ராகுல் காந்தி வேதனை: எய்ம்ஸ் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபாதைகளில் தூங்கும் நோயாளிகள்..!

எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகள் உறையும் குளிரில் நடைபாதைகளில் தூங்கும் நிலை உள்ளது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அண்மைக் காலமாக காய்கறி விற்பனையாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளி, செருப்பு தைக்கும் தொழிலாளி, லாரி ஓட்டுநர், ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுடன் உரையாடிய வீடியோ பதிவையும் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு திடீரென வருகை தந்தார். அப்போது அங்குள்ள சாலைகள், நடைபாதைகள், சுரங்கப்பாதைகளில் படுத்திருந்த நோயாளிகள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

பின்னர் இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில், நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மாதக்கணக்கில் காத்திருப்பதும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். உறைய வைக்கும் குளிரில் நடைபாதைகளில் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது.

சுரங்கப்பாதைகளில் படுத்து தூங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதுதான் இன்றைய டெல்லி எய்ம்ஸின் உண்மை நிலை. இதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது. ஆனால் அவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறார். மத்திய மற்றும் டெல்லி அரசுகள் பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன்: RSS தலைவர் பெருமிதம் ராகுல் காந்திக்கு வலிக்கிறது..!

500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் RSS தலைவர் பெருமிதம் ராகுல் காந்திக்கு வலிக்கிறது என கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக RSS தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம். ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என கூறியிருக்கிறார்.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் மாநிலத்தில் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கான முயற்சிகளை செய்தவர் அன்றைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல். சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் கவுரவம் மீட்டெடுக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் முழுமை அடைந்தது.

அதுபோலதான் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தை, 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி மீட்டு, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் RSS தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது ராகுல் காந்திக்கு வலிக்கிறது.

ஓர் அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை எதிர்ப்பது, விமர்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல். ஆனால், இந்திய அரசை எதிர்க்கிறோம் என, 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் கூறுகிறார் என்றால் அதுதான் தேசத் துரோகம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார். நெருக்கடி நிலையை கொண்டு வந்து அரசியலமைப்பையே முடக்கிய தனது பாட்டி இந்திரா காந்தி பெயரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, அரசியலமைப்புக்கு ஆபத்து என ராகுல் காந்தி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள். இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. காங்கிரஸ், திமுக-விற்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று RSS தலைவர் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!

RSS தலைவர் மோகன் பாகவத்1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை என கூறி இருப்பது, ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல்; இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கமுடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவன்’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தியால் டெல்லியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேசிய ராகுல் காந்தி, “மிகவும் முக்கியமான ஒரு தருணத்தில் நாம் நமது புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்துள்ளோம். RSS தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசும்போது, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை; அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது தான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.

இந்தக் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது இந்த நாட்டின் மண்ணில் இருந்து எழுந்தது. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பாகவத் நேற்று பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டிடத்தில் பிரதிபலிக்கப்படுவதைக் காணலாம்.

நியாயமாக நடக்கும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது என்று நினைக்காதீர்கள். பாஜக மற்றும் RSS என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்கள் நம் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இப்போது நாங்கள் பாஜக மற்றும் RSS ஸை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம்.

இந்த கட்டிடத்தில், திறமைகளின் ஆழத்தை நீங்கள் காண்பீர்கள். இந்தியாவின் ஆன்மாவில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். இங்கே ஒரு வளமான வரலாறு உள்ளது; உண்மையில், நமது அடையாளத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். காங்கிரஸ் உறுப்பினர்களாகிய நமக்கு, நாம் யார், நமது பாரம்பரியம் என்ன, நமது வரலாறு என்ன, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பின் அடித்தளத்தில் உழைத்து இந்த நாட்டின் வெற்றியைக் கட்டியெழுப்பியுள்ளது. இதைத்தான் இந்தக் கட்டிடம் குறிக்கிறது

கட்டிடத்தின் உள்ளே, மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் எண்ணற்ற தொண்டர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் என பலரை நீங்கள் காண முடியும். அவர்கள் அனைவரும் நமது நாட்டின் அரசியலமைப்புக்கு சேவை செய்து மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள்.

இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதில்லை. தேசியக் கொடியையோ அல்லது அரசியலமைப்பையோ நம்புவதில்லை. அவர்கள் இந்தியாவுக்கு மிகவும் மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளனர். இந்தியா ஒரு ரகசிய சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஒரு நபரால் நடத்தப்பட வேண்டும், நமது நாட்டின் குரல்களை நசுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை மவுனமாக்க அவர்கள் விரும்புகிறார்கள். இதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரல். அவர்களை வேறு எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாது. அவர்களைத் தடுக்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். ஏனென்றால் நாம் ஒரு சித்தாந்தக் கட்சி.

