சீமான் கருத்து: டெல்லியின் அண்டர் தி கண்ட்ரோலில் தமிழ்நாடு உள்ளது..!

பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அண்டர் தி கண்ட்ரோல் தமிழ்நாடு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் 90 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தருவதாக கேட்டதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். இதனையே விஜய்க்கு முன்னர் என்னிடமும் அதிமுக பேசியது. துணை முதல்வர் பதவி தரமாட்டேன் என அதிமுக சொல்லி இருக்காது. இரு கட்சிகளுக்கும் ஒத்துவராத சூழ்நிலையால் கூட்டணி அமையமால் பிரிந்து இருக்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி போல பேரணி பேசிக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் கூட்டணி வேறு; ஆட்சிக்கான கூட்டணி வேறு என்று நான் எப்போதும் கூறவே இல்லை. 2006-ஆம் ஆண்டு தேர்தலைப் போல, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வரும் போது நாம் தமிழர் கட்சியின் முடிவு குறித்து அப்போது தெரிவிப்போம்.

நாங்கள் ஆட்சி மாற்றம்- ஆள் மாற்றத்துக்கானவர்கள் அல்ல.. அடிப்படையையே மாற்றுகிறவர்கள். கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல.. அந்த கட்டிடத்தையே இடித்துவிட்டு புதியதாக கட்டுகிறவன் நான். இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மாநில தன்னாட்சி பேசுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ்; எதிர்த்து போராடியது தமிழ்நாடு. இந்தி மொழியை திணித்தவனுடன் கூட்டணி வைத்தது திராவிட கட்சிகள்; மாநில உரிமைகளை பறித்த போது ஆட்சியில் இருந்தவர்களும் இவர்கள்தான். இந்த கட்சிகள்தான் இன்று தனித்த குணம், தன்னாட்சி என்று பேசுகின்ற்ன.

டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இவ்வளவு நாள் அப்படி இருந்துள்ளதா? பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அவுண்ட் ஆப் கண்ட்ரோல் என பேச முடியாது. அண்டர் தி கண்ட்ரோல் என்பதுதான் சரி என சீமான் தெரிவித்தார்.

கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் பதவி..! விஜய், சீமானிடம் அதிமுக பேரம்..!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் தமக்கு துணை முதல்வர் பதவி தருவதாக அதிமுக பேரம் பேசியது; இதனையே தவெக தலைவர் விஜய்யிடமும் அதிமுக பேரம் பேசி இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் திலளித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் 90 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தருவதாக கேட்டதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

இதனையே விஜய்க்கு முன்னர் என்னிடமும் அதிமுக பேசியது. துணை முதல்வர் பதவி தரமாட்டேன் என அதிமுக சொல்லி இருக்காது. இரு கட்சிகளுக்கும் ஒத்துவராத சூழ்நிலையால் கூட்டணி அமையமால் பிரிந்து இருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி போல பேரணி பேசிக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் கூட்டணி வேறு; ஆட்சிக்கான கூட்டணி வேறு என்று நான் எப்போதும் கூறவே இல்லை. 2006-ஆம் ஆண்டு தேர்தலைப் போல, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வரும் போது நாம் தமிழர் கட்சியின் முடிவு குறித்து அப்போது தெரிவிப்போம்.

நாங்கள் ஆட்சி மாற்றம்- ஆள் மாற்றத்துக்கானவர்கள் அல்ல.. அடிப்படையையே மாற்றுகிறவர்கள். கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல.. அந்த கட்டிடத்தையே இடித்துவிட்டு புதியதாக கட்டுகிறவன் நான். இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மாநில தன்னாட்சி பேசுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ்; எதிர்த்து போராடியது தமிழ்நாடு. இந்தி மொழியை திணித்தவனுடன் கூட்டணி வைத்தது திராவிட கட்சிகள்; மாநில உரிமைகளை பறித்த போது ஆட்சியில் இருந்தவர்களும் இவர்கள்தான். இந்த கட்சிகள்தான் இன்று தனித்த குணம், தன்னாட்சி என்று பேசுகின்ற்ன.

டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இவ்வளவு நாள் அப்படி இருந்துள்ளதா? பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அவுண்ட் ஆப் கண்ட்ரோல் என பேச முடியாது. அண்டர் தி கண்ட்ரோல் என்பதுதான் சரி என சீமான் தெரிவித்தார்.

