அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி

மாற்றுத்திறனாளி மாணவி ஆர் ஷிவானி போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சாசி சிவசங்கர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகத்தில் 2024-2025 -ஆம் கல்வியாண்டில் + 2, SSLC தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 -ஆம் தேதி வரை நடைபெற்றன.+ 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி அந்த பணிகள் நிறைவடைந்தன.

அத்தனை தொடர்ந்து மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிளஸ்-2 தோ்வு முடிவுகள் மே-9-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், +2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்து இருந்தனர்.

இந்நிலையில், அரியலூர் CSI மேல்நிலைப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி R. ஷிவானி சமீபத்தில் வெளியான + 2 பொது தேர்வில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார் .அதனையடுத்து மாணவி R. ஷிவானி அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் , போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சாசி சிவசங்கரை, தனது தாய் பிரசன்னா தேவியுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வின் போது சாய்பாபா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ் எம் சந்திரசேகர், பள்ளியின் தாளாளர் புனிதவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நேற்று புதன்கிழமை, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நோயாளிகளிடம் தாயன்பு காட்டி சேவையாற்றும் செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவை ஆற்றும் செவிலியர்களை போற்றும் விதமாக உலக செவிலியர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

செவிலியர் பணியில் தம்மை அர்ப்பணித்து பெரும் போற்றுதலுக்குரியவராக திகழ்ந்தவர் நைட்டிங்கேல் அம்மையார். நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1974-ம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமையில், தலைமை மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலையில் VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துவிழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியினை செவிலியர் உமா மஹேஸ்வரி மற்றும் செவிலியர் மல்லிகா தொகுத்து வழங்கினார்கள்,செவிலியர் உமா மஹேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி. ஜெகதா அவர்கள் வாழ்த்து மடல் வாசித்தார். செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி. பத்மாவதி, ராசாத்தி , ஜெகதா, வசந்தி மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

தலைமை மருத்துவர் ஜெஸ்லின் , மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியர்கள் என பாராட்டி, தியாக மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைத்து செவிலிய சகோதர, சகோதரிகளுக்கும், செவிலியர் தின வாழ்த்துக்களை கூறி அனைவருக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார். தலைமை மருத்துவர் ஜெஸ்லின் அனைத்து செவிலியர்களின் சார்பாக தலைமைச் செவிலியர் பத்மாவதி அவர்களையும், தென்காசி மருத்துவமனையோடு இணைந்து செயலாற்றும் VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்களையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்கள் அனைவரையும் வாழ்த்தி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செவிலிய சகோதர சகோதரிகளின் ஆட்டம் பாட்டம் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் மருத்துவர் ஜெஸ்லின் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி.ஜெகதா நன்றி தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ: போதையில் பேருந்தில் ஸ்டேரிங்கின் மேல் படுத்து உறங்கிய ஓட்டுநர் ..!

போதையில் மயங்கியபடி பேருந்தில் ஸ்டேரிங்கின் மேல் படுத்து உறங்கிய ஓட்டுநரின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தை ஓட்டுநர் குடிபோதையில் இயக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி செல்வதற்காக 35 பயணிகளுடன் நேற்று அரசு பேருந்து புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மூர்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், பேருந்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து உடுமலை ரோடு கோமங்கலம் புதூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டு இருக்கும்போது, ஓட்டுநர் அருள் மூர்த்தி மது போதையில் இருக்கையிலேயே தள்ளாடினார். அதிர்ச்சி அடைந்த பயணிகள் என்னவென்று பார்த்தபோது ஓட்டுநர் இயல்பான நிலையில் இல்லை என தெரிய வந்துள்ளது.

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது, மது போதையில் உளறியபடி பேருந்தை அஜாக்கிரதையாக இயக்கியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டதால், பேருந்தை ஓட்டுநர் இயக்க முடியாமல் நடுவழியில் நிறுத்திவிட்டு மது போதையில் மயங்கியபடி பேருந்தில் ஸ்டேரிங்கின் மேல் படுத்து உறங்கி உள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீமான்: அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தினர்… குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றனர்..!

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல்! தமிழ்நாடே எதிர்நோக்கியிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்திருக்கும் பெரும் ஆறுதலாகும். பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் மத்தியிலும், பிறழ்சாட்சியாக மாறாது நெஞ்சுரத்தோடும், துணிவோடும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து நீதியின் பக்கம் நின்ற பெண்களின் செயல்பாடு போற்றத்தக்கது. நினைத்துப் பார்க்கவே முடியாத பாலியல் கொடூரங்களை நிகழ்த்திய அக்கொடுங்கோலர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகச் சரியான முடிவாகும்.

