“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்கவில்லை ..!”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அவை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வகுத்துத் தரும் தேர்தல் வியூகப்படி வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும், 2026 சட்டப்பேரவை பொது தேர்தலிலும் கட்சி மகத்தான வெற்றிபெறும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் சமர்ப்பிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வை ரத்து செய்திடவும் மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்தவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றத் தவறியதாகவும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பல திட்டங்களை முடக்கியது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காதது, இலவச வேட்டி சேலை மற்றும் இலவச பள்ளி சீருடை வழங்குவதில் மெத்தனப்போக்கு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை ஆட்சி இல்லை. வேதனை ஆட்சியே எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதி ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடம்பூர் ராஜூ திட்டவட்டம்: `2026 சட்டமன்றத் தேர்தல்.. அதிமுக, திமுக-வா ? என்பதுதான் மையமாக இருக்கும்..!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அ.தி.மு.க புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக-வினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தபோதிலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது. வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது” என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற குஷ்பு ‘தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரா..!?’

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக இணைந்து பணியாற்றினார். 2014- ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இருப்பினும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான , தேசிய மகளிர், இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்தார். அதற்கான கடிதத்தை துறை அதிகாரிக்கு அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராஜினாமா குறித்து குஷ்பு பேசுகையில், அரசியலில் 14 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பாஜக வில் முழுமையாக செயல்படுவதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பாஜக உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன.

அதனால், முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என குஷ்பூ தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேர, வரும் 28- ஆம் தேதி லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் லண்டன் செல்லும்பட்சத்தில் தமிழக பாஜக தலைவர் பதவி வேறொருவருக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பதவியை கைப்பற்ற குஷ்பு முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கடம்பூர் ராஜூ: கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார்..!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக-வினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தபோதிலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது. வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது” என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

திமுக அரசு மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறது..!

திமுக அரசு மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறது..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆலச்சாம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் ரூ 72.85 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: “நான் முதன் முதலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது, ஆலச்சாம்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாக பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மேலும் பேசிய பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, வாழ்க்கை சீரழியும் நிலை உருவாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதை பலமுறை தெரிவித்தும், சுட்டிக்காட்டியும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருள் விற்பனையை தடுக்க முடியாத திறமையற்ற பொம்மை முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் வீணாகி வருகிறது.

மேலும் பேசிய பழனிசாமி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, கார் பந்தயம் நடத்த திமுக அரசு தயாராகி வருகிறது. கார் பந்தயம் நடத்த இருங்காட்டுக் கோட்டையில் இடம் இருக்கும் போது, அதை விட்டு விட்டு மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்த சாலையில், மக்களின் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்த திமுக அரசு துடிக்கிறது. மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறார்கள். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை…! திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா..!

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற வரும் நிலையில்மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150-வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக மற்றும் அதிமுகவின் பூத் முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மு.க.ஸ்டாலின்: “திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ‘ஹீரோ…!’ பாஜக தேர்தல் அறிக்கை நாட்டிற்கே வில்லன்…!

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான தொண்டை மண்டலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கடந்துள்ள ஒரே மாநிலக் கட்சி என்ற வரலாற்றுக்குச் சொந்தமான – இனமான எழுச்சி இயக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய, வடசென்னை தொகுதிப் பரப்புரைக்கும் சேர்த்தே வந்திருக்கிறேன்.

பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த மண், திருவள்ளூர்! அந்த மண்ணில், இரண்டாம் விடுதலைப் போராக நடைபெறவுள்ள இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். வெற்றி என்றால், சாதாரண வெற்றியல்ல! கடந்த 2021-இல் திருவள்ளூர் மாவட்டத்தில் நூறு சதவீத வெற்றியைத் தந்தீர்கள். அது போன்று இருக்கவேண்டும். வரிசை எண்ணில் தமிழ்நாட்டில் முதல் தொகுதி திருவள்ளூர் அதேபோல், வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்திலும் முதல் தொகுதியாக இருக்கவேண்டும்.