சீமான் குமுறல்: தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலம்..!

ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாகத் தொழில் புரியும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது என நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில்,” தமிழ்நாடு முழுவதுமுள்ள தானி (ஆட்டோ) வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போதிய வருமானமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டு தானி வாகனங்களுக்கான பயணக் கட்டணத்தை 1.8கி.மீ தூரத்திற்கு ரூ.25, அடுத்துவரும் ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.12, காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 எனவும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் எரிபொருள் விலையானது பெட்ரோல் ரூ.60, டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் எரிபொருட்களின் விலை இருமடங்கு அளவிற்கு உயர்ந்து தற்போது ரூபாய் 100ஐ கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான தானிகள் எரிகாற்றில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், எரிகாற்று விலையும் வாங்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தானி வாகனங்களுக்கான கட்டணம் மட்டும் 12 ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல் பழைய கட்டண அளவிலேயே உள்ள காரணத்தினால் தானி ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தானிகளுக்கான தரச்சான்றிதழ் மற்றும் காப்பீடு தொகையையும் கட்டுக்குள் வைத்திருக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. மேலும், ‘தானிகளுக்கான பயணக் கட்டணத்தை எரிபொருள் விலைக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும்’ என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தானி ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.

மேலும், தானி வாகன சேவையை முழுமையாக ஆக்கிரமித்து, தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாகத் தொழில் புரியும் தானி ஓட்டுநர்கள், தானி ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கட்டண உயர்வு உள்ளிட்ட தானி ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பது கொடுங்கோன்மையாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள தானி கட்டண உயர்வினை மாற்றி அமைக்க வேண்டும், இணைய வழி அபராதங்களைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தானி ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனக் கோருகிறேன். மேலும், தானி சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள மாநில அரசு செய்துள்ளதுபோலக் குறைந்த பிடித்த தொகையில் ‘தானி சேவைக்கான முன்பதிவு செயலியை’ அரசு சார்பில் உருவாக்கி தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: நரேந்திர மோடி என்னை சந்திக்க வரவில்லை..! அதனால் அவரை சந்திக்க போவதும் இல்லை..!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சியில் இன்று செய்தியாளர்களின் கேளிவிக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன். திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்.

நான் ஆள் சேர்த்துக் கொண்டு சண்டக்குப் போகிறவன் அல்ல. பிரபாகரனை வீழ்த்த உலக நாடுகளின் படையை துணை தேடி சிங்களர் வந்தனர்; ஆனால் அத்தனை படையையும் எதிர்க்க எந்த நாட்டிடம் உதவி கோரவில்லை பிரபாகரன். அதே மரபில் என் எதிரியை நான் தனியாகவே சந்திப்பேன். ஒரு நாய், 4 நாய்களை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் சரி; ஆனால் ஒரு புலி, 10 புலிகளை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் நன்றாக இருக்காது.

தனித்து நிற்பதற்குதான் வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள்; தனித்து நிற்கிறோம்; மோதுகிறோம். கொள்கையே இல்லாமல் எப்படி கூட்டணி அமைக்க முடியும் என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை; கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்பது மரபா? சட்டமா? நாங்கள் யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டுதான் களத்துக்கு வந்தவர்கள்.

யாரை எதிர்க்கிறோம் என்பது தெரியாமல் அரிவாளை தூக்கிக் கொண்டு வீதியில் நின்று கொண்டு எவனை வெட்டலாம் என தேடவில்லை. யாரை வீழ்த்த வேண்டும் என்ற முடிவுடனேயே போருக்கு வந்துள்ளோம். அதனால் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. அடுத்த 4 மாதங்களில் யார் யாருடன் கூட்டணி என்பது எல்லாம் தெரிந்துவிடும். பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என சீமான் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சீமான்: திமுக அழிக்க வேண்டும் என்ற தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்..!

திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சியில் இன்று செய்தியாளர்களின் கேளிவிக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன். திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்.

