சஞ்சய் ராவத்: RSS அடுத்த பிரதமரை மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கும்..!”

பிரதமர் நரேந்திர மோடி 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் RSS தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை RSS விரும்புகிறது. ஆகையால், பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார் என உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா தலைநகரம் மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சஞ்சய் ராவத் பதிலளித்தார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி RSS தலைமையகம் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக, RSS அமைப்பில் என்ன விவாதங்கள் நடந்தாலும், அது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் நடக்கும். தற்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன.

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே RSS தலைமையகத்துக்குச் சென்றார். எனக்குத் தெரிந்தவரை, அவர் 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் RSS தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை RSS விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார்” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்: RSS தலைவர் பெருமிதம் ராகுல் காந்திக்கு வலிக்கிறது..!

500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் RSS தலைவர் பெருமிதம் ராகுல் காந்திக்கு வலிக்கிறது என கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக RSS தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம். ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என கூறியிருக்கிறார்.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் மாநிலத்தில் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கான முயற்சிகளை செய்தவர் அன்றைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல். சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் கவுரவம் மீட்டெடுக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் முழுமை அடைந்தது.

அதுபோலதான் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தை, 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி மீட்டு, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் RSS தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது ராகுல் காந்திக்கு வலிக்கிறது.

ஓர் அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை எதிர்ப்பது, விமர்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல். ஆனால், இந்திய அரசை எதிர்க்கிறோம் என, 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் கூறுகிறார் என்றால் அதுதான் தேசத் துரோகம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார். நெருக்கடி நிலையை கொண்டு வந்து அரசியலமைப்பையே முடக்கிய தனது பாட்டி இந்திரா காந்தி பெயரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, அரசியலமைப்புக்கு ஆபத்து என ராகுல் காந்தி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள். இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. காங்கிரஸ், திமுக-விற்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று RSS தலைவர் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!

RSS தலைவர் மோகன் பாகவத்1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை என கூறி இருப்பது, ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல்; இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கமுடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவன்’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தியால் டெல்லியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேசிய ராகுல் காந்தி, “மிகவும் முக்கியமான ஒரு தருணத்தில் நாம் நமது புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்துள்ளோம். RSS தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசும்போது, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை; அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது தான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.

இந்தக் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது இந்த நாட்டின் மண்ணில் இருந்து எழுந்தது. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பாகவத் நேற்று பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டிடத்தில் பிரதிபலிக்கப்படுவதைக் காணலாம்.

நியாயமாக நடக்கும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது என்று நினைக்காதீர்கள். பாஜக மற்றும் RSS என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்கள் நம் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இப்போது நாங்கள் பாஜக மற்றும் RSS ஸை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம்.

இந்த கட்டிடத்தில், திறமைகளின் ஆழத்தை நீங்கள் காண்பீர்கள். இந்தியாவின் ஆன்மாவில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். இங்கே ஒரு வளமான வரலாறு உள்ளது; உண்மையில், நமது அடையாளத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். காங்கிரஸ் உறுப்பினர்களாகிய நமக்கு, நாம் யார், நமது பாரம்பரியம் என்ன, நமது வரலாறு என்ன, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பின் அடித்தளத்தில் உழைத்து இந்த நாட்டின் வெற்றியைக் கட்டியெழுப்பியுள்ளது. இதைத்தான் இந்தக் கட்டிடம் குறிக்கிறது

கட்டிடத்தின் உள்ளே, மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் எண்ணற்ற தொண்டர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் என பலரை நீங்கள் காண முடியும். அவர்கள் அனைவரும் நமது நாட்டின் அரசியலமைப்புக்கு சேவை செய்து மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள்.

இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதில்லை. தேசியக் கொடியையோ அல்லது அரசியலமைப்பையோ நம்புவதில்லை. அவர்கள் இந்தியாவுக்கு மிகவும் மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளனர். இந்தியா ஒரு ரகசிய சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஒரு நபரால் நடத்தப்பட வேண்டும், நமது நாட்டின் குரல்களை நசுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை மவுனமாக்க அவர்கள் விரும்புகிறார்கள். இதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரல். அவர்களை வேறு எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாது. அவர்களைத் தடுக்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். ஏனென்றால் நாம் ஒரு சித்தாந்தக் கட்சி.

