நல்லசாமி: யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தையும், பாடலையும் பாடியவர் விஜய் அரசியல் புரிதல் இல்லை…!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல, கள்ளுக்கான போராட்டமும் நிச்சயம் வெற்றிபெறும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். கரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு நல்லசாமி பதிலளித்தார். அப்போது, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், ஏன் உலகளவில் எந்த நாட்டிலும்கூட கள் விற்பனைக்கு தடையில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் வெற்றி பெற்ற, 39 எம்.பி.,க்களும், அரசியல் சாசன சட்ட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டுதான் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில், 47-வது பிரிவில் கள் ஒரு உணவுப்பொருள் என்று சொல்லி இருக்கிறது. இதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி கள் இறக்கினால், மதுவிலக்குசட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது மதுவிலக்கு சட்டமா? மதுவிலக்கு சட்டத்துக்கு உட்பட்டது அரசியலமைப்புச் சட்டமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும் நல்லசாமி பேசிகையில், கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் தான் என, அவர்கள் எங்களிடம் உரிய தயாரிப்புகளுடன் வாதாட வரட்டும். நியாயமான வாதங்களை வைத்து, வெற்றி பெற்று விட்டால், அவர்களுக்கு, 10 கோடி ரூபாய் பரிசு தருகிறேன்.

கள் என்பது போதைப் பொருள் அல்ல. நமது உணவின் ஒரு பகுதியாகும். கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். இதையொட்டி, 2025 ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்துவோம் கள் விடுதலை போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றதுபோல, கள்ளுக்கான போராட்டமும் வெற்றி பெறும். தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தையும், பாடலையும் பாடியவர் விஜய். அவருக்கு அரசியல் குறித்த எவ்வித புரிதலும் இல்லை என நல்லசாமி தெரிவித்தார்.

சீமான்: வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ..!

தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, கூமுட்டை. சாலையில் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்த ஓரத்தில் நில், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிகவும் கொடு நிலை. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ… என சீமான் பேசியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் விஜய் பேசும்போதும் பல தரப்பினரையும் தாக்கி பேசினார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் பேசிய சீமான், தம்பி இது பன்னாட்டு புரட்சி தம்பி, என் மூதாதையர், முப்பாட்டனின் தோளில் இருந்த பணப்பையை அறுத்துக் கொண்டு ஓடி விட்டாய், இந்த தலைமுறை பேரனும் பேத்தியும் விரட்டியடித்து அதை பறிக்கின்றோம். நான் குட்டிக்கதை சொல்பவன் இல்லை தம்பி, வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்கவேண்டும்.

நாங்கள் அதை படித்து பிஎச்டி பட்டம் வாங்கி விட்டோம். நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேடவேண்டும். சங்க இலக்கியத்தில் வருகின்ற பாண்டியர் நெடுஞ்செழிய மன்னனின் பேரனும் பேத்தியும் நாங்கள். அது கதை அல்ல, எங்கள் இனத்தின் வரலாறு. எங்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு புரட்சி முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு, அன்பு என்றால் அன்பு, வம்பு என்றால் வம்பு.

நீங்கள் வெட்ட அருவாளை ஓங்கினால் விழுந்து கும்பிட மாட்டோம், வெட்ட நினைக்கும் போதே வெட்டி விடுவோம். தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, கூமுட்டை. சாலையில் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்த ஓரத்தில் நில், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிகவும் கொடு நிலை. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ… நான் கருவிலேயே என் எதிரி யார் என தீர்மானித்துவிட்டு பிறந்தவன்.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் இல்லை. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி…இது நெஞ்சு டயலாக். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.

வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார்? என்று சொல்லு தம்பி. சத்தமாக பேசும் நான் வரவில்லை என்றால் வேலு நாச்சியார். அழகு முத்துக்கோன், அஞ்சலை, சேர, சோழ பாண்டியர் யார் என்று தெரியாது, நீங்க வைத்துள்ள கட் அவுட்டுகள் எல்லாம் நான் வரைய வைத்த படங்கள். தீரன் சின்னமலையை சங்க இலக்கியத்தில் படிக்கக்கூடாது தம்பி. வரலாற்றில் படிக்க வேண்டும். அவன் மன்னன் இல்லை, விவசாய குடும்பத்தில் பிறந்த எளிய மகன். திப்பு சுல்தானின் படையை விரட்டி அடித்தவன். வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தம்பி என சீமான் பேசினார்.