நான் ஆள் சேர்த்துக் கொண்டு சண்டக்குப் போகிறவன் அல்ல. பிரபாகரனை வீழ்த்த உலக நாடுகளின் படையை துணை தேடி சிங்களர் வந்தனர்; ஆனால் அத்தனை படையையும் எதிர்க்க எந்த நாட்டிடம் உதவி கோரவில்லை பிரபாகரன். அதே மரபில் என் எதிரியை நான் தனியாகவே சந்திப்பேன். ஒரு நாய், 4 நாய்களை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் சரி; ஆனால் ஒரு புலி, 10 புலிகளை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் நன்றாக இருக்காது.

தனித்து நிற்பதற்குதான் வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள்; தனித்து நிற்கிறோம்; மோதுகிறோம். கொள்கையே இல்லாமல் எப்படி கூட்டணி அமைக்க முடியும் என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை; கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்பது மரபா? சட்டமா? நாங்கள் யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டுதான் களத்துக்கு வந்தவர்கள்.

யாரை எதிர்க்கிறோம் என்பது தெரியாமல் அரிவாளை தூக்கிக் கொண்டு வீதியில் நின்று கொண்டு எவனை வெட்டலாம் என தேடவில்லை. யாரை வீழ்த்த வேண்டும் என்ற முடிவுடனேயே போருக்கு வந்துள்ளோம். அதனால் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. அடுத்த 4 மாதங்களில் யார் யாருடன் கூட்டணி என்பது எல்லாம் தெரிந்துவிடும். பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என சீமான் தெரிவித்தார்.

H.ராஜா: சீமான் வீட்டுக்குள் ஏன் போனீங்க… இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க..!

ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் பொய் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருப்பவர் சீமான். அதனால் அனாவசியமாக சீமானை இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க.. இது ரொம்ப தப்பு என H. ராஜா தெரிவித்தார். தஞ்சாவூரில் H. ராஜா இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.  அப்போது, சீமான் வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருவரை கைது செய்த காவல் ஆய்வாளரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீங்க நோட்டீஸை சர்வ் செய்வது என்றால் என்ன? நோட்டீஸை வீட்டில் ஒட்டிவிட்டுப் போனால் முடிந்துவிட்டது. ஆக ஒட்டிவிட்டுப் போக வேண்டியதுதானே.. இதன் பின்னர் சீமான் வீட்டுக்குள் ஏன் போனீங்க? ஆகவே இந்த அரசாங்கம்.. ஈ.வெ. ராமசாமி நாயக்கரை சரியான முறையில் சீமான் அவர்கள் விமர்சித்து வருகிறார். இதனால் ஈ.வெ. ராமசாமியின் கைக்கூலிகள் இந்த மாதிரி மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

சீமான் மீதான புகார் என்பது நீதிமன்றத்தில் இருக்கிறது.. சட்டப்படி நீதிமன்றம் நடக்கட்டும். ஆனால் எல்லோரது கவனத்துக்காகவும் சொல்கிறேன். உச்சநீதிமன்றம், உடலுறவு தொடர்பாக அண்மையில் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது; இருவரும் பரஸ்பரம் ஒப்புதலுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் அல்ல என்பது தீர்ப்பு. அதனால் சட்டம் அதன் கடமையை செய்யட்டும். ஆய்வாளர் எதற்காக இப்படி செயல்பட வேண்டும்? ஆகவே இந்த அரசாங்கம், அவங்களால் தாங்க முடியவில்லை. ஈவெ ராமசாமி நாயக்கரின் பொய் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருப்பவர் சீமான். அதனால் அனாவசியமாக சீமானை இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க.. இது ரொம்ப தப்பு.

தமிழ்நாட்டில் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க காரணம் யார்? ஆட்சிக்கு வந்த உடன் இந்த திராவிடியன் ஸ்டாக் என்ன வேலை செஞ்சீங்க? அனைத்து பள்ளிக் கூடங்களிலும் நீதி போதனை வகுப்புகளை கேன்சல் செய்தீங்க.. அறம் செய்ய விரும்பு என்பதை நீக்கினீர்கள்.. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை எடுத்தீங்க.. தீய சக்திகள் ஆட்சிக்கு வந்த காரணத்தால் 1967-ல் இருந்து சமூக நன்னடத்தை கெட்டுப் போய்விட்டது. திராவிடியன் ஸ்டாக்கை தமிழ்நாட்டில் இருந்து அடித்து விரட்டாமல் பலாத்கார வன்முறைகளை நிறுத்த முடியாது என H.ராஜா தெரிவித்தார்.

