நிர்மலா சீதாராமன் கேள்வி சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா..!

குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று, சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் , விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதுமட்டுமின்றி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளன. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ” ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திமுகவுக்கும், ‘இண்டியா’ கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி” என்று கூறி இருந்தார்.

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “ஒவ்வொரு மாநிலத்தில் இருந்த வரியையும் இணைத்து தான் GST கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே GST வந்த பிறகு தான் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பாதிப்பதாக சொல்வது தவறு. முன்பு இருந்த வரி விகிதத்தைவிட GST வந்த பிறகு வரி விகிதம் குறைந்து இருக்கிறது. அனைத்து நிதி அமைச்சர்களுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள் என்பது அதனை இன்னும் குறைக்கத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது. இன்றும் தமிழ்நாட்டு வீதிகளில் சாதி பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது. சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா?. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக-வின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது

நிதி ஒதுக்கும்போது மறைமுகமாக எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீதிமன்றம் கண்டித்த பின்னர் அமைச்சர்களை நீக்கும் நிலை யாருக்கு வந்தது? திமுக கூட்டணிக்கா? இல்லை பாஜக கூட்டணிக்காக? குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று.தங்களை விட வளர்ச்சியடையாதவை எனக் கூறும் வட மாநிலங்களில் கூட இத்தகைய அவலம் நிகழவில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் ஆவேசம்: தயிர் சாதத்திற்கே இவ்வளவு கோபம் என்றால் ..! நல்லி எலும்பிற்கு எவ்வளவு கோபம் வராதா..!?

தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆவேசமாக பேசினார்.

சென்னையில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்று ஆவேசமாகப் பேசினார். அப்போது, “எதையும் பற்றி கவலைக் கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார்.

நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பாஜகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும் போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.” என வேல்முருகன் ஆவேசமாக பேசினார்.

தனிநபர்கள் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு..!

தனிநபர்கள் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருப்பவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரூ.12 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து வரி கணக்கிடப்படும். 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக ரூ.12 லட்சம் வரை ஆண்டு தனிநபர்கள் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

“புதிய முறையின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை (அதாவது மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானத்தைத் தவிர மாதத்துக்கு ரூ.1 லட்சம் சராசரி வருமானம் வரை) வருமான வரி செலுத்த தேவையில்லை என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் வரி செலுத்துவது கணிசமாகக் குறையும். அவர்களின் கைகளில் அதிக பணத்தை இது விட்டுச்செல்லும். இது வீட்டுச் செலவு, சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதிய வரி விதிப்பின்படி, ரூ.75 ஆயிரம் வரை கூடுதல் விலக்கு இருப்பதால், வருமானம் ஈட்டும் தனிநபர்கள் ரூ.12.75 லட்சம் வரை எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதேநேரத்தில், ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, ரூ.4 லட்சத்தில் இருந்தே வருமான வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.4 லட்சம் வரையிலான வருமானத்துக்கு பூஜ்ய வரி, ரூ.4 முதல் 8 லட்சம் வரை வருமானத்துக்கு 5 சதவீதம் வரி, ரூ. 8-12 லட்சம் வரை 10 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும்.

ரூ. 12-16 லட்சம் வரை 15 சதவீதம் வரி, ரூ.16 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வருமான வரி, ரூ. 20-24 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 25 சதவீத வருமான வரி, ரூ.24 லட்சத்துக்கு மேல் உள்ள வருவாய்க்கு ஆண்டுக்கு 30 சதவீத வருமான வரி விதிக்கப்படும். ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ள வரி செலுத்துபவருக்கு புதிய வருமான வரி விதிப்புபடி, ரூ.80,000 வரி சலுகை கிடைக்கும். ரூ. 18 லட்சம் வருமானம் உள்ள ஒருவருக்கு ரூ.70,000 வரி சலுகை கிடைக்கும். ரூ.25 லட்சம் வருமானம் உள்ள ஒருவருக்கு ரூ. 1.10 லட்சம் பலன் கிடைக்கும்.

மேலும் மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான வரி விலக்குக்கான வரம்பு தற்போதைய ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வாடகை மீதான டிடிஎஸ்-க்கான ஆண்டு வரம்பு ரூ.2.40 லட்சமாக இருப்பதை ரூ.6 லட்சமாக உயர்த்தும் அறிவிப்பும் அடங்கும்.

2. எந்தவொரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் புதுப்பிக்கப்பட்ட வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கால வரம்பை, தற்போதைய 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

3. சிறிய தொண்டு அறக்கட்டளைகள் / நிறுவனங்களின் பதிவு காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிப்பதன் மூலம் நடைமுறை சிரமங்கள் குறையும்.

4. உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, பரிமாற்ற விலை நிர்ணய செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. வழக்குகளைக் குறைப்பதற்கும் சர்வதேச வரிவிதிப்பைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான துறைமுக விதிகளின் நோக்கம் விரிவுபடுத்தப்படுகிறது. என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!

நாகப்பட்டினத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூர் வருகை புரிந்திருந்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “விஸ்வகர்மா குலத்தொழில் இல்லை” எனக் கூறியதாகவும், “விஸ்வகர்மாவில் 18 தொழில்காரர்களை சேர்ப்பதாக” தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிரிப்பும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏந்த ஆர்ப்பாட்டத்தில் 300- கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின்: நிதி அமைச்சர் நடந்த விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று..!

