சோலார் மின்சாரம் தயாரிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா நடகோட்டை பகுதியில், பூமிதான நிறுவனம் சார்பில் சோலார் மின்சாரம் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு, நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு கிராம மக்கள் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். திடீரென அவர்கள், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.