தனிநபர்கள் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு..!

தனிநபர்கள் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருப்பவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரூ.12 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து வரி கணக்கிடப்படும். 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக ரூ.12 லட்சம் வரை ஆண்டு தனிநபர்கள் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

“புதிய முறையின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை (அதாவது மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானத்தைத் தவிர மாதத்துக்கு ரூ.1 லட்சம் சராசரி வருமானம் வரை) வருமான வரி செலுத்த தேவையில்லை என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் வரி செலுத்துவது கணிசமாகக் குறையும். அவர்களின் கைகளில் அதிக பணத்தை இது விட்டுச்செல்லும். இது வீட்டுச் செலவு, சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்கும்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதிய வரி விதிப்பின்படி, ரூ.75 ஆயிரம் வரை கூடுதல் விலக்கு இருப்பதால், வருமானம் ஈட்டும் தனிநபர்கள் ரூ.12.75 லட்சம் வரை எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதேநேரத்தில், ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, ரூ.4 லட்சத்தில் இருந்தே வருமான வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.4 லட்சம் வரையிலான வருமானத்துக்கு பூஜ்ய வரி, ரூ.4 முதல் 8 லட்சம் வரை வருமானத்துக்கு 5 சதவீதம் வரி, ரூ. 8-12 லட்சம் வரை 10 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும்.

ரூ. 12-16 லட்சம் வரை 15 சதவீதம் வரி, ரூ.16 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வருமான வரி, ரூ. 20-24 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 25 சதவீத வருமான வரி, ரூ.24 லட்சத்துக்கு மேல் உள்ள வருவாய்க்கு ஆண்டுக்கு 30 சதவீத வருமான வரி விதிக்கப்படும். ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ள வரி செலுத்துபவருக்கு புதிய வருமான வரி விதிப்புபடி, ரூ.80,000 வரி சலுகை கிடைக்கும். ரூ. 18 லட்சம் வருமானம் உள்ள ஒருவருக்கு ரூ.70,000 வரி சலுகை கிடைக்கும். ரூ.25 லட்சம் வருமானம் உள்ள ஒருவருக்கு ரூ. 1.10 லட்சம் பலன் கிடைக்கும்.

மேலும் மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான வரி விலக்குக்கான வரம்பு தற்போதைய ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வாடகை மீதான டிடிஎஸ்-க்கான ஆண்டு வரம்பு ரூ.2.40 லட்சமாக இருப்பதை ரூ.6 லட்சமாக உயர்த்தும் அறிவிப்பும் அடங்கும்.

2. எந்தவொரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் புதுப்பிக்கப்பட்ட வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கால வரம்பை, தற்போதைய 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

3. சிறிய தொண்டு அறக்கட்டளைகள் / நிறுவனங்களின் பதிவு காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிப்பதன் மூலம் நடைமுறை சிரமங்கள் குறையும்.

4. உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, பரிமாற்ற விலை நிர்ணய செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. வழக்குகளைக் குறைப்பதற்கும் சர்வதேச வரிவிதிப்பைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான துறைமுக விதிகளின் நோக்கம் விரிவுபடுத்தப்படுகிறது. என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் பதிவு: சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா..!

சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார். என தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வரும் ஜனவரி 14-ஆம் தேதியும், இதனை தொடர்ந்து 15 -ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16-ஆம் தேதி திருவள்ளூர் தினம் ஆகியவை தொடர்ந்து கொண்டாடப்படுவது காலகாலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நாடு முழுவதும் பட்டய கணக்காளர் எனப்படும் CA பவுண்டேசன் தேர்வுகள் ஜனவரி 12, 14, 16 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என ICAI அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அமுமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இதே வேளையில் பாஜக அரசு தமிழர் விரோத போக்கில் ஈடுபடுவதாக திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், சிபிஎம் கட்சியின் மதுரை தொகுதி MP சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “பொங்கல் திருநாளன்று CA பவுண்டேசன் தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. பொங்கல் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள். தேதிகளை மாற்ற ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சிஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர்.

தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறுவடைத் திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

இதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு SBI தேர்வு இறுதிச்சுற்றி பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டது. சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் அந்தத் தேர்வு எழுதினர். அப்போது நாங்கள் தீவிரமாக போராட்டம் நடத்தினோம். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது அறிவித்தார். இப்போது, நிர்மலா சீதாராமன் வசமுள்ள துறையில் மீண்டும் அதேபோன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துர்கா பூஜை அல்லது தீபாவளி பண்டிகையின்போது ஒன்றிய அரசு இதுபோல தேதி அறிவிக்க முடியுமா. பொங்கல் பண்டிகையில் CA தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என சு. வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதே வேளையில் பாஜக அரசு தமிழர் விரோத போக்கில் ஈடுபடுவதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில் பாஜகவினர் இதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், “இதே பொங்கல் தான் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி, வட இந்தியாவில் லோஹ்ரி, உ.பியில் கிச்சடி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியானா பஞ்சாப்பில் மாஹி என கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்கும்போது இது எப்படி தமிழருக்கு மட்டும் எதிரானதாகும். மேலும் CA தேர்வு தேதியை மத்திய அரசு முடிவு செய்வதில்லை. ICAI என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு தான் நடத்துகிறது.” என்று கூறினார்.

இந்தப் பதிவை ரீ-போஸ்ட் செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.

சு. வெங்கடேசன் காட்டம்: எத்தனை முறை சொன்னாலும் பாஜக திருந்தப்போவதில்லை..!

எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு CPM கட்சியின் மதுரை தொகுதி MP சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

என தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வரும் ஜனவரி 14-ஆம் தேதியும், இதனை தொடர்ந்து 15 -ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16-ஆம் தேதி திருவள்ளூர் தினம் ஆகியவை தொடர்ந்து கொண்டாடப்படுவது காலகாலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், நாடு முழுவதும் பட்டய கணக்காளர் எனப்படும் CA பவுண்டேசன் தேர்வுகள் ஜனவரி 12, 14, 16 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என ICAI அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அமுமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இதே வேளையில் பாஜக அரசு தமிழர் விரோத போக்கில் ஈடுபடுவதாக திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், சிபிஎம் கட்சியின் மதுரை தொகுதி MP சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “பொங்கல் திருநாளன்று சிஏ தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. பொங்கல் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள். தேதிகளை மாற்ற ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். CA பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர்.

தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறுவடைத் திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

இதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு SBI தேர்வு இறுதிச்சுற்றி பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டது. சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் அந்தத் தேர்வு எழுதினர். அப்போது நாங்கள் தீவிரமாக போராட்டம் நடத்தினோம். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது அறிவித்தார். இப்போது, நிர்மலா சீதாராமன் வசமுள்ள துறையில் மீண்டும் அதேபோன்று அறிவிக்கப்பட்டுள்ளது. துர்கா பூஜை அல்லது தீபாவளி பண்டிகையின்போது ஒன்றிய அரசு இதுபோல தேதி அறிவிக்க முடியுமா. பொங்கல் பண்டிகையில் CA தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என சு. வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுப்ரியா சுலே: நிர்மலா சீதாராமன் மிகவும் நேர்மையானவர் அவர் மீது வழக்கு வேதனை இருக்கிறது..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு வேதனை அளிக்கிறது என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி எம்பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றனர்’’ என ஆதர்ஷ் அய்யர் குற்றம் சாட்டினார்.

இந்த மனுவை விசாரித்த சிறப்புநீதிமன்றம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூருவில் உள்ள திகர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி எம்பி சுப்ரியா சுலே, மகாராஷ்டிராவின் புனே நகரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகச் சிறந்த பெண். மிகவும் துணிச்சலுடன் செயல்படக் கூடியவர், மிகவும் நேர்மையானவர்.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது, அதிர்ச்சி அளிக்கிறது. இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கக்கூடாது என்று வேண்டுகிறேன். வரும் நவம்பரில் நாடாளுமன்றம் கூடும்போது, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கேள்வி எழுப்புவோம் என சுப்ரியா சுலே தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு பதிலாக தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் நியமனமா..!?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றது. அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை நடைபெற்ற விவகாரம் தமிழக பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அண்ணாமலை இல்லாமல் கட்சியை வளர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தலைமை பொறுப்பு ஏற்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால், பாஜக தோல்வி சந்தித்தது. இந் நிலையில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று அதிமுக கட்சியில் பரவலாக பேசப்பட நிலையில் அதிமுக – பாஜக இடையே கடும் வார்த்தை போர் மூண்டது.

