சஞ்சய் ராவத் கடும் விமர்சனம்: தமிழ்நாடு, கேரளா பக்கம் போங்க..! மகாராஷ்டிராவில் இந்தி திணிக்க தேவையில்லை..!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு என தேவைப்படும் மாநிலங்களில் இந்தியை போதியுங்கள். மகாராஷ்டிராவில் பள்ளிப் பாடங்களில் திணிக்க வேண்டிய அவசியமில்லை” என சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நிலவுகிறது.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி இம்மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறும்போது, “அரசு அலுவல் மொழியாக மராத்தி இருக்கையில் இந்தி போதிக்கத் தேவையில்லை. முதலில் மராத்தியை முழுமையாக கட்டாயமாக்குங்கள்.

பணி, தொழில் மற்றும் வியாபாரங்களில் முதலில் மராத்திக்கு மதிப்பு கிடைப்பது அவசியம். இந்தி மொழியின் பாலிவுட் பட உலகம் இங்குதான் உள்ளது. இந்தி மொழிப் பாடல்களை நாம் ஏற்கெனவே பாடுகிறோம். இதன் பிறகுமா எங்களுக்கு இந்தி போதிக்கிறீர்கள்?

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வடகிழக்கு என தேவைப்படும் மாநிலங்களில் இந்தியை போதியுங்கள். மகாராஷ்டிராவில் மராத்திதான் முதல் தேவை. இந்தி மீதான காதல் நாடு முழுவதிலும் உள்ளபோது அதை பள்ளிப் பாடங்களில் திணிக்க வேண்டிய அவசியமில்லை” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்: RSS அடுத்த பிரதமரை மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கும்..!”

பிரதமர் நரேந்திர மோடி 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் RSS தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை RSS விரும்புகிறது. ஆகையால், பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார் என உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா தலைநகரம் மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சஞ்சய் ராவத் பதிலளித்தார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி RSS தலைமையகம் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக, RSS அமைப்பில் என்ன விவாதங்கள் நடந்தாலும், அது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் நடக்கும். தற்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன.

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே RSS தலைமையகத்துக்குச் சென்றார். எனக்குத் தெரிந்தவரை, அவர் 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் RSS தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை RSS விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார்” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

சிவசேனா உத்தவ் அணி சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனைக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!

பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையாவின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில், சிவசேனா உத்தவ் அணி எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிற்கு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மும்பை அருகே மீரா பயாந்தர் மாநகராட்சியில் கழிப்பறை கட்டி, பராமரிக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல் என்று சஞ்சய் ராவத் புகார் அளித்திருந்தார். இந்த ரூ.100 கோடி ஊழல் புகாரில் பாஜகவைச் சேர்ந்த கிரிட் சோமையா, அவரது மனைவிக்கும் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதை தொடர்ந்து, இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் தங்கள் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டதாக மேதா சோமையா, சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மும்பை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஆர்த்தி குல்கர்னி முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர்கள், இந்த தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும், சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் அளிக்க கோரியும் இரு மனுக்களை தாக்கல் செய்தனர். இவற்றை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் ஆர்த்தி குல்கர்னி, சஞ்சய் ராவத்துக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.