வெளிப்புற சுயத்தில் கவனம் செலுத்தும் மேற்கத்திய உலகத்தைப் போலல்லாமல், உள்முக சுயத்தை புரிந்துகொள்வதை வலியுறுத்தக்கூடியது இந்திய சிந்தனை. நமது மிகப் பெரிய குருமார்களின் புரிதல் அனைத்தும் துல்லியமானது. நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் இயல்பு என்ன? என்பனபோன்ற அடிப்படை கேள்விகளைப் பற்றியே பகவத் கீதை, பகவான் சிவன், குருநானக், துறவி கபீர் போன்றவர்கள் பேசுகிறார்கள்.

இந்தியாவில் நடைபெறும் முக்கியப் போராட்டம் இதுதான். இங்கே ஒன்றோடு ஒன்று மோதும் இரண்டு பார்வைகள் உள்ளன. ஒன்று நமது பார்வை. அது அரசியலமைப்பின் பார்வை. மற்றொன்று RSS ஸின் பார்வை. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒரு பார்வை கூறுகிறது. இந்த இந்திரா பவனில், பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த மொழி – தாழ்ந்த மொழி, கலாச்சாரம் அல்லது சமூகம் என்றில்லாமல், இந்த கட்டிடம் இந்த பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.

மறுபுறம், ஒரு மையப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் புரிதலின் பார்வை உள்ளது. சுதந்திரப் போராட்டம் குறித்தும் தேசம் குறித்தும் அவர் என்ன நினைக்கிறார் என்பதை நமக்குத் தெரிவிக்கும் துணிச்சல் மோகன் பாகவத்துக்கு இருக்கிறது. நேற்று அவர் கூறியது தேசத்துரோகம். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் மதிப்பற்றது என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் மதிப்பற்றது என்றும் அவர் கூறுவாரேயானால் அது தேசத்துரோகம். வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு பேசியவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று சொல்வது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிப்பதாகும். இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கமுடியாது” என ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தி: இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது..! பாஜக, RSS அரசியல் அரசியலமைப்பை ஒழிக்க முயல்கிறது..!

இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது. பாஜகவும் RSS அமைப்பும் அரசியல் சட்டத்தை ஒழிக்க விரும்புகின்றன என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்லை முன்னிட்டு சிம்டேகா மற்றும் லெஹெர்டேகா நகரங்களில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, “நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. ஒரு பக்கம் – இண்டியா கூட்டணி. மறுபக்கம் பாஜக மற்றும் RSS. இண்டியா கூட்டணி அரசியலமைப்பைப் பாதுகாக்க முயல்கிறது. பாஜகவும் RSS அமைப்பும் அரசியல் சட்டத்தை ஒழிக்க விரும்புகின்றன.

அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல. இதில் பிர்சா முண்டா, அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, மகாத்மா காந்தி ஆகியோரின் சிந்தனைகள் உள்ளன. இந்த அரசியலமைப்புச் சட்டம்தான் நாட்டின் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளை பாதுகாக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாட்டை இயக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணி விரும்புகிறது.

நாங்கள் உங்களை ‘பழங்குடியினர்’ என்கிறோம். ஆனால் பாஜக உங்களை ‘வனவாசி’ என்கிறது. ஆங்கிலேயர்கள் உங்களை வனவாசிகள் என்றும் அழைத்தார்கள். உங்கள் தண்ணீர், காடுகள் மற்றும் நிலங்களை பாதுகாக்க பிர்சா முண்டா ஆங்கிலேயர்களுடன் போராடினார். இன்று நாங்களும் உங்கள் உரிமைக்காக போராடுகிறோம். உங்கள் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை பாஜக பறிக்க நினைக்கிறது. அதனால்தான் உங்களை வனவாசி என்று அழைக்கிறது. ஆதிவாசி என்றால் நாட்டின் முதல் உரிமையாளர் என்று பொருள். அதேசமயம் வனவாசியாக இருப்பது உங்களுக்கு நாட்டில் எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம்.