விஜயலட்சுமி கண்ணீர் வீடியோ: நான் பாலியல் தொழிலாளியா சீமான்.. எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது..!

நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த வழக்கு தற்போது சூடுபிடித்து உள்ளது. இதுதொடர்பாக சீமான் வீட்டில் நடைபெற்ற சண்டை, விஜயலட்சுமியின் அடுத்தடுத்த வீடியோக்கள் என விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சீமான் புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என கனிமொழி கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு நீங்கள் யார், நீங்கள் என்ன நீதிபதியா, என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா, அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா, என் தாய், என் சகோதரிகள் எல்லாம் இல்லையா, என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா? நான் கேட்டதில் உங்களுக்கு கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்கு என்ன பெயர், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ந்து அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.

Enjoyment without responsibility என்று உங்களது தலைவர் பெரியார்தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறு, இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட விஜயலட்சுமி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,” நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான். என்னை பாலியல் தொழிலாளி என்று எப்படி சொல்லலாம். நான் பாலியல் தொழிலாளி என்றால், எதற்காக பெங்களூருவில் என்னுடைய சகோதரியுடன் கஷ்டப்பட போகிறேன்?. இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம். ஆனால் இனி நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது. என்ன செய்ய போகுது பார்” என விஜயலட்சுமி வேதனையில் கண்ணீர் விட்டபடி வீடியோவில் பேசி இருந்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீமானை சரமாரியாக கேள்வி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி

மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத” என சீமானை காட்டமாக விமர்சித்து விஜயலட்சுமி புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 -ஆம் ஆண்டு வளசரவக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே, அந்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.

எனினும், சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் காவல்துறை வைத்து இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமானின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், சீமான் மீதான வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதையடுத்து, இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்க வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், என்ன பாலியல் குற்ற வழக்கு.. நிரூபிக்கப்பட்டு இருக்கா.. சேட்டை பண்னக்கூடாது.. திருமணம் என்ற ஒப்பந்தத்திற்குள்ளே போகல.. 6,7 மாதங்கள் தான் பழகியிருப்போம்.. அதன்பிறகு, 2008, 2009, 2010 கால கட்டங்களில் நான் தொடர்ச்சியாக சிறையில் தான் இருந்தேன். 2009 -க்கு பிறகு தொடர்பு இல்லை” என்று காட்டமாக பேசினர். சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், என்னதான் அவளோட பிரச்சினை என்று பிரஸ்காரங்க கேள்வி கேக்கனுமாம்.. சீமான், 2023 ல் எதுக்கு நீ 50 ஆயிரம் போட்ட.. நீ என்னமோ பிள்ளைங்க வளர்ந்துடுச்சு.. அது வளர்ந்துடுச்சு.. இது வளர்ந்துடுச்சு.. அப்புறம் எதுக்குடா என்கிட்ட வீடியோஸ் வாங்கனீங்க.. எதுக்கு வீடியோஸ் வாங்குனீங்க.. நீ வாங்கி வைப்ப.. அப்புறம் நான் வாயை மூடிட்டு இருப்பேன். அப்புறம் உங்க ஆட்களே வந்து டெலிகாஸ்ட் பண்ணுவேன் என மிரட்டுவாங்க..

இதுக்குள்ளயே நான் வந்து சாகணுமா? நீ ஆம்பளயா இருந்தா அநாகரீகமாக பேசாத சீமான்.. 2008 ல இருந்து வெறும் 6 மாதம் தான் பழகினேனாம். அப்புறம் எதுக்குடா நான் 2011 ல் வந்து புகார் கொடுப்பேன். 2011-ல் நீங்க கொடுத்த டார்ச்சருக்குதான் நான் போட்ட துணியோட வந்து கமிஷனர் ஆபிசில் புகார் கொடுத்தேன். அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே.. நீ பேசினால் உன்னை விட கேவலமாக பேசுறதுக்கு எனக்கு தெரியும். சும்மா டிராமா போடாத.. நேற்று வரைக்கு என்ன சொல்லிட்டு இருந்த..

