பீகாரில் 2016 முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் சட்டவிரோதமாக நடந்து வருகின்றன. கடந்த வாரம் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழநதன. 6 பேர் கண்பார்வை இழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ஷிஷ்வாவிலுள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்தது. அங்கு, நான்காம் வகுப்பு மாணவனான அந்தச் சிறுவன், பள்ளி நேரத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் வீட்டிற்குத் திரும்பியபோது, நடக்கச் சிரமப்பட்டு, தள்ளாடி வருவதை கண்டு அவனின் தாய் ரிஸ்வானா காதுன் அதிர்ச்சியடைந்தார். அவனது நிலையைக் கண்டு கவலையடைந்த குடும்ப உறுப்பினர்கள், உடனடியாக அவனது நண்பர்களிடம் என்ன நடந்தது என்று கேட்கத் தொடங்கினர்.
அப்போது, அன்று அந்த சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத கழிப்பறைக்குச் சென்றுள்ளான். அந்தப் பகுதி ஆள் நடமாட்டம் இல்லாததாக இருப்பதால், அதைச் சுற்றி அடர்ந்த புதர்கள் வளர்ந்துள்ளன. அங்கு பாட்டில்கள் அடைக்கப்பட்ட பல அட்டைப் பெட்டிகள் கொட்டப்பட்டிருந்ததை அந்த சிறுவன் கண்டான். அவன் அந்தப் பாட்டில்களில் ஒன்றை வெளியே எடுத்து, அது குளிர்பானம் என்று நினைத்து அதை குடித்துள்ளான்.
பின்னர், வீட்டிற்குத் திரும்பும் வழியில் அவனது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது,” என நண்பர்கள் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்தச் சிறுவன் உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவர்கள் அவனைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தனர். பின்னர், பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தலைமை ஆசிரியர் நடத்திய சோதனையில், 23 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் மது கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.