நீங்கள் பழங்குடியினர். நாட்டின் மீது உங்களுக்கே முதல் உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் ‘வனவாசி’ என்ற வார்த்தையை நீங்கள் காண முடியாது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் வனவாசி என்பதற்குப் பதிலாக ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள். ஏனென்றால், நீர், காடு, நிலம் ஆகியவற்றின் உண்மையான உரிமையாளர்கள் பழங்குடியினர் என்று அவர்கள் கூற விரும்பினர். பிர்சா முண்டாவும், அதற்காகவே போராடினார். ஆனால், பாஜகவோ பழங்குடியினரிடம் இருந்து நீர், காடு, நிலம் ஆகியவற்றைப் பறிக்க முயற்சிக்கிறது.

நாட்டில் 50% ஓபிசி, 15% தலித், 8% பழங்குடியினர் மற்றும் 15% சிறுபான்மை சமூக மக்கள் உள்ளனர். இந்த மக்கள் தொகை மொத்தத்தில் 90% ஆகும். ஆனால் நாட்டின் பெரிய நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஓபிசி, தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவரைக்கூட நீங்கள் பார்க்க முடியாது. பாஜகவினர் எங்கு சென்றாலும் ஒரு சகோதரரை இன்னொரு சகோதரருடனும், ஒரு மதத்தை இன்னொரு மதத்துடனும், ஒரு மொழியை இன்னொரு மொழியுடனும் சண்டையிட வைக்கிறார்கள்.

மணிப்பூர் இவ்வளவு நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் இன்றுவரை அங்கு செல்லவில்லை. ஏனெனில் அவரது சித்தாந்தத்தால்தான் அங்கு வன்முறை பரவியது. அதனால்தான் நாங்கள் ‘இந்திய விழிப்புணர்வு யாத்திரை’ நடத்தினோம். அதில் ‘வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறப்போம்’ என்ற முழக்கம் இருந்தது. நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உரிய பங்கேற்பு இல்லை. நாட்டின் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள். உங்களிடம் எந்த குறையும் இல்லை. நீங்கள் எந்த வகையான வேலையையும் செய்யலாம். ஆனால் உங்களுக்கான பாதை தடுக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, ​​நரேந்திர மோடி அமைதியாகி விட்டார். உரிய பங்கேற்பு இல்லாத 90% மக்களுக்கு பங்கேற்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நரேந்திர மோடி, அமித் ஷா, அம்பானி – அதானி போன்ற ஒரு சிலரால் நாட்டை நடத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஒரு சில கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை நரேந்திர மோடி தள்ளுபடி செய்தார்.

ஜார்க்கண்டில் எத்தனை பேருக்கு நரேந்திர மோடி கடன்களை தள்ளுபடி செய்தார்? நமது அரசுகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகளின் பழக்கத்தை காங்கிரஸ் கெடுப்பதாக பாஜக கூறியது. ஆனால், கோடீஸ்வரர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போது, ​​அவர்களின் பழக்கவழக்கங்கள் கெட்டுப் போகவில்லையா? பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்கு பணம் சென்றால், அது விவசாயிகளின் பாக்கெட்டுகளுக்கும் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

கனடா புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை..!

இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும் என்று, கனடாவிலுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது. இதையடுத்து இந்தியதூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது. அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் பேசுகையில், RSS அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. எனவே, கனடாவில் அதைத் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்கவேண்டும். சீக்கிய பிரிவினைவாதியின் கொலைக்கு இந்திய தூதர்கள் சிலர் காரணம் என்று கனடாவிலுள்ள ராயல் கனடிய மவுண்டட் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளதன் மூலம் இதில் இந்தியாவின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது என ஜக்மீத் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் பேசினர். அப்போது, “இந்தியாவிலுள்ள RSS அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. அதை கனடாவில் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.

கனடாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கைகள் வருகின்றன. அவர்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். மேலும் தங்கள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஓட்டல்களில் தங்கி பாதுகாப்புடன் உள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

என்டிபி கட்சி எம்.பி. ஹீத்தர் மெக்பெர்சன் பேசுகையில்,, “இந்தியாவுக்கு ஆயுதங்கள், ராணுவத்தள வாடங்கள் விற்பனை செய்வதை கனடா நிறுத்தவேண்டும். மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான இன வன்முறை, இனப்படுகொலை வன்முறைக்கு அழைப்பு விடுக்கும், இந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் கனடா வருவதற்கு தடை செய்யவேண்டும். இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும்” என்றார். அவையில் என்டிபி கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் பேசுகையில்,, “RSS அமைப்பானது உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி வன்முறை, தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. கனடாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை RSS செயல்படுகிறது. அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்’’ என ஜக்மீத் சிங் பேசினார்.

 

கிருஷ்ணசாமி சவால் நான் ரெடி..!? திருமா ரெடியா..!?

திருமாவளவன் சொந்த சாதி மக்களுக்கும் உண்மையாக இல்லை எனவும் கூட்டணிக் கட்சிக்கும் உண்மையாக இல்லை எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு குற்றச்சாட்டியுள்ளார். நவம்பர் மாதம் 7 -ஆம் தேதி அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மாஞ்சோலை தொழிலாளர் ஆதரவு தெரிவித்தும் புதிய தமிழகம் சார்பாகப் பேரணி நடத்தப்படும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக எல்.முருகனுக்கும் திருமாவளவனுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவி வருகிறது. ‘திருமாவளவன் தலித் மக்கள் அனைவருக்குமான தலைவர் இல்லை. ஆகவே அவர் முதலமைச்சராக முடியாது என மத்திய இணையமைச்சர் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இந்த எல்.முருகன் கருத்திற்கு, ‘முருகன் அருந்ததியர் அல்ல. RSS காரர்’ என தொல் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த திருமாவளவன் கருத்திற்கு எல்.முருகன், ‘RSS காரன் என்பதற்குப் பெருமை கொள்கிறேன்’ என பேசி இருந்தார்.

இப்படி இந்தச் சர்ச்சை தொடக்கப் புள்ளியே அருந்ததியர் Vs தலித் என்ற இரு துருவ மோதலாக மாறி இருக்கிறது. இதனிடையே அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை மு.கருணாநிதி அமல்படுத்திய போது அதை ஆதரித்துவிட்டு, இப்போது உச்சநீதிமன்றம் வரை போய் திருமாவளவன் நிற்பது ஏன்? தும்பை விட்டு வாலை பிடித்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டியில், “ஆரம்பத்திலிருந்தே அருந்ததியருக்குப் பிரித்து அளிக்கப்பட்ட 3% உள் ஒதுக்கீட்டை நான் எதிர்த்து வருகிறேன். அருந்ததியருக்கு அளிக்கப்படும் 3% உள் ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே 18% பட்டியலின மக்களின் ஒட்டுமொத்த ஒதுக்கீடும் அருந்ததியருக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் வேலைக்காக 8 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 4 இடங்களை BC மற்றும் MBCக்கு ஒதுக்கிவிட்டனர். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. மீதி இருந்த 4 இடங்களையும் மொத்தமாக அருந்ததியருக்கே அரசு ஒதுக்கிவிட்டது.

அது எப்படி நியாயமாகும்? பறையர், தேவேந்திரகுல வேளாளருக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளன. அதேபோல மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 92 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 92 இடங்களையும் அருந்ததியச் சமூகத்தினருக்கே அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு உதவிப் பெறும் ஆயிரக் கணக்கான தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இதில் பறையர் மற்றும் பள்ளர் வகுப்பினருக்கு 15% இடஒதுக்கீட்டின் படிப் பார்த்தால் ஒன்று அல்லது 2 பேருக்குத்தான் வேலை கிடைக்கும்.

ஆனால், இந்தப் பள்ளிகளில் கடந்த 14 வருடங்களில் ஒட்டுமொத்த இடங்களும் அருந்ததியருக்கே வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் பட்டியலின மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்படி எதிர்காலத்தில் பிரச்சினை வரும் என்றுதான் நான் தொடக்கத்திலேயே உள் ஒதுக்கீட்டை எதிர்த்தேன். 3% பிரிந்து அருந்ததியருக்கு வழங்கப்பட்ட பிறகு, மீதமுள்ள 15% என்பது பறையர் மற்றும் பள்ளர் சமூகத்திற்கானது. அதில் மீண்டும் ஏன் அருந்ததியரை அரசு நுழைக்கிறது. அது ஒரு அநீதி. அன்று இதை ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்க்கிறேன் திருமாவளவன் என்கிறார்.