ஒரு கட்டத்தில் அதிமுக மறைந்த தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார். அதன் பின்னர் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியே போட்டியிட்டு 40 இடங்களிலும் இரண்டு கட்சிகளும் மண்ணை கவ்வியது.

தொடர்ந்து தமிழக தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில அனைத்துக்கட்சிகளையும், தலைவர்களையும் விமர்சித்து வந்தார். இதனால் பாஜக நிர்வாகிகள் இடையே அண்ணாமலைக்கு கெட்ட பெயர் உருவானது.

இந்நிலையில், அண்ணாமலை திடீரென அரசியல் தொடர்பான 3 மாதம் படிப்புக்காக கடந்த ஆகஸ்டு 29-ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அண்ணாமலை வெளிநாடு சென்றதால், தமிழக பாஜகவுக்கு இடைக்கால தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், தமிழக பாஜகவை வழிநடத்த ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் 6 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ஆம் தேதி நியமித்தது.

அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளதை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க டெல்லி தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில வாரங்களாக அடிக்கடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக இரு நாட்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வங்கி கெஸ்ட் ஹவுசில் தமிழக பாஜகவின் 2-ஆம் கட்ட தலைவர்களை அழைத்து பேசினார். இந்த கூட்டத்திற்கு, அண்ணாமலையின் ஆதரவாளரான கரு. நாகராஜன் உள்ளிட்ட தலைவர்களையும், அதேபோன்று முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்களையும் அழைக்கவில்லை.

இந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமனின் தீவிர ஆதரவாளரான வானதி சீனிவாசன், மாநில செயலாளர் சூர்யா, கறுப்பு முருகானந்தம், பால்கனகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 முக்கிய நிர்வாகிகளை தனியாக அழைத்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணாமலை நடவடிக்கையால் தமிழக பாஜகவில் எந்த வளர்ச்சியும் இல்லை. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக காலூன்ற எந்த மாதிரியான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும், கட்சி தலைமை இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கி விட்டு, நிர்மலா சீதாராமனின் ஆதரவாளர் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழகத்தில் இல்லாத நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி தமிழகம் வருவது, நிர்வாகிகளை அழைத்து பேசுவது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றது. அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை நடைபெற்ற விவகாரம் தமிழக பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அண்ணாமலை இல்லாமல் கட்சியை வளர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தலைமை பொறுப்பு ஏற்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால், பாஜக தோல்வி சந்தித்தது. இந் நிலையில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று அதிமுக கட்சியில் பரவலாக பேசப்பட நிலையில் அதிமுக – பாஜக இடையே கடும் வார்த்தை போர் மூண்டது.

ஒரு கட்டத்தில் அதிமுக மறைந்த தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார். அதன் பின்னர் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியே போட்டியிட்டு 40 இடங்களிலும் இரண்டு கட்சிகளும் மண்ணை கவ்வியது.

தொடர்ந்து தமிழக தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில அனைத்துக்கட்சிகளையும், தலைவர்களையும் விமர்சித்து வந்தார். இதனால் பாஜக நிர்வாகிகள் இடையே அண்ணாமலைக்கு கெட்ட பெயர் உருவானது.

இந்நிலையில், அண்ணாமலை திடீரென அரசியல் தொடர்பான 3 மாதம் படிப்புக்காக கடந்த ஆகஸ்டு 29-ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அண்ணாமலை வெளிநாடு சென்றதால், தமிழக பாஜகவுக்கு இடைக்கால தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், தமிழக பாஜகவை வழிநடத்த ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் 6 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ஆம் தேதி நியமித்தது.

அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளதை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க டெல்லி தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில வாரங்களாக அடிக்கடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக இரு நாட்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வங்கி கெஸ்ட் ஹவுசில் தமிழக பாஜகவின் 2-ஆம் கட்ட தலைவர்களை அழைத்து பேசினார். இந்த கூட்டத்திற்கு, அண்ணாமலையின் ஆதரவாளரான கரு. நாகராஜன் உள்ளிட்ட தலைவர்களையும், அதேபோன்று முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்களையும் அழைக்கவில்லை.

இந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமனின் தீவிர ஆதரவாளரான வானதி சீனிவாசன், மாநில செயலாளர் சூர்யா, கறுப்பு முருகானந்தம், பால்கனகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 முக்கிய நிர்வாகிகளை தனியாக அழைத்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணாமலை நடவடிக்கையால் தமிழக பாஜகவில் எந்த வளர்ச்சியும் இல்லை. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக காலூன்ற எந்த மாதிரியான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும், கட்சி தலைமை இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கி விட்டு, நிர்மலா சீதாராமனின் ஆதரவாளர் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழகத்தில் இல்லாத நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி தமிழகம் வருவது, நிர்வாகிகளை அழைத்து பேசுவது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலின்: நிதி அமைச்சர் நடந்த விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று..!

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பின்னர் சான் பிரான்சிஸ்கோவில் 29-ஆம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 2 -ஆம் தேதி சிகாகோ சென்றார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் இரு இடங்களிலும் பல்வேறு தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், அமெரிக்காவாழ் தமிழர்களை சந்தித்தார்.

இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவை, முதலீடுகள் தொடர்பாகவும், அமெரிக்க பயணம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனரே?

அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாக கூறியுள்ளேன். அதுமட்டுமின்றி தொழில்துறை அமைச்சர் புள்ளி விவரங்களுடன் விளக்கியுள்ளார். சட்டப்பேரவையிலும் தெளிவாக கூறியுள்ளார். அதை குறிப்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதாகக் கூறினர். அதில் 10 சதவீத ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை கூறினால் அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்பதால் அதை தவிர்த்துள்ளேன்.

புதிய கல்விக் கொள்கையை குறித்து கேள்விக்கு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வேண்டும் என்றால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் உங்களுக்கு பதிலளித்துள்ளார். அதே போல் மெட்ரோ ரயில் திட்டம் 2-க்கு நாங்கள் கடனுதவி பெற்றுத்தந்துள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். இந்த இரண்டு பெரும் நிதித்தேவையை பிரதமரை சந்தித்து வலியுறுத்துவீர்களா?

நிச்சயமாக, உறுதியாக மெட்ரோ தொடர்பாக சந்திப்பேன். பள்ளிக் கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமரிடத்தில் நேரம் கேட்டு, அவரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.

அமெரிக்க பயணத்தின் போது, எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் கிடைத்துள்ளதா? குறைந்த அளவு முதலீடுகள் தான் ஈர்க்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாரே?

இது அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவது. இதில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடுகள் வந்துள்ளது. உறுதியான முதலீடுகளாகவும் வந்துள்ளது. அதில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு வீடியோ விவகாரம் குறித்து கேள்விக்கு கோவையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட விவகாரத்தில் நிதி அமைச்சர் நடந்த விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று.” என தெரிவித்தார்.

விசிக மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து கேள்விக்கு திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு அரசியல் மாநாடு அல்ல.

மேலும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு, “சொன்னதைத் தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். திமுக பவளவிழா நடைபெறவிருக்கும் நிலையில் நீங்கள் எதிர்பர்த்தது நடக்கும்.” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜோதிமணி வலியுறுத்தல்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்..!

அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். மன்னிப்பு கேட்க வைத்து வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். பாஜக,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி என்று அவர் தெரிவித்தார்.

கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட.

அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு?உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.

நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும்.அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டாரா ..!?

மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரியதாக வீடியோ பரவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.

இவரது இந்த பேச்சு வலைதலங்களில் வேகமாக பரவியது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிகமாக பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் “ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார்.

ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், அன்னபூர்ணா உரிமையாளர்சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் இருக்கிறார்.

ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத ஜிஎஸ்டி என்ன கொடுமை மேடம்..!

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.