விஜய் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று கூறியது குறித்து பல உதாரணங்களை பேசி கிண்டல் அடித்த சீமான் ஒவ்வொரு பேச்சு முடிந்த பின்பும் தம்பி, தம்பி எனக்கூறி விஜயை சகட்டு மேனிக்கு கலாய்த்தார். அப்போது தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர். இந்த சீமானின் பேச்சுக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சீமான்: சாலை நடுவே நின்னா லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி..!

சாலை நடுவே நின்னா லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக தாக்கி சீமான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் விஜய் பேசும்போதும் பல தரப்பினரையும் தாக்கி பேசினார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் பேசிய சீமான், தம்பி இது பன்னாட்டு புரட்சி தம்பி, என் மூதாதையர், முப்பாட்டனின் தோளில் இருந்த பணப்பையை அறுத்துக் கொண்டு ஓடி விட்டாய், இந்த தலைமுறை பேரனும் பேத்தியும் விரட்டியடித்து அதை பறிக்கின்றோம். நான் குட்டிக்கதை சொல்பவன் இல்லை தம்பி, வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்கவேண்டும்.

நாங்கள் அதை படித்து பிஎச்டி பட்டம் வாங்கி விட்டோம். நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேடவேண்டும். சங்க இலக்கியத்தில் வருகின்ற பாண்டியர் நெடுஞ்செழிய மன்னனின் பேரனும் பேத்தியும் நாங்கள். அது கதை அல்ல, எங்கள் இனத்தின் வரலாறு. எங்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு புரட்சி முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு, அன்பு என்றால் அன்பு, வம்பு என்றால் வம்பு.

நீங்கள் வெட்ட அருவாளை ஓங்கினால் விழுந்து கும்பிட மாட்டோம், வெட்ட நினைக்கும் போதே வெட்டி விடுவோம். தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, கூமுட்டை. சாலையில் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்த ஓரத்தில் நில், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிகவும் கொடு நிலை. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ… நான் கருவிலேயே என் எதிரி யார் என தீர்மானித்துவிட்டு பிறந்தவன்.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் இல்லை. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி…இது நெஞ்சு டயலாக். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.

வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார்? என்று சொல்லு தம்பி. சத்தமாக பேசும் நான் வரவில்லை என்றால் வேலு நாச்சியார். அழகு முத்துக்கோன், அஞ்சலை, சேர, சோழ பாண்டியர் யார் என்று தெரியாது, நீங்க வைத்துள்ள கட் அவுட்டுகள் எல்லாம் நான் வரைய வைத்த படங்கள். தீரன் சின்னமலையை சங்க இலக்கியத்தில் படிக்கக்கூடாது தம்பி. வரலாற்றில் படிக்க வேண்டும். அவன் மன்னன் இல்லை, விவசாய குடும்பத்தில் பிறந்த எளிய மகன். திப்பு சுல்தானின் படையை விரட்டி அடித்தவன். வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தம்பி என சீமான் பேசினார்.

விஜய் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று கூறியது குறித்து பல உதாரணங்களை பேசி கிண்டல் அடித்த சீமான் ஒவ்வொரு பேச்சு முடிந்த பின்பும் தம்பி, தம்பி எனக்கூறி விஜயை சகட்டு மேனிக்கு கலாய்த்தார். அப்போது தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர். இந்த சீமானின் பேச்சுக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சீமான் ஆவேசம்: அண்ணன் என்ன, தம்பி என்ன..!? கொண்ட கொள்கை தான் முக்கியம்..!

கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து குண்டுகளைத் தாங்கி மரணித்துக் கிடந்தபோது, பதறித்துடிப்பது தமிழ்த்தேசியம். அதேநேரம், சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்கும் திராவிடம். இரண்டும் ஒன்றா? திராவிடம் பெண்ணிய உரிமையைப் பேசும். ஆனால் தமிழ்த் தேசியம், பெண்ணிய உரிமையைக் கொடுக்கும், நிறைவேற்றும் . எனவே, இது இரண்டும் ஒன்று இல்லை. அப்படியிருக்கும்போது, எப்படி விஜய் இரண்டையும் தன்னுடைய கண் என்று கூறுவார்.

அதெப்படி சமம் ஆகும்? அதேபோல், இருமொழிக் கொள்கை என்கிறார். அடுத்தவர்கள் மொழி எப்படி எனக்கு கொள்கை மொழியாக இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான பேரை அம்மா என்று அழைக்கலாம். ஆனால், பெற்றவள் ஒருத்திதான். அதனால் எனக்கு கொள்கை மொழி என்னுடைய தாய்மொழி. தெலுங்கு, கன்னடா, பிஹாரி என அவரவருக்கு அவர்களுடைய தாய்மொழிதான் கொள்கை மொழியாக இருக்க முடியும். விரும்பி நாங்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்போம். உலக மொழிகளுக்கு எல்லாம் நாங்கள் பற்றாளர்கள். ஆனால், எங்கள் மொழிக்கு நாங்கள் உயிரானவர்கள்.