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பின்னர் சான் பிரான்சிஸ்கோவில் 29-ஆம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 2 -ஆம் தேதி சிகாகோ சென்றார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் இரு இடங்களிலும் பல்வேறு தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், அமெரிக்காவாழ் தமிழர்களை சந்தித்தார்.

இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவை, முதலீடுகள் தொடர்பாகவும், அமெரிக்க பயணம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனரே?

அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாக கூறியுள்ளேன். அதுமட்டுமின்றி தொழில்துறை அமைச்சர் புள்ளி விவரங்களுடன் விளக்கியுள்ளார். சட்டப்பேரவையிலும் தெளிவாக கூறியுள்ளார். அதை குறிப்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதாகக் கூறினர். அதில் 10 சதவீத ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை கூறினால் அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்பதால் அதை தவிர்த்துள்ளேன்.

புதிய கல்விக் கொள்கையை குறித்து கேள்விக்கு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வேண்டும் என்றால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் உங்களுக்கு பதிலளித்துள்ளார். அதே போல் மெட்ரோ ரயில் திட்டம் 2-க்கு நாங்கள் கடனுதவி பெற்றுத்தந்துள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். இந்த இரண்டு பெரும் நிதித்தேவையை பிரதமரை சந்தித்து வலியுறுத்துவீர்களா?

நிச்சயமாக, உறுதியாக மெட்ரோ தொடர்பாக சந்திப்பேன். பள்ளிக் கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமரிடத்தில் நேரம் கேட்டு, அவரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.

அமெரிக்க பயணத்தின் போது, எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் கிடைத்துள்ளதா? குறைந்த அளவு முதலீடுகள் தான் ஈர்க்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாரே?

இது அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவது. இதில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடுகள் வந்துள்ளது. உறுதியான முதலீடுகளாகவும் வந்துள்ளது. அதில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு வீடியோ விவகாரம் குறித்து கேள்விக்கு கோவையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட விவகாரத்தில் நிதி அமைச்சர் நடந்த விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று.” என தெரிவித்தார்.

விசிக மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து கேள்விக்கு திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு அரசியல் மாநாடு அல்ல.

மேலும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு, “சொன்னதைத் தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். திமுக பவளவிழா நடைபெறவிருக்கும் நிலையில் நீங்கள் எதிர்பர்த்தது நடக்கும்.” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜோதிமணி வலியுறுத்தல்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்..!

அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். மன்னிப்பு கேட்க வைத்து வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். பாஜக,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி என்று அவர் தெரிவித்தார்.

கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட.

அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு?உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.

நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும்.அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டாரா ..!?

மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரியதாக வீடியோ பரவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.

இவரது இந்த பேச்சு வலைதலங்களில் வேகமாக பரவியது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிகமாக பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் “ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார்.

ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், அன்னபூர்ணா உரிமையாளர்சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் இருக்கிறார்.

பன்னுக்கு ஒரு GST.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு GST ..! நீ பன்னு கொடு. நானே கிரீமை வச்சுகிறேன்..!

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள் என சீனிவாசன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.

ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத ஜிஎஸ்டி என்ன கொடுமை மேடம்..!

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.

மனோ தங்கராஜ்: “நிர்மலா சீதாராமன் கணவனின் கேள்விகளுக்காவது பதில் அளிப்பாரா..!?”

“மத்திய நிதி அமைச்சரின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், சென்ற வருடம் The Crooked Timber of New India என்ற நூலை வெளியிட்டு பாஜக 9 ஆண்டுகளில் எப்படி நாட்டை நாசகுப்பையாக்கியது என்பதற்கு துறைவாரியாக புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டு பாஜகவின் போலி தேசப்பற்றை தோலுரித்தார். இன்று வரை அந்த தரவுகளுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ எந்த மறுப்பும் பாஜகவிடம் இருந்து வெளிவரவில்லை.

தற்போது, அவர் பல நேர்காணல்களில் “மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் என்பதே இருக்காது” என்று கடுமையாக எச்சரித்து வருகிறார். இதற்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிலளிக்காமல் இருப்பது, தனது கணவருக்கு ஏன் பதிலளிக்கவேண்டும் என்ற இறுமாப்பு காரணமெனில், குறைந்தபட்சம் ஒரு இந்திய குடிமகன், ஒரு பொருளாதார நிபுணர் என்ற அடிப்படையிலாவது பதில் அளிக்கலாமே! ஏன் வாய்திறக்கவில்லை?”

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. மேலும் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்ப்பரேட்களுக்கு நல்லது செய்வதாக கூறி, சாதாரண மக்களையும் பாஜக அரசு தண்டித்து வருகிறது.

“அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்ச கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக மக்களை பலி கடாவாக மாற்றி, பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றிற்கான விலையை ஏற்றியுள்ளது பாஜக அரசு. இந்த மக்கள் விரோத அரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பாஜகவின் வண்டவாளத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பாஜக அரசு அமைந்த பிறகு பொருளாதார ரீதியாக நாடு எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை புத்தக வாயிலாகவும் உலகறிய செய்துள்ளார். இந்நிலையில், இதனை குறிப்பிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.