உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்ய தாக்கரே தேர்வு..!

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் மும்பையில் உள்ள கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்பாதாஸ் தன்வே, “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் உத்தவ் தாக்கரேவின் இல்லமான ‘மாதோஸ்ரீ’யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஸ்கர் ஜாதவ் சட்டப் பேரவைத் தலைவராகவும், சுனில் பிரபு தலைமை கொரடாவாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இரு அவைகளின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்ய தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என அம்பாதாஸ் தன்வே தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே: ஜே.பி. நட்டா “ஒரு கட்சி ஒரு தேசம்” என்று சொன்னதை நோக்கி நாடு நகர்கிறதா..!?

ஜே.பி. நட்டா சில ஆண்டுகளுக்கு முன்பு இனி ஒரே ஒரு கட்சி மட்டும்தான் இருக்கும் என்று சொன்ன அந்த திசையை நோக்கித்தான் அவர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சி படுதோல்வி கண்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் மகா விகாஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 4 மாதங்களில் எப்படி சூழ்நிலை மாறியது என்று தெரியவில்லை. இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.

இனி ஒரே ஒரு கட்சி மட்டும்தான் இருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஜே.பி. நட்டா கூறியிருந்தார். அந்த திசையை நோக்கித்தான் அவர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு கட்சி ஒரு தேசம். மக்களிடம் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.

மகாயுதி கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களது வெற்றி சுனாமி அலை போன்று உள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சுனாமி வருவதற்கு அவர்கள் என்ன செய்தனர்? 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின்போது ஒரு குடும்பத் தலைவனாக எனது பேச்சை மகாராஷ்டிர மாநில மக்கள் கேட்டனர். ஆனால் இப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்: மகாராஷ்டிரா மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல…! ஏதோ பெரிய சதி இருக்கிறது..!

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது.. மகாராஷ்டிரா மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல.. என உத்தவ் தாக்கரே சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அடங்கிய மகா விகாஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இக்கூட்டணி 57 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. அதிலும், 95 தொகுதிகளில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சஞ்சய் ராவத் பதிலளித்தார்.

அப்போது, “இது மகாராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க முடியாது. மகாராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாம் பார்க்கும் பார்வையில் ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது. இது பொதுமக்களின் முடிவு அல்ல. இங்கு என்ன தவறு என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். 120 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு மகாயுதி என்ன செய்தார்கள்? மகாராஷ்டிராவில் 75 இடங்களைக் கூட எம்விஏ பெறாதது எப்படி? தேர்தலில் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

ஏதோ சதி நடந்துள்ளது. எங்கள் தொகுதிகளில் சிலவற்றை திருடிவிட்டார்கள். இது பொதுமக்களின் முடிவாக இருக்க முடியாது. பொதுமக்களும் கூட இந்த முடிவுகளை ஏற்கவில்லை. முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேலும் பேசுவோம். ஒவ்வொரு தொகுதியிலும் பணம் எண்ணும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஷிண்டேவுக்கு 60 இடங்களும், அஜித் பவாருக்கு 40 இடங்களும், பாஜகவுக்கு 125 இடங்களும் கிடைக்குமா? இந்த மாநில மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. மகாராஷ்டிர மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே: அதானியிடம் தாராவியை ஒப்படைக்காததால் எனது அரசு கவிழ்ந்தது..!

நான் முதலமைச்சராக இருந்தபோது அதானியை சந்தித்தேன்; தாராவியில் டெண்டர் கொடுப்பதற்கு அல்ல; அதானியிடம் தாராவியை ஒப்படைக்காததால் எனது அரசு கவிழ்க்கப்பட்டது என முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மகாராஷ்டிராவில் சிவசேனா MLA -களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. MLA-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் பேரவை தேர்தலே வந்துவிட்டது. டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் நீதியை வழங்குவதற்குப் பதிலாக ஒரு வர்ணனையாளராக மாறிவிட்டார். நீதிபதி என்பதற்கு பதிலாக அவர் சட்டத்துறை ஆசிரியராக இருந்திருந்தால், மிகவும் பிரபலமாக இருந்திருப்பார்.

பாஜக தலைமை மிகவும் தந்திரமானது; காங்கிரஸ் தலைமை மரியாதை அளிக்கிறது; ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே ஆகியோர் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கின்றனர். இன்றைய பாஜக ‘யூஸ் அண்ட் த்ரோ’ போல மாறிவிட்டது. மும்பை தாராவியை அதானியிடம் ஒப்படைக்கப்படும் விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆங்கிலேயேர் காலத்தில் மும்பையை வரதட்சணையாக வழங்கப்பட்டதைப் போல், தற்போதும் மும்பையை யாரிடமும் ஒப்படைக்க முடியாது. மக்கள் தான் முடிவு செய்வார்கள்; மாநில அரசு அல்ல. நான் முதலமைச்சராக இருந்தபோது அதானியை சந்தித்தேன்; தாராவியில் டெண்டர் கொடுப்பதற்கு அல்ல; அதானியிடம் தாராவியை ஒப்படைக்காததால் எனது அரசு கவிழ்க்கப்பட்டது. நான் முதலமைச்சராக இருந்தபோது, யாரையும் வெட்டவில்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் தீப்பிடித்து எரிந்தன.

