தவெக அரசு பொறுப்பிற்கு வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை என்பதற்கு தவெக அடிமட்ட தொண்டன் ஆகாஷ் மரணமே சாட்சி என மாரிதாஸ் ஆன்சர்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் பாஜகவிற்கு ஆதரித்த மாரிதாஸ் மலைச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாரிதாஸ் மலைச்சாமி தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தென்காசி மாவட்டம் சுரண்டை என்ற கிராமத்திற்கு தன் பாட்டி இறந்த இடத்திற்கு தவெக அடிமட்ட தொண்டன் ஆகாஷ் என்ற இளைஞர் இரவு தனது நண்பனுடன் சென்றுள்ளார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை. அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை. அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க – உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை. மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை. பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர – ஆகாஷ் இறந்துவிட்டார்.
நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 50 நாட்கள் ஆகின்றது. தவெக அரசு பொறுப்பிற்கு வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல். இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு.. இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார் என மாரிதாஸ் மலைச்சாமி தெரிவித்துள்ளார்.