வெளிப்புற சுயத்தில் கவனம் செலுத்தும் மேற்கத்திய உலகத்தைப் போலல்லாமல், உள்முக சுயத்தை புரிந்துகொள்வதை வலியுறுத்தக்கூடியது இந்திய சிந்தனை. நமது மிகப் பெரிய குருமார்களின் புரிதல் அனைத்தும் துல்லியமானது. நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் இயல்பு என்ன? என்பனபோன்ற அடிப்படை கேள்விகளைப் பற்றியே பகவத் கீதை, பகவான் சிவன், குருநானக், துறவி கபீர் போன்றவர்கள் பேசுகிறார்கள்.

இந்தியாவில் நடைபெறும் முக்கியப் போராட்டம் இதுதான். இங்கே ஒன்றோடு ஒன்று மோதும் இரண்டு பார்வைகள் உள்ளன. ஒன்று நமது பார்வை. அது அரசியலமைப்பின் பார்வை. மற்றொன்று RSS ஸின் பார்வை. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒரு பார்வை கூறுகிறது. இந்த இந்திரா பவனில், பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த மொழி – தாழ்ந்த மொழி, கலாச்சாரம் அல்லது சமூகம் என்றில்லாமல், இந்த கட்டிடம் இந்த பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.

மறுபுறம், ஒரு மையப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் புரிதலின் பார்வை உள்ளது. சுதந்திரப் போராட்டம் குறித்தும் தேசம் குறித்தும் அவர் என்ன நினைக்கிறார் என்பதை நமக்குத் தெரிவிக்கும் துணிச்சல் மோகன் பாகவத்துக்கு இருக்கிறது. நேற்று அவர் கூறியது தேசத்துரோகம். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் மதிப்பற்றது என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் மதிப்பற்றது என்றும் அவர் கூறுவாரேயானால் அது தேசத்துரோகம். வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு பேசியவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று சொல்வது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிப்பதாகும். இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கமுடியாது” என ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தி: அதானியை விசாரணை நடத்தினால் நரேந்திர மோடியும் விசாரணைக்கு உள்ளாவார் என்ற பயம்

அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விசாரணை நடத்த மாட்டார். ஏனென்றால் அவர் விசாரணையைத் தொடங்கினால், அவரும் விசாரணைக்கு உள்ளாவார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழுமம் சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாக அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதானியும் பிரதமர் மோடியும் ஒன்று தான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி விசாரணை நடத்த மாட்டார். ஏனென்றால் அவர் விசாரணையைத் தொடங்கினால், அவரும் விசாரணைக்கு உள்ளாவார்.

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜாக்கெட் அணிந்தும் கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரியங்கா காந்தி முதல்முறையாக வெற்றி பெற்ற சகோதரி பிரியங்கா காந்திக்கு இனிப்பு ஊட்டிய ராகுல் காந்தி..!

கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்முறையாக தேர்தல் களத்தில் நின்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டு சுமார் 4 லட்சத்திற்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டது. இதனை, சகோதரர் ராகுல் காந்தியிடம் வழங்கி, பிரியங்கா காந்தி வாழ்த்து பெற்றார். மேலும், வெற்றி பெற்ற தங்கை பிரியங்கா காந்திக்கு இனிப்பு ஊட்டி ராகுல் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், வயநாட்டைச் சேர்ந்த எனது சகாக்கள் இன்று எனது தேர்தல் சான்றிதழைக் கொண்டு வந்தனர். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு ஆவணம் மட்டுமல்ல, இது உங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் நாங்கள் உறுதியளிக்கும் மதிப்புகளின் சின்னம். உங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு வயநாட்டிற்கு நன்றி என பிரியங்கா காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நானா படோல்: ராகுல்காந்தியைக் கண்டால் பாஜகவுக்கு பயம்..!

ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என அமித் ஷாவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் பதிலடி கொடுத்தார்.

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ இந்திரா காந்தி உயிரோடு வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு வராது’ என்று பேசினார். இதற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று பதிலடி கொடுத்தார்.

நானா படோல் கூறுகையில்,’ காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன? நீங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடிந்தது. தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ராணுவ வீரர்கள் தினமும் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இந்த நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இந்திராகாந்தி இருந்தவர்.