“அண்ணா.. அடிக்காதீங்கண்ணா..” எனப் பாலியல் குற்றவாளிகளிடம் சிக்குண்டுக் கதறிய தங்கையின் அழுகுரலும், விம்மலும் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவளின் அண்ணனாக இத்தீர்ப்பை முழுமனதோடு ஏற்கிறேன். சக உயிரான பெண்ணை காக்காமல் மண்ணைக் காக்க போராடி என்ன பயன்?

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன. பலதரப்பட்டத் தரப்பிலுமிருந்தும் போராட்டங்கள் வெடித்து, அரசியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டப் பிறகே, வழக்கை ஒன்றியப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றியது அன்றைய அதிமுக அரசு. அன்றைக்குக் குற்றவாளிகளைக் காப்பாற்ற துணைநின்ற அதிமுக, இன்றைக்கு தங்களால்தான் நீதிகிடைத்தது எனச் சொந்தம் கொண்டாடி, இதிலும் அரசியல் செய்ய முனைவது மிக இழிவானதாகும்.

அதனைப் போலவே, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ எனும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியைப் புறந்தள்ளி, பின்புலத்திலிருக்கும் அதிகாரப்புள்ளிகளைக் காப்பாற்றிய திமுக அரசுக்கும் இதனைப் பேச எந்தத் தார்மீகமும் இல்லை. இவ்விவகாரத்திலும் திமுகவும், அதிமுகவும் அறிக்கைப்போர் தொடுத்து, ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றஞ்சாட்டிக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானதாகும்.

இவ்வழக்கில் கிடைக்கப் பெற்றிருக்கும் நீதியானது, நியாயத்திற்காகப் போராடியப் பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் துணிந்து நீதிமன்றத்தின் படியேறிய பெண்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். இத்தீர்ப்பின் மூலம் பாலியல் குற்றவாளிகள் அனுபவிக்கப்போகும் சிறைத்தண்டனை, பெண்களைப் போகப் பொருளாக எண்ணி, அத்துமீற நினைக்கும் அத்தனைப் பேருக்குமான பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும்.

ஆகவே, மரணம்வரை வாழ்நாள் தண்டனை எனக் கிடைத்திருக்கும் இத்தீர்ப்பு மேல்முறையீடுகளில் நீர்த்துப் போகாமலிருக்க வலுவான சட்டப்போராட்டங்களை நடத்த வேண்டுமெனவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், அவர்களுக்கானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடும் நடவடிக்கைகளை மற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்தார்.

மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்..!

மத்திய பிரதேசத்தில் பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசுகையில், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசுகையில், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார்.

இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இதையடுத்து, தனது சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரினார். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

ஜெய்ராம் ரமேஷ் கேள்வி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன..?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமெரிக்காவின் பங்கு என்ன என ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியுள்ளார். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. இது முதல் முறையாக நடக்கிறது. பிரதமர் மோடி இது குறித்து எதுவும் கூறவில்லை.

அமெரிக்காவின் பங்கு மிகவும் முக்கியமானது, அவர்களால்தான் இந்தப் போர் நின்றது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகிறார். வெளியுறவு மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் இதற்குப் பதிலளிக்கவில்லை. அமெரிக்காவின் பங்கு என்ன என்பது குறித்து பிரதமர் மோடியும், வெளியுறவு மந்திரியும் இதுவரை ஏன் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

முன்னாள் ராணுவ வீரர்கள்: செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!

செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். ஜம்மு -காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதல் போர் நடவடிக்கை தான் என்றும் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நேற்று அதிகாலையில் சீனா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் இந்தியா எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா வழங்கிய பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதற்கிடையே பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மேலும் மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்தார். அப்போது, “2 நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக கூறுகிறது. .

ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” செல்லூர் ராஜு தெரிவித்தார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், செல்லூர் ராஜூ பேச்சை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தினர். எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் என முன்னாள் ராணுவத்தினர் பேசினார்.

தமிமுன் அன்சாரி: பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது..!

பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசுகையில், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசுகையில், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார். இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

இது குறித்து தமிமுன் அன்சாரி பேசுகையில். நமது ராணுவத்தில் பணியாற்றும் ஒரு பெண் உயர் ராணுவ அதிகாரியை இழிவுபடுத்தும் வகையில், அவரை மதத்துடன் தொடர்புப்படுத்தி, எதிரி நாட்டின் மகள் என்று கூறக்கூடிய அளவிற்கு பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது. தேசப்பற்றை அரசியல் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு, கர்னல் சோபியா குரேஷியின் தியாகம் பற்றி பேச தகுதி இல்லை என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் வேண்டுகோள்: குழந்தைகளை ஆக்சன் சினிமா , செல்போனில் ஆக்சன் கேம் வீடியோ விளையாட அனுமதிக்காதீர்கள்..!