கழகக் கோட்டையான திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில், வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சசிகாந்த் செந்தில் அவர்கள். அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்தவர். தனது அறிவாற்றலால் காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றிக்காக உழைப்பவர். சமூகநீதி – சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை கொண்ட இவரை திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கை சின்னத்தில் வாக்களித்து, தங்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வடசென்னை தொகுதியைப் பொறுத்தவரை, தி.மு.க. தொடங்க ஆலோசனை நடைபெற்ற மண்ணடி, பவளக்காரத்தெரு, கொட்டும் மழையில் தி.மு.க. தொடங்கப்பட்ட ராபின்சன் பூங்கா, இன்று கழகத்தின் இதயமாக இயங்கும் அறிவாலயத்திற்கு முன்பு, கழகத்தின் உயிர்த்துடிப்பாக இயங்கும் அறிவகம், அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் ஈந்த தியாக மறவர்களான நடராசன் தாளமுத்துவைப் போற்றும் நினைவிடம் அமைந்துள்ள மூலக்கொத்தளம் எனத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும் சேய்க்குமான உறவு!

இன்னும் கூடுதலாக சொல்லவேண்டும் என்றால், பெருமையோடு பூரிப்போடு சொல்லவேண்டும் என்றால், நான் முதலமைச்சர் ஆக, என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூரை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதி! அப்படிப்பட்ட வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் கலாநிதி வீராசாமி அவர்கள், தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த அண்ணன் ஆர்க்காட்டாரின், அருமை மகன்! மக்கள் பிணியை போக்கும் புகழ்பெற்ற மருத்துவரான இவர், சமூகப்பிணியை போக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார்.

அவரின் குரல் தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும்! அதற்கு வடசென்னை மக்கள், உதயசூரியன் சின்னத்தில் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு, வாக்களித்து வெற்றிபெற வைக்கவேண்டும். இந்த இரண்டு வேட்பாளர்களையும் நாடாளுமன்றம் அனுப்பத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காரலாம்!

இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம்! பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம்! ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல்! மிக மிக முக்கியமான தேர்தல்! ஏன் என்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்கவேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா? அதுபோன்று, இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்கவேண்டுமா அல்லது R.S.S. எழுதும் சட்டம் இருக்கவேண்டுமா? இடஒதுக்கீடுமுறை இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டுமா – வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும் தேர்தல். உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி”என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால்! தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார்! இரவில் பல மக்களை ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார்! அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, G.S.T. சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்!

கொரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கொரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது! அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு! நாட்டுக்கும் கேடு!

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! அதனால்தான், எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தி கோவை வந்தபோது, “ராகுல் அவர்களே… வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!”என்று கூறினேன். மக்களைச் சந்தித்து, மக்களோடு மக்களாக இருந்து, அவர்கள் பிரச்சினைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு தி.மு.க.வும் – காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம்!

தெற்கிலிருந்த நம்முடைய குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக எதிரொலித்திருக்கிறது! முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய்!

நீட் தேர்வு ரத்து!

ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீடு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பை 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தச் சட்டத்திருத்தம்!

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்வு!

பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம்!

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை!

இத்துடன், நம்முடைய தேர்தல் அறிக்கையில் சில முக்கிய அறிவிப்புகளையும் தலைப்புச் செய்தியாக சொல்கிறேன்.

சென்னையில் மூன்றாவது ரயில் முனையம்!

கோயம்பேடு முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை விரைவில் மெட்ரோ ரயில்!

விம்கோ நகரில் இருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு!

வடக்கில் இருந்து வரும் ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை!

வில்லிவாக்கம் ரயில்நிலையத்தில் இருந்து, தெற்குப் பக்கமாகச் செல்ல சுரங்க நடைபாதை!

மணலியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை!

செங்குன்றத்தை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க, உயர்மட்ட மேம்பாலம்!

பழவேற்காடு முதல் கடப்பாக்கம் இடையே மேம்பாலம் அமைத்துப் புதிய சாலை!

இதுமட்டுமல்ல, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாகத் தள்ளுபடி!

சிறுபான்மையினர் விரோத சட்டங்கள் ரத்து!

