நரேந்திர மோடி ஆவேசம்: “என் உடம்பில் ரத்தம் ஓடவில்லை.. கொதிக்கும் குங்குமக் குழம்புதான் பாய்கிறது”

என் நரம்புகளில் ஓடுவது வெறும் ரத்தம் மட்டுமல்ல, அது சிந்தூர். கொதிக்கும் குங்குமக் குழம்புதான் என் நரம்புகளில் பாய்கிறது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் ரூ. 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நரேந்திர மோடி, “பாரத மாதாவின் சேவகனான நான் இங்கே பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறேன். எனது மனம் அமைதியாக இருக்கிறது, ஆனால் என் ரத்தம் கொந்தளிக்கிறது. இப்போது, என் நரம்புகளில் ஓடுவது வெறும் ரத்தம் மட்டுமல்ல, அது சிந்தூர். கொதிக்கும் குங்குமக் குழம்புதான் என் நரம்புகளில் பாய்கிறது.

“ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 -ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. அங்கு தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அப்பாவி உயிர்களைக் குறிவைத்தனர். பஹல்காமில் குண்டுகள் சுடப்பட்டாலும், அவை 140 கோடி இந்தியர்களின் இதயங்களைக் காயப்படுத்தி, பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியுடன் நாட்டை ஒன்றிணைத்தது. தீர்க்கமான பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. முப்படைகளும் இணைந்து, எதிரிகளை அடிபணியச் செய்தனர்.

இந்தியா 22 நிமிடங்களுக்குள் பதிலடி கொடுத்து, 9 முக்கிய பயங்கரவாத மறைவிடங்களை அழித்தது. இந்த நடவடிக்கை நமது நாட்டின் வலிமையை நிரூபித்தது. ஆபரேஷன் சிந்தூர் பழிவாங்கும் செயல் அல்ல. மாறாக நீதியின் ஒரு புதிய வடிவம். இது வெறும் கோபத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் அசைக்க முடியாத வலிமை மற்றும் உறுதியின் வெளிப்பாடு. தேசம் ஒரு துணிச்சலான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, எதிரியை நேரடியாகவும் தீர்க்கமாகவும் தாக்கியது. பயங்கரவாதத்தை நசுக்குவது என்பது வெறும் ஒரு உத்தி மட்டுமல்ல, ஒரு கொள்கை, இதுதான் இந்தியா, இதுதான் புதிய இந்தியா.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் மூன்று முக்கிய கொள்கைகளை இந்தியா நிறுவியுள்ளது. இந்தியாவின் மீதான எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் ஒரு தீர்க்கமான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும், நேரம், முறை மற்றும் விதிமுறைகளை இந்தியாவின் ஆயுதப் படைகள் மட்டுமே தீர்மானிக்கும். இதுவே நமது முதல் கொள்கை. இரண்டாவதாக, அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது. மூன்றாவதாக, பயங்கரவாத மூளைகளுக்கும் அவர்களை ஆதரிக்கும் அரசுகளுக்கும் இடையில் இந்தியா இனி வேறுபடுத்திப் பார்க்காது.

பாகிஸ்தானின் அரசு மற்றும் அரசு சாரா ஆதரவாளர்கள் என்ற வேறுபாட்டை இந்தியா நிராகரிக்கிறது. பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியாக, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்களைக் கொண்ட ஏழு குழுக்கள், பாகிஸ்தானின் உண்மையான முகத்தை உலகின் முன்வைக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் நடந்த மோதல்களில் பாகிஸ்தான் தொடர் தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு பாகிஸ்தான் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. வெளிப்படையான போர்களில் வெற்றிபெற முடியாமல், பாகிஸ்தான் நீண்ட காலமாக பயங்கரவாத செயல்களை இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. வன்முறை நடவடிக்கைகள் வாயிலாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

பாகிஸ்தான் இந்தியாவின் உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிட்டது. ஆனால், எனது தலைமையின் கீழ், நாடு வலிமையானதாகவும், அசைக்க முடியாததாகவும் உள்ளது. இந்தியா மீதான எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பாகிஸ்தான் ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் விலையை கொடுக்க நேரிடும்.

பாகிஸ்தான் குறி வைத்து தாக்குதல் நடத்த முயன்ற விமான நிலையத்தில்தான் நான் தரையிறங்கினேன். பாகிஸ்தானால் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்த இயலவில்லை. இந்திய ராணுவம் எல்லையைக் கடந்து சென்று நடத்திய துல்லியத் தாக்குதல்களால், அந்நாட்டின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் பல நாட்களுக்கு மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளோ, பேச்சுவார்த்தையோ நடத்தப்பட மாட்டாது. இனி அந்த நாட்டுடன் நடைபெறும் எந்தவொரு பேச்சு வார்த்தையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்ததாக மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்தால், அந்நாடு மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும். பாகிஸ்தான் தனக்கு உரிய தண்ணீரைப் பெற இந்தியா அனுமதிக்காது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதன் வாயிலாக அது பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாடு, உலகில் வேறு எந்த சக்தியாலும் அசைக்க முடியாதது. சிந்து நதி நீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. எதிர்காலத்தில் ஏதேனும் தாக்குதல் நடந்தால், இந்தியா தனது பதிலடிக்கான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுக்கும். நம்முடைய அடுத்த தாக்குதல் அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.” என நரேந்திர மோடி தெரிவித்தார்.

23 வயது பெண் 7 மாதங்களில் 25 கணவன்கள்..!! கான்ஸ்டபிளை 26-வது திருமணத்திற்கு ரெடியான பெண் கைது..!