தமிழ்ப் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாடமொழி. இந்தி உட்பட உலகின் அனைத்து மொழிகளும் எங்களுடைய விருப்ப மொழி. விரும்பினால் கற்போம். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை. தமிழே எங்கள் மொழி என்பது தமிழ்த் தேசிய கொள்கை. திராவிடம் என்றால் என்ன? தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தவெகவைச் சேர்ந்த யார் இதற்கு விளக்கம் கூறுவார்கள்?

மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, EWS-க்கு 10 விழுக்காடு இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு, இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? எனவே, சமூக நீதி என்பதெல்லாம் சும்மா பேச்சு. திமுக கூடத்தான் வெகு நாட்களாக சமூகநீதி பேசுகிறது. அது ஜமுக்காள நீதி கூட கிடையாது. எங்கே இருக்கிறது நீதி? பெண்ணியம் உரிமை பேசும் திமுக அதை கொடுத்திருக்கிறதா?

தமிழக அமைச்சரவையில் சரிபாதி விழுக்காடு கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் தமிழ்த்தேசியக் கோட்பாடு. பெண் விடுதலை இல்லையே, மண் விடுதலை இல்லை. இதுதான் தமிழ்த்தேசியம். மதுகடைகளை மூடச் சொல்வது தமிழ்த்தேசியம். தெருவுக்கு இரண்டு மதுகடைகளைத் திறப்பது திராவிடம். இரண்டும் ஒன்று என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. எனவே, அண்ணன், தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்” என சீமான் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன்: விஜய் பேசியதை சுட்டிக் காட்டினேன்..! தனிப்பட்ட வன்மமும் இல்லை..!

தவெக மாநாட்டில் விஜய் பேசிய உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நியூஸ்18 தொலைகாட்சி நடத்தும் களம்18 நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசினார். அப்போது, “எடுத்த எடுப்பிலேயே 30 சதவீத வாக்குகளை விஜய்யால் வாங்க முடியுமா? எம்ஜிஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுக காரர். தேர்தல் அனுபவம் உள்ளவர். அவருக்குப் பின்னால் வந்த எந்த நடிக்கருக்கும் எம்ஜிஆருக்கு இருந்த பின்னணி இல்லை.

எம்ஜிஆரின் தொடர்ச்சியாகத்தான் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தார். விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

முன்னதாக தவெக மாநாட்டின் விஜய் பேசியது குறித்து தொல் திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், “திமுகவை பொது எதிரி என்று அறிவித்திருப்பதும் திமுக கூட்டணியை குறிவைத்திருப்பதும் தான் நடிகை விஜய்யின் ஒட்டுமொத்த உரையின் சாரம். பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்திருக்கிறார். பாசிசம் என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவை அடையாளப்படுத்தும் ஒரு சொல். பாசிச எதிர்ப்பு என்றால் பாஜக எதிர்ப்புதான். பாஜக எதிர்ப்பை அவர் நையாண்டி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அவருடைய கருத்துக்கு அது முரண்பாடாக இருக்கிறது. பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. பாசிசம் என்னால் என்னவென்று அவர் உணர்ந்திருக்கிறார் என்று தெரியவில்லை. விஜய்யின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் தெரிகிறது” என தொல் திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்தார்.

விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரியான பதிலடி: எம்ஜிஆர் பெயரை சொல்லி பொழப்பு நடத்தவேண்டிய நிலை..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த மற்றும் மரணமடைந்தோர் குடும்பங்கள் உள்ளிட்ட 167 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.67 கோடி நிதியுதவி வழங்கினார்.

அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் நடிகர் விஜய் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில்போய் இது சரியா, அது சரியா என்று நாம் சொல்ல முடியாது. கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படும்.

அதிமுக கட்சி பற்றி விஜய் தனது மாநாட்டில் விமர்சிக்கவில்லை. கொள்கையில் இருந்து அதிமுக எப்போதும் மாறாது. விஜய் மட்டுமல்ல, யாராலும் அதிமுக வாக்கை பிரிக்க முடியாது. எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்: விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா..!?