விவசாயக் கடன்கள் தள்ளுபடி!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

நூறுநாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்வு! நாளொன்றுக்கு 400 ரூபாய் ஊதியம்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

முதியோர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கு இரயிலில் மீண்டும் கட்டணச்சலுகை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு!

மீனவ மக்கள் நிறைந்த பகுதி இது! அவர்களுக்காக அறிவிக்கப்பட்டவை, உலர்மீன் முற்றங்கள் கட்டுதல் போன்ற மீனவர்களுக்குத் தேவையான தொழில் கட்டமைப்புப் பணிகள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்!

பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!

தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்!

மீன்பிடி தடைக்காலங்களில் மாற்றுப் பொருளாதார வேலைவாய்ப்புகளை உருவாக்க மீன்கள் பதப்படுத்துதல், மீன்வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள்!

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்., இப்படி, தி.மு.க. – காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள் இந்தத் தேர்தலின் “ஹீரோ”என்றால், பா.ஜ.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ‘வில்லன்! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வில்லன் என்று ஏன் சொல்கிறோம் என்றால், மத அடிப்படையில் இந்த நாட்டுமக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கிறார்கள்! என முக ஸ்டாலின் உரையாற்றினார்.

பழனிசாமி: மக்கள் உங்கள் பக்கம்தான்…! வாக்கு எங்களுக்கு தான் போடுவார்கள்..!!

சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுத்தோம் என்கிறார் ஸ்டாலின். 27 மாதம் அதிமுக போராடியதால் தான் வேறு வழியில்லாமல் கொடுத்தார்கள். நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால்தான் உரிமைத் தொகை கொடுத்துள்ளீர்கள். அதிமுக இல்லாவிட்டால் மக்களுக்கு உரிமைத் தொகை கிடைத்திருக்காது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கவர்ச்சியாக பேசும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்பு தகுதியானவர்களுக்குத்தான் உரிமைத் தொகை என மாற்றிப் பேசுவார். அனைத்து நகர பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்றார் ஸ்டாலின். இப்போது பேருந்துக்கு பெயின்ட் அடித்து அந்தப் பேருந்தில் ஏறினால்தான் இலவசமாக பயணம் செய்ய முடியும். மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைபாடு, வந்த பின்பு வேறொரு நிலைபாடு.

எப்போது பார்த்தாலும் மக்கள் என் பக்கம் என்கிறார் ஸ்டாலின். மக்கள் உங்கள் பக்கம்தான், ஆனால், வாக்கு எங்களுக்கு தான் போடுவார்கள். மக்களை நீங்கள் எப்போது நேரடியாக சென்று பார்த்தீர்கள். இப்போதுதான் கடைக்குச் சென்று டீ குடிக்கிறார். முன்பு சைக்கிளில் செல்வார், பளு தூக்குவார், வாக்கிங் போவார். இதுதான் திமுகவின் 3 ஆண்டுகளாக சாதனை. இதைத் தவிர்த்து வேறு எதையும் செய்யவில்லை. வாக்கிங் போகும்போது கூட தனது மகனின் திரைப்படம் என்ன வசூலானது என்பது குறித்துதான் பேசுவார்.

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்காத இடமே இல்லை. இன்றைக்கு தமிழகம் போதைப்பொருள் நிறைந்த இடமாக காட்சி அளிக்கிறது. அண்மையில் திமுக நிர்வாகி சிக்கினார். எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்தது காங்கிரஸ். ஸ்டாலின் என்றைக்கு ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தாரோ அன்றைக்கே காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது.

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது விசுவாசமாக இருந்தோம். இன்று பாஜக மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றினால் அதனை எதிர்க்கும் திராணி அதிமுகவுக்கு உள்ளது. எதிர்க்கும் நேரத்தில் எதிர்ப்போம். மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்டுவோம். இது அதிமுகவின் ஸ்டைல். அரியலூருக்கு அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக ஆட்சியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த திட்டத்தையும் காணவில்லை” எனபழனிசாமி தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்: “ஒரே ஒரு மீட்டிங்! டோட்டல் பி.ஜே.பி.யும் க்ளோஸ்..!”