மறைந்த அவரை 370-வது சட்டப்பிரிவில் அமித் ஷா விமர்சனம் செய்வது தவறானது. இந்திராகாந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜக எங்கும் இருந்திருக்காது. இந்திராகாந்தியை விடுங்கள், தற்போது ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என நானா படோல் பேசினார்.

ராகுல் காந்தி பதிலடி: நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது வெற்று புத்தகமாக தெரிகிறது..!

அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது பிரதமர் நரேந்திர மோடிக்கு வெற்று புத்தகமாக தெரிகிறது என ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அரசியல் சாசனத்தின் சிறிய அளவிலான புத்தகத்தைக் காட்டி, அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார்.

ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகத்தின் உள்ளே வெற்றுத் தாள்களே உள்ளதாகவும், போலியான புத்தகத்தைக் காட்டி அவர் பிரச்சாரம் செய்வதாகவும், இதன் மூலம் அவர் நாட்டின் அரசியல் சாசனத்தை அவமதித்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோன்ற ஒரு புத்தகத்தை ஒருவர் வாங்கிப் பார்த்தபோது அதன் உள்ளே வெற்றுத்தாள்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவர் தனது உரையில், “பொதுக்கூட்டங்களில் நான் காட்டும் அரசியல் சாசன புத்தகத்தில் வெற்றுப் பக்கங்கள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். நரேந்திர மோடிக்கு அரசியல் சாசனம் காலியாக உள்ளது. ஏனென்றால் அவர் அதைப் படிக்கவில்லை.

அதேபோல், நான் காட்டும் புத்தகத்தின் அட்டை சிவப்பு நிறமாக இருப்பதாகக் கூறி அதிலும் அரசியல் செய்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அதன் நிறம் எங்களுக்கு முக்கியமில்லை. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். அதைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

இந்த அரசியலமைப்பு வெற்று இல்லை. இது சுதந்திரப் போராட்ட தலைவர்களான பிர்சா முண்டா, புத்தர், காந்தி, பூலே ஆகியோரின் சிந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்பில் இந்தியாவின் ஆன்மா, இந்தியாவின் அறிவு உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை வெறுமையானது என கூறும் நரேந்திர மோடி, அம்பேத்கர், மகாத்மாகாந்தி, பிர்சா முண்டா, புத்தர்,  பூலே ஆகியோரை அவமதிக்கிறார்  என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி கடும் விமர்சனம்: ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள் பாஜவின் கொள்கைகள்..!

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள் என பாஜகவை ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார். ஜார்க்கண்ட் 81 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று நவம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது.

இந்நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி உரையாடினார்.

அப்போது, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள். நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுபடுத்த பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பை காக்க காங்கிரஸ் விரும்புகிறது. தொழிலதிபர்கள் ஆதாயம் அடைய பிரதமர் மோடி உதவுகிறார். நாங்கள் மோடி அரசை தோற்கடித்து, நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம் என ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக சாடினார்.

ராகுல் காந்தி: நாங்கள் உங்களை ‘பழங்குடியினர்’ என்கிறோம்…! ஆங்கிலேயரை போல பாஜக ‘வனவாசி’ என்கின்றனர் ..!

நாங்கள் உங்களை ‘பழங்குடியினர்’ என்கிறோம். ஆனால் பாஜக உங்களை ‘வனவாசி’ என்கிறது. ஆங்கிலேயர்கள் உங்களை வனவாசிகள் என்றும் அழைத்தார்கள். என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்லை முன்னிட்டு சிம்டேகா மற்றும் லெஹெர்டேகா நகரங்களில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, “நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. ஒரு பக்கம் – இண்டியா கூட்டணி. மறுபக்கம் பாஜக மற்றும் RSS. இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது. பாஜகவும் RSS அமைப்பும் அரசியல் சட்டத்தை ஒழிக்க விரும்புகின்றன.

அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல. இதில் பிர்சா முண்டா, அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, மகாத்மா காந்தி ஆகியோரின் சிந்தனைகள் உள்ளன. இந்த அரசியலமைப்புச் சட்டம்தான் நாட்டின் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளை பாதுகாக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாட்டை இயக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணி விரும்புகிறது.