நடிகை யாருன்னே தெரியாது… திமுக கூட்டிட்டு வந்தாங்கன்னுதான சொல்லிட்டு இருந்த.. நேற்று தான சொல்லுற.. ஆமா நான் 50 ஆயிரம் கொடுத்துட்டு இருந்தேன்னு.. எதுக்கு மதுரை செல்வம் என் கிட்ட வீடியோ வாங்கிட்டு இருந்தான். எதுக்கு 50 ஆயிரம் என் அக்கவுண்டில் போட்டீங்க.. மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத” என விஜயலட்சுமி தெரிவித்தார்.

சீமான் நீ விரும்பித்தானே உறவு வெச்சீங்க..அப்புறம் அதில் என்ன பிரச்சனை..!

நீ விரும்பித்தானே உறவு வெச்சீங்க..அப்புறம் அதில் என்ன பிரச்சனை? பிடிக்கலை பிரிந்து போயிட்டீங்க.. 15 வருஷமாகிடுச்சு.. விரும்பி வந்து உறவுவெச்சுட்டு போனவ அவ…என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகையை பலாத்காரம் செய்தது தொடர்பான புகார் மீதான விசாரணைக்காக சீமான் நேற்று இரவு ஆஜரானார். அவரிடம் 1.15 மணிநேரம் காவல்துறை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர் காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களின் சீமான் பதிலளித்தார்.

அப்போது, காவல்துறைக்கு அரசு தரப்பில் அழுத்தம் இல்லாமல் எப்படி இருக்கும்? காவல்துறையினரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசு தரப்பில் இருந்து அழுத்தம் தரப்பட்டதுதான் காரணம். நானோ என் மனைவியோ மிகவும் மன உறுதியானவர்கள். உலகம் முழுவதும் எனக்கு சொந்தங்கள் இருக்கிறார்கள். என் பிள்ளைகள், தம்பிகள் வலியுடன் குரல் செய்திகளை பகிரும் போது எனக்கு வலி அல்ல.. வெறியாக இருக்கிறது.

பலாத்கார புகாரால் பாதிப்பு இல்லை இது என் வளர்ச்சிக்கு காரண்மா என்பது தெரியாது; எனக்கு இடையூறாக இருந்திருந்தால் புதியதாக சின்னங்களைக் கொடுத்தார்கள்; எந்த வேட்பாளரும் என் பிள்ளைகள் அறிமுகமான பிள்ளைகள் இல்லை; நானும் புகழ்பெற்ற நடிகனோ, தலைவரின் மகனோ இல்லை. எங்களை நம்பி 36 லட்சம் வாக்குகளைக் கொடுத்து தனித்தே நின்று அங்கீகரத்தை தந்துள்ளனர். அப்படியானால் இப்படியான புகார்களால் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றுதானே அர்த்தம்.

சிறையில் இருக்கும் போது நடிகையுடன் இருந்ததாக கூறுகின்றனர்; சிறையில் இருக்கும் போது அலைபேசியே இருக்காது; கருக்கலைப்பு செய்ததை எல்லாம் உறுதிப்படுத்தாமல் நீதிமன்றம் பதிவு செய்திருக்கக் கூடாது; இதற்காகத்தான் நான் உச்சநீதிமன்றம் போக வேண்டிய தேவை இருந்தது. அந்த நடிகை என்ன கஷ்டத்தில் வந்து சந்தித்ததாக சொல்கிறீர்கள்.. அப்புறமாக ரூ60 லட்சம் எனக்கு கொடுத்ததாக சொல்கிறீர்கள்.. அப்புறம் ரூ50,000, ரூ50,000 என்னிடம் வாங்கியதால சொல்றீங்க.. இது எல்லாம் எப்படி? கஷ்டத்தில் இருக்கிறவர் எனக்கு எப்படி ரூ60 லட்சம் கொடுக்க முடியும்? அப்படி ரூ.60 லட்சம் கொடுத்து இருந்தால் முதல் புகாரில் ஏன் அதை பதிவு செய்யவில்லை.. நீங்க திருமணம் ஆகிவிட்டது என்கிறீர்கள்..