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, திராவிட இயக்கம் கருவான ஊர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் இட்ட ஊர் இந்தத் திருப்பூர்! வந்தாரை வாழ வைக்கும், திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர்வீழ்ச்சியின் எழுச்சியாகவும், மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் இருக்கும் நீலகிரி தொகுதியை உள்ளடக்கிய கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். இரண்டாம் விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராகப் போட்டியிடும், ஆ.இராசா அவர்கள், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்! திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர் – பேச்சாளர் – சிந்தனையாளர்! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் “தகத்தகாய சூரியன்” என்றுப் பாராட்டப்பட்டவர்தான், ஆ.இராசா அவர்கள்! பாசிச பா.ஜ.க. ஆட்சியின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் துணிச்சலாக நாடாளுமன்றத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் சிறந்த நாடாளுமன்றவாதி! வாதத்திறமையில் யாராலும் வீழ்த்த முடியாத தலைசிறந்த கொள்கையாளர்! எனது பாசமிகு சகோதரர் ஆ.இராசா அவர்களுக்கு, நீலகிரி நாடாளுமன்ற மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு சுப்பராயன் அவர்கள் போட்டியிடுகிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக எந்தப் பொறுப்பு வகித்தாலும், பாட்டாளிகளின் தோழராக இருக்கக்கூடியவர். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் நிறைந்திருக்கும், இந்தப் பகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, சுப்பராயன் அவர்கள்தான் சரியான போராளி! அண்ணன் முத்தரசன் அவர்களின் ஆதரவைப் பெற்ற, தொழிலாளர் தோழர் சுப்பராயன் அவர்களுக்கு, திருப்பூர் மக்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இருவரும் அவர்கள் போட்டியிட்ட தேர்தல்களிலேயே, அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கவேண்டும். தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதி மக்களிடமும் வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? மாபெரும் வெற்றி உறுதி, வேட்பாளர்கள் உட்காருங்கள்!

சுப்பராயன் அவர்கள் தெரிவித்ததைப் போல, இது மிக மிக முக்கியமான தேர்தல்! இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்கவும், சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கும் தேர்தல்! சமத்துவம் நிலைக்க – சகோதரத்துவம் தழைக்க – மதநல்லிணக்கம் செழிக்க – சமூகநீதி கிடைக்க – இந்தியா கூட்டணியின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமையவேண்டும்!

நேற்று சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் கோவைக்கு வந்திருந்தார்! டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்? பார்த்தீர்களா? எப்படி இருந்தது? பாகுபலி படம் போன்று, பிரமாண்டமாக இருந்ததே? “ஒரே ஒரு மீட்டிங்! டோட்டல் பி.ஜே.பி.யும் க்ளோஸ்!” சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டும்தான் ஆள முடியும் என்று ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். சகோதரர் ராகுலின் பேச்சை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அவர் தமிழ்நாட்டை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்று அதிலேயே தெரிந்திருக்கும்!.

அது மட்டுமா! இந்தியாவைப் புரிந்துகொள்ளத் தனக்கு வழிகாட்டியாக இருப்பதே தமிழ்நாடும் – தமிழ்நாட்டு வரலாறும் – தமிழ்நாட்டு அரசியலும்தான் என்று சொல்லி – தந்தை பெரியார் – பெருந்தலைவர் காமராசர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் என்று நம்முடைய தலைவர்களை மனதாரப் போற்றினார். “நடக்கின்ற தேர்தல் என்பது, சாதாரணத் தேர்தல் அல்ல; இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போர்” என்று நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

சமூகநீதியை நிலைநாட்டும் நமக்கும் – சமூகப் பாகுபாட்டை விதைக்கும் பா.ஜ.க.வுக்கும் நடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதே கருத்துதான் இப்போது சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் பேச்சிலும் எதிரொலித்திருக்கிறது! திராவிட இயக்கம் தோன்றிய பிறகுதான், ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த 100 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த நாம், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்! என மு.க.ஸ்டாலின் பேசினார்.

அரசியல் பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரு கோடி சிக்கியது..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதி ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசன். இவரது அன்பரசன், அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் தம்பி ஆவார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு விரைந்தனர். அங்கே அரசியல் பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கு ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.

இதனை‌ அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். தற்பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்துள்ளார்? தேர்தல் பணம் பட்டுவாடா செய்ய இருந்த பணமா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.