அதையாவது உண்மையாக எதிர்க்கிறாரா? என்று அவர் சொல்லட்டும்? திருமா பிறந்த சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. ஆதரவு அளிக்கும் சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. இருக்கும் கூட்டணிக்கும் அவர் நேர்மையாக இல்லை. கருணாநிதி நடத்திய கூட்டத்தில் ஆதரித்துவிட்டு இப்போது நீதிமன்றம் திருமா போகிறார். வழக்கு 15 வருடங்களாக நடந்து வருவது அவருக்குத் தெரியுமா? தெரியாதா? கேட்டால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்கிறார்.

சீராய்வு மனு போடுவதற்கு என்ன அர்த்தம்? எதிர்ப்பதா? ஆதரிப்பதா? காலையில் ஒன்று மாலையில் மற்றொன்று எனப் பேசக் கூடாது? வடமாவட்டத்தில் உள்ள பறையர் சமூகத்தினர் மத்தியில் நமக்குப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுப்போம் என்று பேசத் தயாரா? நம் மக்களுக்காக உண்மையாக இருக்கவேண்டும். திருமாவளவனுக்குப் பதவிதான் பெரிது என்றால் இடஒதுக்கீடு பற்றிப் பேச அவருக்கு உரிமை கிடையாது. அப்படி உண்மையாகவே உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவராக இருந்தால் எங்கள் பேரணியில் கலந்துகொள்வாரா? அதற்குத் தயாரா?” என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்

தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு: விசிகவில் இருந்து அருந்ததியரை பிரிக்க RSS சதி நடக்கிறது..!

விசிகவில் இருந்து அருந்ததியின மக்களை வெளியேற்ற RSS சதித்திட்டம் தீட்டுவதாக அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன்: எல்.முருகன் அருந்ததியர் என்பது யாருக்கு தெரியும்..! RSS சொல்லித்தான் தெரியும்..!

எல்.முருகன் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும் என தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன்: எல். முருகன் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை…!

எல்.முருகன் அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை, ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

தளவாய் சுந்தரம் மிக விரைவில் பாஜகவில் சேர திட்டமா..!?

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை வழிநடத்தும் முக்கிய பொறுப்புகளை கடந்த 20 ஆண்டுகளாகவே தளவாய் சுந்தரம் MLA. இருந்து வருகிறார். சமீப காலமாக அவர், இந்து கோயில்கள், அமைப்புகள் மற்றும் இந்து சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வந்தார்.

குறிப்பாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தளவாய் சுந்தரத்தின் பெயர் முதன்மையாக இருக்கும். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெறும் ஆரத்தி வழிபாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். விவேகானந்தா கேந்திராவுக்கு RSS பொறுப்பாளர்கள் வரும்போது, அவர்களை சந்தித்து பேசுவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில், தளவாய் சுந்தரம் வகுத்து வந்த அமைப்புச் செயலாளர், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளவாய் சுந்தரத்தை அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கியதற்கு, பாஜகவினருடன் அவர் கொண்டிருந்த நெருக்கமே காரணம் எனக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தல், விளவங்கோடு சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக டெபாசிட் இழந்தது. இத்தேர்தலில் அதிமுக பொறுப்பாளராக இருந்த தளவாய் சுந்தரம், தேர்தல் பணியில் பாஜகவுக்கு சாதகமாக இருந்ததாக அப்போதே கட்சியினர் குற்றம்சாட்டினர். கடந்த 6-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்தில் நடந்த RSS ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக கட்சி தலைமைக்கு புகார் சென்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றபோது மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணக்கமாக இருந்து பாஜக நிர்வாகியைப் போன்று தளவாய் சுந்தரம் செயல்பட்டார் போன்ற கருத்துக்களுக்கு நிலவி வருகின்றது. எது எப்படியோ தளவாய் சுந்தரம் விரைவில் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணமுள்ளது.