23 வயது பெண் 7 மாதங்களில் 25 கணவன்கள் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என்று ஒவ்வொரு மாநிலங்களாக சென்று திருமண செய்து நகை, பணம் என கையில் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்து கடைசியாக போபாலில் கான்ஸ்டபிளை 26-வது திருமணம் செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூரை சேர்ந்த 47 வயது மடோனா என்ற பெண், மனைவியை இழந்து தனியே வசிக்கும் ஆண்களுக்கு, அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மட்டுமே குறி வைத்து ஏமாற்றி வந்துள்ளார். சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களிடம் நெருங்கி பழகி, அவர்களையே திருமணம் செய்து கொண்டு நகை, பணம், சொத்துக்களை அபகரித்துவிடுவாராம். பல ஆண்களை ஏமாற்றிய மடோனா நேற்று கைதாகி தமிழகத்தில் பேசுபொருளாக மாறியது. ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற பெண் இன்று பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்த 23 வயதாகும் அனுராதா ஹேக் மேட்ரிமோனியல், திருமண புரோக்கர்களை அணுகி, வசதியான ஆண்களுக்கு வலையை விரிப்பவராம். தன்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் ஆண்கள் என்றால், உடனே அவர்களுடன் சட்டப்படி பதிவு திருமணமும் செய்து கொள்வாராம். பதிவு திருமணம் செய்வதால், யாருக்கும் அனுராதா மீது சந்தேகம் வருவதில்லை. திருமணம் முடிந்து சில நாட்களில் நகை, பணம், சொத்துக்களை அபகரித்து, அதற்கு பிறகு அந்த வீட்டிலிருந்து கிளம்பி சென்றுவிடுவாராம். அதுவும் 7 மாதங்களில் இதுவரை 25 பேரை திருமணம் செய்துள்ளார்.

இப்படி பலரும் ஏமாந்துபோன நிலையில், சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தந்துள்ளார். இந்த புகாரை விசாரிக்க சென்றபோதுதான், அனுராதா ஹேக்கின் அனைத்து தில்லாலங்கடி வேலைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. காவல்துறையினர்அனுராதா ஹேக்யை தேடி செல்வதற்குள், போபாலில் ஒரு காவல்துறை கான்ஸ்டபிளை திருமணம் செய்ய முயன்று கொண்டிருந்து போது அனுராதா ஹேக்யை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அதன் பிறகு அனுராதா ஹேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என்று ஒவ்வொரு மாநிலங்களாக சென்று திருமண மோசடி செய்துள்ளதாக தெரிவித்து காவல்துறையினருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடிபோதையில் பெண்ணை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற ஆசாமி..!

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேம் ராம் மெக்வால். குடிபோதைக்கு அடிமையான இவர், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் போதையில் இருந்த பிரேம் ராம் மெக்வால் தனது மனைவியை தாக்கியுள்ளார். அதன் பின்னர் அவரது கால்களை பைக்கில் கட்டி கரடுமுரடான மண் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், அப்பெண் வலியால் அலறுவது தெரிகிறது. எனினும் கிராமத்தைச் சேர்ந்த எவரும் தங்கள் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. சம்பவத்தின்போது மற்றொரு பெண், வீடியோ எடுத்த ஆண் உள்ளிட்ட 3 பேர் அங்கு இருந்ததாக நம்பப்படும் நிலையில் அவர்களும் இதனை தடுக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரேம் ராம் மெக்வாலை கைது செய்துள்ளனர்.

ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 7-ம் தேதி வரை காவல்துறை காவல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்த விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் சேத்தன் சிங் பணியில் இருந்துள்ளார். ரயில் மும்பை சென்ட்ரலை அடைய சுமார் 2 மணி நேரமே இருந்த நிலையில், பி5 பெட்டியில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்று பார்த்த போது, சேத்தன் சிங் தனது உயர் அதிகாரியான உதவி ஆய்வாளர் திக்கார மீனாவைச் சுட்டுக் கொன்றார்.

பி5 பெட்டியில் பயணி ஒருவரையும் சுட்டுக் கொன்ற சேத்தன் சிங், அங்கிருந்து 4 பெட்டிகள் கடந்துச் சென்று பி1 பெட்டியில் மற்றொரு பயணியையும் சுட்டுக் கொன்றார். அங்கிருந்து மேலும் 3 பெட்டிகளை கடந்து எஸ்6 பெட்டியில் 3வது நபரையும் சுட்டுக் கொன்றார். அங்க அடையாளங்களை கொண்டு யார் யார் சிறுபான்மையினர் என தேடிச் சென்று சேத்தன் சிங் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட அவருக்கு வரும் 7-ம் தேதி வரை ரயில்வே காவல்துறையினரின் காவல் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணி போட்டி போட்டு போராட்டம்!

மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றம் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை கொடுத்தும் உள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து அண்மையில் பேசியிருந்த பிரதமர் மோடி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருந்த நிலையில் இன்று காலை திடீரென நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் ஒன்று கூடினர். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர். இது தொடர்பான பதாகைகளையும் அவர்கள் ஏந்தி போராட்டம் நடத்தி உள்ளனர்.

தலித் பெண் துப்பாக்கி முனையில் ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை..!

இந்தியாவில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் நண்பருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளனர். மேலும் அவரது ஆண் நண்பரை கொடூரமாக தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்ததோடு தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டியது மட்டுமல்லாது அவரது ஆடைகளை அகற்றுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி ஏழு பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கொடூர செயலை அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அந்த இளம் பெண் கிராமத்திற்குள் வந்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் இது குறித்து முஸாபஹா நகர் காவல் துறையினர் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை கொடுத்த ஏழு பேரை கைது செய்துள்ளதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.