அதை முதல் புகாரில் திருமணமானதாக சொல்லி இருக்கனும்.7 முறை கருக்கலைத்ததாக சொல்கிறீர்கள்.. அதை முதல் புகாரில் 7 முறை கருக்கலைத்தோம் என சொல்லி இருக்கனும். 2-வது முறையாக புகார் தந்த போதாவது சொல்லி இருக்கனும். இல்லை. ஆனால் 2024-ஆம் ஆண்டு தேர்தலின் போதுதான் இதை எல்லாம் சொல்கிறீர்கள். நடிகைக்கு என் மீது காதல் இல்லை காதல் என ஒன்று இருந்திருந்தால், காதலித்த ஒரு பெண் உலகத்தில் யாராவது ஒருவர் இப்படி முச்சந்தியில் நின்று இப்படி கத்திக் கொண்டு இருப்பாங்களா? இது காதலா? கன்றாவியா? எதையாவது பேசிக் கொண்டிருக்காதீங்க.. எந்த ஒரு பாலியல் வன்புணர்வுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை நீங்கள்..

ஏனெனில் அங்கே சீமான் இல்லை.. இங்கே சீமான் இருக்கிறான்… சீமானை சீண்டனும்.. ஏனெனில் ஒன்றே ஒன்றுதான்.. அவர்களால் என்னை சமாளிக்க முடியவில்லை. என்னுடைய உளவியல் என்பதே இவர்களை உளவியலா சாகடிப்பதுதான். என் மனைவிக்கு இதெல்லாம் சாதாரணம் என் மனைவி என்னைவிட மன உறுதி கொண்டவர்; அவர் பிறக்கும் போதே ஒரு அமைச்சர் மகள்; இந்திய குடிமைப் பணிக்கு தேர்வு எழுதி எழுதி பயிற்சி எடுத்தவங்க.. என்னை விரும்பியதால் அதனை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டார்.

அப்புறம் சட்டம் படித்து வழக்கறிஞராக இருக்கிறார். என்னைவிடவும் சிறப்பாக பேசக் கூடியவர்; அவர் காளிமுத்துவின் மகள். அதனால் என் மனைவிக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.. என் வீட்டில் இதை எல்லாம் விவாதிக்கவும் மாட்டோம்; பேசவும் மாட்டோம். அப்படியே நான் ஒரு பெண்ணை தூக்கிட்டுப் போய் கதற கதற வன்புணர்வு செஞ்சிவிட்டமாதிரி நீங்க செய்து கொண்டிருக்கீங்க.. ஒரு நடிகை இவ்வளவு காலம் இருந்துவிட்டு தெருத்தெருவாக என்னை அசிங்கப்படுத்தும் போது எல்லோரும் அதை ரசித்துக் கொண்டே இருந்தீங்க..

அவரிடம் ஒரு முறைகூட என்னதான் உங்க பிரச்சனை என கேள்வியே கேட்கவில்லையே? திருமணமாகிவிட்டது.. குழந்தையாகிவிட்டது.. இவ்வளவு பெரிய மக்கள் முன்னாடி தினம் பேசிக் கொண்டிருக்கிற இந்த மகனை, மக்கள் பிரச்சனைக்கு தினம் நிற்கிற மகனை இப்படி கேவலப்படுத்துகிறீர்களே? என ஏன் யாரும் கேட்கவில்லை? நீ விரும்பித்தானே உறவு வெச்சீங்க..அப்புறம் அதில் என்ன பிரச்சனை? பிடிக்கலை பிரிந்து போயிட்டீங்க.. 15 வருஷமாகிடுச்சு.. எனக்கு கல்யாணம் ஆகியே 14 வருஷமாச்சு.. இதை எல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை?

நான் பேசுறது மட்டும் முகம் சுழிக்க வைக்கிறதா? 15 வருஷமாக என்னை பழிபோட்டு அவமானப்படுத்துறீங்க? என்னைய என் குடும்பத்தை என் பிள்ளைகளை குதறி தின்றீங்களே எல்லோரும்.. என் மகன் பெரியவனுக்கு நல்லா விவரம் தெரிந்துவிட்டது.. அதை எல்லாம் அவன் பார்த்தா, அவன் நண்பர்கள் பார்த்தா என்னாவாங்க? அப்போ எல்லாம் உங்களாள் முகம் சுழிக்க முடியலை? கேவலப்படுகிறவன், அவமானப்படுகிறவன் சீமானுன் அவன் பிள்ளைகளும்.. இந்த என் மகள் நிற்கிறாள்..