அவர்களிடம் பேசுவதற்கு உண்மையான பிரச்னைகள் இல்லை; எனவே அவர்கள் அப்படி பேசுகிறார்கள். மகாராஷ்டிரா தேர்தலில் பாகிஸ்தான் பிரச்னையை எழுப்புவது முற்றிலும் பொருத்தமற்றது. நான் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு காணவில்லை. மகாராஷ்டிராவை சுரண்டுபவர்களை தோற்கடிப்பதே தனது முன்னுரிமையாக உள்ளது. துணை முதலமைச்சரான தேவேந்திர பட்நாவிசை முதலமைச்சர் வேட்பாளாராக அமித் ஷா அறிவித்துள்ளார். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் ஒப்புக்கொள்கிறார்களா? எனவே எங்களது கூட்டணி ஆட்சியமைக்கும்’ என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே: பாஜக தந்திரமான கட்சி..! முதலமைச்சர் பதவிக்காக நான் கனவு காணவில்லை..!

நான் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு காணவில்லை. மகாராஷ்டிராவை சுரண்டுபவர்களை தோற்கடிப்பதே தனது கொள்கை என முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மகாராஷ்டிராவில் சிவசேனா MLA -களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. MLA-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் பேரவை தேர்தலே வந்துவிட்டது. டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் நீதியை வழங்குவதற்குப் பதிலாக ஒரு வர்ணனையாளராக மாறிவிட்டார்.

நீதிபதி என்பதற்கு பதிலாக அவர் சட்டத்துறை ஆசிரியராக இருந்திருந்தால், மிகவும் பிரபலமாக இருந்திருப்பார். பாஜக தலைமை மிகவும் தந்திரமானது; காங்கிரஸ் தலைமை மரியாதை அளிக்கிறது; ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே ஆகியோர் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கின்றனர். இன்றைய பாஜக ‘யூஸ் அண்ட் த்ரோ’ போல மாறிவிட்டது. மும்பை தாராவியை அதானியிடம் ஒப்படைக்கப்படும் விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆங்கிலேயேர் காலத்தில் மும்பையை வரதட்சணையாக வழங்கப்பட்டதைப் போல், தற்போதும் மும்பையை யாரிடமும் ஒப்படைக்க முடியாது. மக்கள் தான் முடிவு செய்வார்கள்; மாநில அரசு அல்ல. நான் முதலமைச்சராக இருந்தபோது அதானியை சந்தித்தேன்; தாராவியில் டெண்டர் கொடுப்பதற்கு அல்ல; அதானியிடம் தாராவியை ஒப்படைக்காததால் எனது அரசு கவிழ்க்கப்பட்டது. நான் முதலமைச்சராக இருந்தபோது, யாரையும் வெட்டவில்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் தீப்பிடித்து எரிந்தன.

அவர்களிடம் பேசுவதற்கு உண்மையான பிரச்னைகள் இல்லை; எனவே அவர்கள் அப்படி பேசுகிறார்கள். மகாராஷ்டிரா தேர்தலில் பாகிஸ்தான் பிரச்னையை எழுப்புவது முற்றிலும் பொருத்தமற்றது. நான் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு காணவில்லை. மகாராஷ்டிராவை சுரண்டுபவர்களை தோற்கடிப்பதே தனது முன்னுரிமையாக உள்ளது. துணை முதலமைச்சரான தேவேந்திர பட்நாவிசை முதலமைச்சர் வேட்பாளாராக அமித் ஷா அறிவித்துள்ளார். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் ஒப்புக்கொள்கிறார்களா? எனவே எங்களது கூட்டணி ஆட்சியமைக்கும்’ என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது..!

‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஆளும் மகா யுதி கூட்டணிக்கு ஆதரவாக, உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது உரையில் ‘பட்டேங்கே தோ கட்டங்கே’ எனும் கோஷத்தை தவறாமல் எழுப்பி வருகிறார். இந்த கோஷம் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால், ஹரியானா பேரவை தேர்தலில் முதன்முறையாக எழுப்பப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியும் தனது பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத்தின் கோஷத்தை அங்கீகரித்து பேசினார். ஹரியானாவில் இந்துக்களின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்கும் இக்கோஷம், பாஜக வெற்றிக்கு அடித்தளமிட்டதாக கருதப்படுகிறது. இது தற்போது, அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜகவின் அதிகாரபூர்வக் கோஷம் என்றானது. இதை மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்திலும் தொடரும் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, ஆளும் மகா யுதி கூட்டணியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எதிர்ப்பவர்களில் ஒருவரான பாஜக MLA பங்கஜா முண்டே பேசுகையில், உத்திரபிரதேச மாநிலம் போன்ற மாநிலங்களில் எடுபடும் இந்த கோஷம் மகாராஷ்டிராவில் தேவையில்லை. ஏனெனில் இங்கு வட மாநிலங்கள் போன்ற அரசியல் சூழல் இல்லை. எனவே எங்கள் கட்சியை சேர்ந்தவர் எழுப்புகிறார் என்பதற்காக அதை நாங்களும் ஏற்க முடியாது என தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே கேள்வி: ஆளும்கட்சி தலைவர்களின் பைகளையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யுமா..?!

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி வேட்பாளர்களுக்காக கறுப்பு பணம் நிறைந்த சூட்கேஸ்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் யவத்மால் மாவட்டம் வானியில் தனது கட்சி வேட்பாளர் சஞ்சய் டெர்கருக்காக தேர்தல் பிரசாரம் செய்யச் சென்றபோது, உத்தவ் தாக்கரே கொண்டு சென்ற பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘எனது ஹெலிகாப்டர் வானியை அடைந்த பிறகு, எனது பைகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதற்காக நான் வருத்தப்படவில்லை.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது பணியை தொடர்ந்து செய்கிறேன். ஆனால் பிரதமர் மோடி மற்றும் ஆளும்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களின் பைகளையும் தேர்தல் ஆணையம் இதேபோன்று ஆய்வு செய்யுமா? என்று தான் கேட்கிறேன்’ என்றார்.

சஞ்சய் ராவத் தகவல்: இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு..!

மகாராஷ்டிரா சட்ட மன்ற தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20 -ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நேற்று இரவே முடிந்து விட்டதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் இன்று மாலை வெளியாகும் என்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிராவை காப்பாற்றும் கூட்டணி கட்சி முதலமைச்சர் வேட்பாளரை ஆதரிப்பேன்..!

மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதலமைச்சர் வேட்பாளருக்கு முழு ஆதரவு வழங்குவேன் என உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த 3 கட்சிகளும் இணைந்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. இக்கூட்டணியில் இருக்கும் மூன்று கட்சிகளுமே பெரிய கட்சிகள் என்பதால், முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தன்னை முதலமைச்சர் வேட்பாளராக்க வேண்டுமென உத்தவ் தாக்கரே கடந்த ஆகஸ்ட் மாதம் விருப்பம் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் அதனை ஏற்கவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு, எந்த கட்சி அதிக இடங்களில் ஜெயிக்கிறதோ அந்த கட்சியை சேர்ந்தவரே முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் தேர்வு செய்யும் எந்த முதலமைச்சர் வேட்பாளராக இருந்தாலும் நான் முழு ஆதரவு வழங்குவேன் என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை காப்பாற்றுவதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாக என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Uddhav Thackeray : பாஜக மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் வேட்டையாடுவத்தில் இந்துத்துவா உடன் உடன்படுகிறாரா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ளது. இதில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் என ஒரு கூட்டணியும் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் என ஒரு கூட்டணியாகவும் களம் காண்கின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத பவார் கூட்டணிக்கு அமோக வெற்றி பெற்றது. அதேபோல அந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் தொடர இந்த கூட்டணி முனைப்புடன் செயல்பாடு வருகின்றது. அதேவேளையில் நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை சட்டமன்ற தேர்தல் வெற்றியால் சரிக்கட்ட பாஜக கூட்டணி விரும்புகிறது.

இந்நிலையில் பாஜக தலைவருக்கு அமித் ஷா, எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க உத்தரவிட்டுள்ளார் என உத்தவ் தாக்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில் “சமீபத்திய நாக்பூர் பயணத்தின்போது, அமித் ஷா பூட்டிய அறைக்குள் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் என்னையும் சரத் பவாரையும் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் ஏன் பூட்டிய அறைக்குள் பேசுகிறார்? அவர் இங்கே மக்கள் முன் பேசி வேண்டும்.

உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை ஏன் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். அப்படி என்றால்தான் பாஜகவால் மகாராஷ்டிராவை கொள்கை அடிக்க முடியும். 30 வருடத்திற்கு மேலாக எங்களுடன் கூட்டணியில் இருந்த பாஜக பிரிந்தது. எனினும், சிவசேனா 63 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் வேட்டையாடுவது தொடர்பான பாஜகவின் இந்துத்துவா உடன் உடன்படுகிறாரா? என ஆச்சரியப்படுகிறேன். வருகின்ற தேர்தல் அதிகாரத்தை பற்றியது அல்ல. அவை மகாராஷ்டிரா கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முக்கியமானவை என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.