பெண்கள் அணியும் ஆடைஆண்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்றும், இதுவே ஆண்களை தவறு செய்ய தூண்டுகிறது என்கிற பழமைவாத கருத்தை தூக்கிக் கொண்டு வாதிட்ட வழக்கறிஞருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபருக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களின் உடை என்பது அவர்களின் சுதந்திரத்திற்கான அளவு கோளாக பார்க்கப்படுகிறது. தாராள உடைதான் பெண்களுக்கானது.. டைட்டான இறுக்கமான உடைகள் பெண்களுக்கானது கிடையாது என்றும், அப்படி டிரஸ் போடுவது ஆபாசமானது என்றும் கருத்துக்கள் நீடித்து வரும் சூழ்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா தீர்ப்பு பழமைவாத கருத்தைக் கொண்டவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட நபரின் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், பெண்களின் உடை குறித்த பழமைவாத கருத்தை தூக்கிக் கொண்டு பெண்கள் ஜீன்ஸ் அணிவது ஆண்களை கெடுக்கும் என்று தெரிவித்தார். இந்த வாதங்களை அப்படியே நிராகரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, இதையெல்லாம் சாக்கு சொல்லி பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்த முடியாது என கூறி குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை உறுதி செய்தார்.
பின்னர், பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஒரு பெண்ணின் ஆடையை காரணம் காட்டி அவர் மீதான பாலியல் அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது. இப்படியான பேச்சுக்கள் சமூகத்தின் பிற்போக்கு சிந்தனையை காட்டுகிறது. சட்டத்தின் முன் இதற்கெல்லாம் இடம் கிடையாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கினார்.