இவ என்ன நினைப்பாள் என்னை? அதெல்லாம் உங்களுக்கு அவமானமாக, கேவலமாக இல்லையே? முகம் சுழிக்கிற முகத்தை ஒரு முறை காட்டு பார்ப்போம்.. எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்.. என்னை சொல்லும் போது சிரிக்கிறதே அந்த முகம்; ஆனால் என் ஆதங்கத்தை சொல்லும் போது அந்த முகம் சுழிக்குதே ஏன்? இந்த திமுகவில் இருக்கிற ஒரு தலைவன் இதை பற்றி பேச தகுதியோட இருக்கான்னு சொல்லுடா? ஒருத்தன்.. ஒருத்தனுக்கு தகுதி இருக்கிறதா? பாலியல் குற்றவழக்கு… பாலியல் குற்றவழக்கு… என்ன பாலியல் குற்றம்? நிரூபிக்கப்பட்டுள்ளதா? விரும்பி வந்து உறவுவெச்சுட்டு போனவ அவ… சேட்டை பண்ணிட்டு இருக்கக் கூடாது.. முகம் சுழிச்சா சுழிச்சுட்டு இரு… என சீமான் தெரிவித்தார்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி ஆவேசம்..! நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்..!

நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்.. எங்கப்பாவோட அந்த சகாப்தம் முடிந்து போய்விட்டது என சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி ஆவேசமாக பேசினார். நடிகை பலாத்கார வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இரவு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுமான வித்யா தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆவேசம் அடைந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடிகை பலாத்கார வழக்கில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானர். சீமானை இரவு 8 மணிக்கு ஆஜராக காவல்துறையினர் வரவழைத்தனர். இதனால் சென்னை வடபழனி சொகுசு விடுதியிலிருந்து சீமான் புறப்பட்டார். ஆனால் நடுவழியிலேயே நாங்கள் சொல்லும் நேரத்துக்கு வரலாம் என்று காவல்துறை உத்தரவிட சுமார் 1 மணிநேரம் சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ அருகேயே நடுசாலையில் சீமான் காத்திருந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு மேல், சீமானை காவல் நிலையத்துக்கு வரவழைத்தது.

ஆனால் சீமானின் வாகனம், காவல் நிலையத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக சீமானை காவல்நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுமாகிய வித்யா ராணியும் காவல் நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் பெண் காவலர்கள் அவரை காவல் நிலையத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, நாங்கள் ஒருவர் பின்னால் நின்றால் உயிர் போகிறவரை நிற்போம். என்னையே ஏன் பார்த்து இவ்வளவு பயப்படுறீங்க? என்னை அனுப்புவதாகத்தானே சொன்னீங்க.. அப்புறம் ஏன் தடுத்து பிரச்சனையை உருவாக்குறீங்க? நான் ஏதாவது பேசினேனா? ஆட்சியும் அப்படித்தான்… போலீசும் அப்படித்தான்.. அரசாங்கமும் அப்படித்தான்.. என்னமா நினைச்சுகிட்டு இருக்கீங்க.. உங்க கையில் எதுவும் இல்லை.. மேல சொல்றதை கேட்டுத்தான் ஆகனும்.. உங்க பரிதாபமான நிலைமை புரியது..

ஒரு தனிமனிதனை அரசியல் செய்யவிடாம இப்படி பண்றீங்க.. எங்கப்பனை ஒழிச்சீங்க.. அடுத்த தலைமுறை தமிழன் வந்தா அவரை ஒழிக்க ஆயிரம் வழி தேடுவீங்களா? நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்.. எங்கப்பாவோட அந்த சகாப்தம் முடிந்து போய்விட்டது.. யார் மக்கள் பிரச்சனையை பேசுறாங்கன்னு கண்ணுக்கு தெரியலையா? இந்த உயிர் உடம்பில் இருக்கும் வரை மக்களுக்காக நின்றே தீருவேன் என வித்யா ராணி தெரிவித்தார்.