குழந்தைகளை ஆக்சன் சினிமா , செல்போனில் ஆக்சன் கேம் வீடியோ விளையாட அனுமதிக்காதீர்கள் என காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹுப்பள்ளி மொருசவீரா மடத்திற்கு அருகிலுள்ள காமரிபேட்டை குருசித்தேஷ்வர் நகரில் வசித்து வந்த மாணவன் சேத்தன் ரக்காசகி. இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு செல்ல இருந்தான். சம்பவத்தன்று மாலையில் வீட்டின் தேனீர் அருந்திவிட்டு தனது தாயிடம் புதிய ஆடைகளை எடுத்து வைக்க சொல்லி விட்டு தெருவில் விளையாட சென்றான்.

இம்மாணவனும், எதிர்வீட்டில் வசிக்கின்ற 6-ம் வகுப்பு மாணவனும் நண்பர்கள் ஆவார்கள். 2 பேரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்போனில் ஆன்லைன் வன்முறை வீடியோ விளையாட்டில் வருவதுபோது கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதில் ஆத்தரம் அடைந்த 6-ம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு ஓடிச் சென்று ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு வந்து 9-ம் வகுப்பு மாணவன் சேத்தன் ரக்காசகியின் வயிற்றில் குத்தி விட்டு வீட்டுக்கு சென்று பதுங்கி கொண்டான்.

படுகாயமடைந்த சேத்தன், கே.எம்.சி-ஆர்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து காமரிபேட்டை காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று 6-ம் வகுப்பு மாணவனை காவல் நிலையத்துக்கு காவல் வாகனத்தில் அழைத்து செல்ல முற்படும்போது அவர்களுடன் செல்ல மறுத்து சிறுவன் அடம் பிடித்தான். அம்மா காவல்துறை கூப்பிட்டு போறாங்க, நான் போக மாட்டேன் என குழந்தை போல் அடம்பிடித்தான்.

தான் செய்த விபரீத காரியத்தால் தன்னுடன் விளையாடிய நண்பனின் உயிர் போய் விட்டது என்று கூட அந்த சிறுவனுக்கு தெரியவில்லை. அந்த சிறுவனை சமாதானப்படுத்தி வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கே.எம்.சி.ஆர்.ஐ மருத்துவமனையில் காவல் ஆணையர் சசிகுமார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் சசிகுமார் பேசுகையில், 2 சிறுவர்களும் எதிர் எதிர் வீடுகளை சேர்ந்தவர்கள். ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சாதாரண விசயத்திற்காக கொலையில் முடிந்துள்ளது. சட்ட நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும். கொலையுண்ட சிறுவன் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தான். ஒரே மகன். பெற்றோர் ரொட்டி விற்று பிழைப்பு நடத்துகிறார்கள்.

இது ஒரு மனதை உடைக்கும் சம்பவம். கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பம் ஏழ்மையானது. பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளைஆக்சன் சினிமா , செல்போனில் ஆக்சன் கேம் வீடியோ விளையாட அனுமதிக்காதீர்கள். அது சிறுவர்களின் மனநிலையை மனநிலையை வன்முறைமிக்கவர்களாக மாற்றிவிடும் என காவல் ஆணையர் சசிகுமார் தெரிவித்தார்.

3 வயதில் ஆசிட் தாக்குதலில் பார்வையிழந்த மாணவி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை!

3 வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்த மாணவி 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து கஃபி அசத்தியுள்ளார். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்த கஃபி (Kafi). என்ற மாணவி 2011 -ஆம் ஆண்டு தனது மூன்று வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்தார். மூன்று வயதில் இருந்தே பல்வேறு சிரமங்களை சந்தித்த கஃபி சண்டிகரில் செக்டார் 26 இல் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் ஆடியோ புக்குகள் மூலம் கஃபி பயின்று வந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து கஃபி அசத்தியுள்ளார்.  கஃபி டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் ஊடகத்துக்குப் பேட்டியளித்த கஃபி, 3 அண்டை வீட்டார் தன் மீது அமிலத்தை ஊற்றினார்கள்.

ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிக்சையால் தான் உயிருடன் இருப்பதாகவும், உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களால் என் பார்வையைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் ஆசிட் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதி முடித்த கஃபி சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்து இருக்கிறேன். மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது எனது கனவு என கஃபி தெரிவித்தார்.