மா.சுப்பிரமணியன்: அண்ணாமலையை பார்த்து உலகமே சிரிக்குது ..!

செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஷூ அணிந்து வலம் வருவது , தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது உள்ளிட்ட செயல்களால் உலகமே அவரை கண்டு எள்ளி நகையாடுகிறது என அமைச்சார் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ள அவர், அண்ணாமலையின் கேலி கூத்து நடவடிக்கைகள் அளவில்லாமல் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, தற்குறிகள் திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் போன்ற தற்குறிகளை போல் அதே பாணியில் நான் பேச போகிறேன். நீ சூரியனை 11.30 மணிக்கு பார்க்கிறவன், நாங்கள் அதிகாலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கு கோப்புகளை எடுத்து பார்ப்பவர்கள். பிரதமர் மோடியை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்..

பிரதமர் மோடி முன்பு தமிழ்நாடு வந்தால், நாங்கள் கோ பேக் மோடி என்றோம். இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடினு சொல்லிப் பாரு.. எங்க அப்பா முதலமைச்சர்.. எங்க தாத்தா முதலமைச்சர்னு சொல்லி பாரு.. பார்க்கலாம் என தெரிவித்து இருந்தார்.

அண்ணாமலை பேசிய வீடியோ ட்ரெண்டான நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார். தைரியமிருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள். உதயநிதி, அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. கல்வி நிதி தொடர்பானது. நிதியை பெற்றுத் தர துப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள்.

தமிழகத்தின் நிதி உரிமையை திசை திருப்பவே இப்படி செய்கிறார்கள். தனியார் பள்ளி தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்றுத்தானே நடத்துகிறார்கள். தனியார் பள்ளிகளில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையையோ தருகிறார்களா என்ன? தனியார் பள்ளிகளில் இந்தி தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது.

இதனைத் தொடர்ந்து திமுகவினர் தரப்பில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. சோசியல் மீடியா தொடங்கி அனைத்திலும் திமுகவினர் அண்ணாமலையை கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம். திராவிட மாடல், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்தவித அருகதையும் இல்லை. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என்று அனைத்திலும் தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு அளவில்லாமல் போகிறது.

திடீரென செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஷூ அணிந்து வலம் வருவது , தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது உள்ளிட்ட செயல்களால் உலகமே அவரை கண்டு எள்ளி நகையாடுகிறது. அமைச்சர்கள் பதவிகளில் இருப்பவர்களை தற்குறி என்று சொல்லும் அளவிற்கு தற்குறித்தனமாக செயல்படும் அண்ணாமலை கண்ணாடி முன் நின்றால், அவரின் தற்குறித்தனங்கள் வரிசைக் கட்டி நிற்கும்.

மேலும், விஜய்யை தொடர்ந்து திருமா மீது அண்ணாமலை அட்டாக்” அநாகரீகமானவர் என்பதை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நிரூபித்து கொண்டிருக்கும் அண்ணாமலை, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு கொண்டே இருக்கிறார் என்பது நிதர்சனம். எதையும் சகித்து கொள்ள முடியாத ஒரு அரைவேக்காடு என மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்: குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் செய்யாதீர்..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, நேற்று வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது. 5 பேரும் இறந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. 5 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் தருகிறது.

இதில் அரசியல் செய்ய நினைக்கக்கூடாது. சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102. விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன. ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

குடிநீர், குடை உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். அரசு மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அரசு சார்பில் மருத்துவ முகாம், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தது.

7500 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் பேசுவதை தவிர்க்குமாறு மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும்….நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது

தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா். சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னையைச் சோந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றுள்ளனர் .இந்தப் போராட்டத்தை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்..!

4 வருடங்களுக்கு முன் நிலம் ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்…? அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்…?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமாக தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்துக்கு மத்திய அரசு காரணம் இல்லை.” எனத் தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 9 வயது மாணவி மீது சாலையில் சுற்றுத் திரிந்த மாடு முட்டித் தாக்கியதில் சிறுமி காயமடைந்த அமைந்தகரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அந்த மாணவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மருத்துவர்கள் உடனடியாக வழங்கி தொடர்ந்து கவனித்து வருகின்றனர். தலை, கை ஆகிய பகுதிகளில் அடிபட்டு உள்ளதை, சி.டி ஸ்கேன் எடுத்து பெரிய பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். கண் அருகே இரத்தக் கசிவு இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் நாடாளுமன்றத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் குறித்து சொன்ன பதில், உண்மைக்கு மாறானது. மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் இப்படி மக்களை குழப்பும் வகையில் பேசக்கூடாது. வாய் கூசாமல் பொய் பேசியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது மெகா அண்டப்புளுகு என்று சொல்வார்களே, அப்படியான புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் மத்திய நிதி அமைச்சர். மத்திய பாஜக அரசு கடந்த 2015-ம் ஆண்டு 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது. அதில் உத்தர பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர், பீகார், தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ஆனால் உத்தர பிரதேசம் கோரக்பூரில் மருத்துவமனை இயங்கி வருகிறது. அசாம், ஜம்முவில் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இயங்கி வருகின்றன. பீகார் உள்ளிட்ட இடங்களிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் மதுரை நிலைமை நமக்கே தெரியும். 2017-ல் ஜார்க்கண்டில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை, தெலுங்கானாவில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம் இயங்கி வருகின்றன. 2022-ல் மணிப்பூர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அறிவித்த மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 2019-ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் இன்று சொல்கிறார்.

ஆனால் 4 வருடங்களுக்கு முன் நிலம் ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்? அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்? அடிக்கல் காட்டப்பட்ட இடம் என்பது ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டிய இடமே அல்ல. அது அந்த மாவட்ட நிர்வாகத்தின் வசமிருந்த இடம். அதனை மத்திய அரசுக்கு மாற்றிக் கொடுத்த பின்னர் தான், பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு பின், மத்திய அரசின் குழுவினர் வந்து ஆய்வு செய்து, 15 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது.

அது 2021-ல் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே நடந்தது. மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான நிலத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் மத்திய அரசுக்கு மாற்றியதற்கான கோப்புகளை அடிக்கல் நாட்டு விழா நடந்த பின்னர், கடந்த 2020 நவம்பர் 3 அன்று டெல்லிக்கு சென்று மத்திய அரசின் உரிய அலுவலர்களிடம் அன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அதெல்லாம் தெரியாமல் நிதி அமைச்சர் இவ்வாறு பேசி உள்ளார். இப்படி தவறான தகவலை மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது என்பது மிகவும் மோசமானது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசே முழு நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மட்டும் ஜப்பான் நிதியை நாடிச் செல்வது ஏன்? மற்ற மாநிலங்களை விட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் நிதி தேவை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் கூறி உள்ளார். அதையெல்லாம் காலதாமதம் ஆனதற்கு காரணமாக சொல்கிறார். ஆனால் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை ஆயிரம் படுக்கைகளுடன் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடித்து உள்ளோம். இன்று அது செயல்பாட்டிற்கே வந்துவிட்டது.” எனத் தெரிவித்தார்.