நாங்கள் உங்களை ‘பழங்குடியினர்’ என்கிறோம். ஆனால் பாஜக உங்களை ‘வனவாசி’ என்கிறது. ஆங்கிலேயர்கள் உங்களை வனவாசிகள் என்றும் அழைத்தார்கள். உங்கள் தண்ணீர், காடுகள் மற்றும் நிலங்களை பாதுகாக்க பிர்சா முண்டா ஆங்கிலேயர்களுடன் போராடினார். இன்று நாங்களும் உங்கள் உரிமைக்காக போராடுகிறோம். உங்கள் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை பாஜக பறிக்க நினைக்கிறது. அதனால்தான் உங்களை வனவாசி என்று அழைக்கிறது. ஆதிவாசி என்றால் நாட்டின் முதல் உரிமையாளர் என்று பொருள். அதேசமயம் வனவாசியாக இருப்பது உங்களுக்கு நாட்டில் எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம்.

நீங்கள் பழங்குடியினர். நாட்டின் மீது உங்களுக்கே முதல் உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் ‘வனவாசி’ என்ற வார்த்தையை நீங்கள் காண முடியாது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் வனவாசி என்பதற்குப் பதிலாக ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள். ஏனென்றால், நீர், காடு, நிலம் ஆகியவற்றின் உண்மையான உரிமையாளர்கள் பழங்குடியினர் என்று அவர்கள் கூற விரும்பினர். பிர்சா முண்டாவும், அதற்காகவே போராடினார். ஆனால், பாஜகவோ பழங்குடியினரிடம் இருந்து நீர், காடு, நிலம் ஆகியவற்றைப் பறிக்க முயற்சிக்கிறது.

நாட்டில் 50% ஓபிசி, 15% தலித், 8% பழங்குடியினர் மற்றும் 15% சிறுபான்மை சமூக மக்கள் உள்ளனர். இந்த மக்கள் தொகை மொத்தத்தில் 90% ஆகும். ஆனால் நாட்டின் பெரிய நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஓபிசி, தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவரைக்கூட நீங்கள் பார்க்க முடியாது. பாஜகவினர் எங்கு சென்றாலும் ஒரு சகோதரரை இன்னொரு சகோதரருடனும், ஒரு மதத்தை இன்னொரு மதத்துடனும், ஒரு மொழியை இன்னொரு மொழியுடனும் சண்டையிட வைக்கிறார்கள்.

மணிப்பூர் இவ்வளவு நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் இன்றுவரை அங்கு செல்லவில்லை. ஏனெனில் அவரது சித்தாந்தத்தால்தான் அங்கு வன்முறை பரவியது. அதனால்தான் நாங்கள் ‘இந்திய விழிப்புணர்வு யாத்திரை’ நடத்தினோம். அதில் ‘வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறப்போம்’ என்ற முழக்கம் இருந்தது. நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உரிய பங்கேற்பு இல்லை. நாட்டின் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள். உங்களிடம் எந்த குறையும் இல்லை. நீங்கள் எந்த வகையான வேலையையும் செய்யலாம். ஆனால் உங்களுக்கான பாதை தடுக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, ​​நரேந்திர மோடி அமைதியாகி விட்டார். உரிய பங்கேற்பு இல்லாத 90% மக்களுக்கு பங்கேற்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நரேந்திர மோடி, அமித் ஷா, அம்பானி – அதானி போன்ற ஒரு சிலரால் நாட்டை நடத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஒரு சில கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை நரேந்திர மோடி தள்ளுபடி செய்தார்.

ஜார்க்கண்டில் எத்தனை பேருக்கு நரேந்திர மோடி கடன்களை தள்ளுபடி செய்தார்? நமது அரசுகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகளின் பழக்கத்தை காங்கிரஸ் கெடுப்பதாக பாஜக கூறியது. ஆனால், கோடீஸ்வரர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போது, ​​அவர்களின் பழக்கவழக்கங்கள் கெட்டுப் போகவில்லையா? பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்கு பணம் சென்றால், அது விவசாயிகளின் பாக்கெட்டுகளுக்கும் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தி: இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது..! பாஜக, RSS அரசியல் அரசியலமைப்பை ஒழிக்க முயல்கிறது..!

இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது. பாஜகவும் RSS அமைப்பும் அரசியல் சட்டத்தை ஒழிக்க விரும்புகின்றன என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்லை முன்னிட்டு சிம்டேகா மற்றும் லெஹெர்டேகா நகரங்களில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, “நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. ஒரு பக்கம் – இண்டியா கூட்டணி. மறுபக்கம் பாஜக மற்றும் RSS. இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது. பாஜகவும் RSS அமைப்பும் அரசியல் சட்டத்தை ஒழிக்க விரும்புகின்றன.

அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல. இதில் பிர்சா முண்டா, அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, மகாத்மா காந்தி ஆகியோரின் சிந்தனைகள் உள்ளன. இந்த அரசியலமைப்புச் சட்டம்தான் நாட்டின் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளை பாதுகாக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாட்டை இயக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணி விரும்புகிறது.

நாங்கள் உங்களை ‘பழங்குடியினர்’ என்கிறோம். ஆனால் பாஜக உங்களை ‘வனவாசி’ என்கிறது. ஆங்கிலேயர்கள் உங்களை வனவாசிகள் என்றும் அழைத்தார்கள். உங்கள் தண்ணீர், காடுகள் மற்றும் நிலங்களை பாதுகாக்க பிர்சா முண்டா ஆங்கிலேயர்களுடன் போராடினார். இன்று நாங்களும் உங்கள் உரிமைக்காக போராடுகிறோம். உங்கள் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை பாஜக பறிக்க நினைக்கிறது. அதனால்தான் உங்களை வனவாசி என்று அழைக்கிறது. ஆதிவாசி என்றால் நாட்டின் முதல் உரிமையாளர் என்று பொருள். அதேசமயம் வனவாசியாக இருப்பது உங்களுக்கு நாட்டில் எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம்.

நீங்கள் பழங்குடியினர். நாட்டின் மீது உங்களுக்கே முதல் உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் ‘வனவாசி’ என்ற வார்த்தையை நீங்கள் காண முடியாது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் வனவாசி என்பதற்குப் பதிலாக ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள். ஏனென்றால், நீர், காடு, நிலம் ஆகியவற்றின் உண்மையான உரிமையாளர்கள் பழங்குடியினர் என்று அவர்கள் கூற விரும்பினர். பிர்சா முண்டாவும், அதற்காகவே போராடினார். ஆனால், பாஜகவோ பழங்குடியினரிடம் இருந்து நீர், காடு, நிலம் ஆகியவற்றைப் பறிக்க முயற்சிக்கிறது.

நாட்டில் 50% ஓபிசி, 15% தலித், 8% பழங்குடியினர் மற்றும் 15% சிறுபான்மை சமூக மக்கள் உள்ளனர். இந்த மக்கள் தொகை மொத்தத்தில் 90% ஆகும். ஆனால் நாட்டின் பெரிய நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஓபிசி, தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவரைக்கூட நீங்கள் பார்க்க முடியாது. பாஜகவினர் எங்கு சென்றாலும் ஒரு சகோதரரை இன்னொரு சகோதரருடனும், ஒரு மதத்தை இன்னொரு மதத்துடனும், ஒரு மொழியை இன்னொரு மொழியுடனும் சண்டையிட வைக்கிறார்கள்.

மணிப்பூர் இவ்வளவு நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் இன்றுவரை அங்கு செல்லவில்லை. ஏனெனில் அவரது சித்தாந்தத்தால்தான் அங்கு வன்முறை பரவியது. அதனால்தான் நாங்கள் ‘இந்திய விழிப்புணர்வு யாத்திரை’ நடத்தினோம். அதில் ‘வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறப்போம்’ என்ற முழக்கம் இருந்தது. நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உரிய பங்கேற்பு இல்லை. நாட்டின் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள். உங்களிடம் எந்த குறையும் இல்லை. நீங்கள் எந்த வகையான வேலையையும் செய்யலாம். ஆனால் உங்களுக்கான பாதை தடுக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, ​​நரேந்திர மோடி அமைதியாகி விட்டார். உரிய பங்கேற்பு இல்லாத 90% மக்களுக்கு பங்கேற்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நரேந்திர மோடி, அமித் ஷா, அம்பானி – அதானி போன்ற ஒரு சிலரால் நாட்டை நடத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஒரு சில கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை நரேந்திர மோடி தள்ளுபடி செய்தார்.

ஜார்க்கண்டில் எத்தனை பேருக்கு நரேந்திர மோடி கடன்களை தள்ளுபடி செய்தார்? நமது அரசுகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகளின் பழக்கத்தை காங்கிரஸ் கெடுப்பதாக பாஜக கூறியது. ஆனால், கோடீஸ்வரர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போது, ​​அவர்களின் பழக்கவழக்கங்கள் கெட்டுப் போகவில்லையா? பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்கு பணம் சென்றால், அது விவசாயிகளின் பாக்கெட்டுகளுக்கும் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.