கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட அமைப்பு ரீதியான மாற்றத்தின்படி, அதிமுகவில் கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிதாக 12 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு) மாவட்ட செயலாளராக வேல்குமார் எம்.சாமிநாதன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட (காங்கயம், தாராபுரம், படத்துக்குளம் தொகுதி) செயலாளராக ஆர். செல்வக்குமார், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் (பல்லடம், உடுமலைப்பேட்டை) செயலாளராக திருப்பூர் சி. சிவகாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்டம் (பொள்ளாச்சி, வால்பாறை) செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன்.
மேலும், கோவை புறநகர் மத்திய மாவட்டம் (தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர்) செயலாளராக செ.ம. வேலுசாமி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் (ஸ்ரீரங்கம், மணப்பாறை) செயலாளராக ஆர். மனோகரன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் (திருவெறும்பூர், லால்குடி) செயலாளராக டி.என். சிவக்குமார், தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் (தஞ்சாவூர், திருவையாறு) செயலாளராக ஆர். காந்தி, தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (ஒரத்தநாது, பாபநாசம்) செயலாளராக கு. ராஜமாணிக்கம்.
மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் (புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை) செயலாளராக வி. பழனிவேல், புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் (திருமயம், விராலிமலை) செயலாளராக ஏ.எல். ராமு, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் (ஆலங்குடி, அறந்தாங்கி) செயலாளராக ஞான. கலைச்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக அவை தலைவர் பொறுப்பில் இருக்கும் இ. இன்பநாதன் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இ. இன்பநாதன் நியமிக்கப்படுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி.V. ஜெயராமன் அவர்களை தேசிய முக்குலத்தோர் கழகம் நிறுவன தலைவர் டெல்டா. த. சுரேஷ் தென்னம்பிரியர் அவர்களின் சார்பில் வியாபாரிகள் சங்கம் மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி K. அபிராம் பிரசாத் அவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.