திருப்பூர், அன்னூர் உள்ளாட்சி இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாவட்ட, அன்னூர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாவட்ட குழு உறுப்பினராக போட்டியிடும் தளபதியார் அவர்களின் ஆசிபெற்ற வேட்பாளர் இ. ஆனந்தன் அவர்களுக்கு நேற்று 04.10.2021 திங்கட்கிழமை மாலை பொழுதில் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 9வது வார்டுக்கு உட்பட்ட மசாண்டிபாளையம், பாலாஜி நகர் பகுதிகளில் திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் MLA அவர்கள் வாக்கு சேகரித்தார்.

இதில் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் TKT.மு.நாகராசன், திருப்பூர் வடக்கு மாநகர கழக பொறுப்பாளர் ந.தினேஷ்குமார், பகுதி கழக பொறுப்பாளர்கள் 15.வேலம்பாளையம், கோ. இராமதாஸ், அன்னாகாலனி செல்வம், வாலிபாளையம் மு.க.உசேன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் து.கோபிநாத், திருப்பூர் மத்திய மாவட்ட மற்றும் மாநகர கழக நிர்வாகிகள் தம்பி.குமாரசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர் அணியை சார்ந்த மாவட்ட துனை அமைப்பாளர் சக்திவேல், திருப்பூர் வடக்கு மாநகர துனை அமைப்பாளர் சூர்யபிரகாஷ், தெற்கு மாநகர வர்த்தகர் அணி துனை அமைப்பாளர் பார்த்திபன்,நல்லூர் பகுதி கழக மாணவரணி துனை அமைப்பாளர் மணிகண்டன், மாணவர் அணியை சார்ந்த தோழர்கள் பிரேம்நாத், பிரவீன், தினேஷ்குமார், 9வது வார்டு உறுப்பினர் சரவண மூர்த்தி மற்றும் மசாண்டிபாளையம் மகளிர் அணியை சார்ந்த சரசுவதி அம்மா உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.