை வயது குழந்தையின் மீது பைக்கை ஏற்றிவிட்டு நான் கே.கே.நகர் SSI முருகராஜ் மகன் என்று சொல்லிவிட்டு அலட்சியமாக சென்றான். இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது.

விபத்து வழக்கை விசாரிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட மணிமங்கலம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிர் திசையில் வந்த பைக் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் காரின் முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் நொறுங்கிய காரை அங்கிருந்து பொத்தேரியில் இயங்கி வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்டவர் எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் விபத்து குறித்து விசாரிக்க வேண்டுமென்றால் முதலில் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் பேரம் பேசப்பட்டதையடுத்து, கடைசியாக உரிமையாளர் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக காவலர் ஜெய்கணேஷ் என்பவருக்கு கொடுத்துள்ளார். இதில் காவலர் ஜெய்கணேஷ் லஞ்சம் பெறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.