1993-இல் தமிழ் வெளிவந்த அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அஜித்குமார் அறிமுகமாகிய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து ‘அஜித் குமார் ரேசிங்’-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு துறை (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது திராவிடமாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார் என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார். அப்போது, “துணை முதலமைச்சர் உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். ஒருவேளை விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என்பது தெரியவில்லை” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் விமர்சனம்: தவெக விஜய் தெளிவான பாதையில் செல்லவில்லை..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” என்ற பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கும் தலைவர் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி, தற்போது வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய் அவரது கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் குழப்பான நிலையில்தான் இருக்கிறார்.

தேசமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என சொல்லியிருந்தால் வரவேற்றிருப்போம். திராவிடம் – தமிழ் தேசியம், இருமொழிக் கொள்கை எனவும் சொல்லியிருக்கிறார். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக இருக்கின்றன. இருப்பினும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து எல்.முருகன் பேசுகையில், அவரது செயல்பாடுகள் போகப் போகத்தான் தெரியும். அவரது கொள்கை, கோட்பாடுகள் தெளிவான பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் தெளிவான பாதையில் பயணிக்க விரும்பவில்லை என்பதையுமே காட்டுகிறது. திமுக, போலி திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் போலி திராவிட மாடல் ஆட்சியை அதிகமாக தாக்கியிருக்கிறார். குடும்ப அரசியல் பற்றியும் பேசியுள்ளார்.

  குடும்ப அரசியல் நம் நாட்டிற்கு நல்லதல்ல. ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு பற்றி விஜய் பேசியுள்ளார். அந்த கொள்கையை பாஜக ஏற்கனெவே பின்பற்றி, முன் உதாரணமாகத் திகழ்கிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்திலும் ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு கொடுக்கப்படுகிறது என எல்.முருகன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன் கேள்வி: இந்தியா கூட்டணி கட்சிகள் அனைவரையும் பாசிஸ்டுகள் என விஜய் சொல்கிறாரா..!?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய விஜய் பாசிஸ்டுகள் என்று திமுகவை மட்டும் சொல்கிறாரா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்தார். அப்போது,இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் “விஜய் அவர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார். அவரது தொண்டர்கள் அவரிடம் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் பல்வேறு யூகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்தார். தனக்கு எதிரான விமர்சனங்களை பற்றி விளக்கம் சொல்வதிலேயே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார்.

நண்பர்கள் யார் யார் என அடையாளம் காட்டுவதை விட தன்னுடைய எதிரிகள் யார் என அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். யார் யார் நமது நட்பு சக்திகள் யார் யாரோடு நாம் இணைந்து செயல்பட முடியும் என தமது தொண்டர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக தம்முடைய எதிரிகள் யார் என்று வரிசைப்படுத்துகிற போது பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும் ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி என்றும் கூறினார். பிளவுவாத சக்திகள் என்று அவர் சொல்கிற போது வெளிப்படையாக சொல்லவில்லை. குறிப்பிட்டு இந்த கட்சிதான் இந்த அமைப்புதான் என்று அடையாளப்படுத்தவில்லை.

பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலில் அந்தப் பிளவுவாத அரசியலில் தமக்கு உடன்பாடு இல்லை இத்தகைய பிளவுவாத கட்சிகளை எதிர்ப்போம் என்று மேம்போக்காக சொல்கிறார். அதிலே ஒரு முரண்பாடும் தெரிகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்கிற போது ஒரு சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என்று நாம் மகிழ்ச்சி அடைகிற வேளையில், பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறபோது பெரும்பான்மைவாதத்தை பேசுகிறார்கள் யார் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

அவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால் பெரும்பான்மைவாதத்திற்கு துணை போகிற ஒரு நிலைப்பாடாக அது அமைந்து விடும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை வாதம் பேசுகிற ஒரே கட்சி பாஜக. அதற்கு துணை நிற்கிற சங்பரிவார்கள் அதனால் சிறுபான்மை சமூகத்தினர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இதர மத வழி சிறுபான்மையினர்களும் அச்சத்தோடு பீதியோடு இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

ஆனால், எனக்கு பெரும்பான்மை சிறுபான்மை என்கிற அரசியலிலேயே நம்பிக்கை இல்லை அதை எதிர்க்கிறோம் என்று மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்து போகிறார். அப்படி என்றால் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு பௌத்தர் சமணர் போன்ற சிறுபான்மை மதத்தினரின் பாதுகாப்பு குறித்து அவர் என்ன நிலைபாட்டை கொண்டிருக்கிறார் என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அது ஒரு குழப்பமான நிலையாக இருக்கிறது.

பாசிச எதிர்ப்பை பற்றி பேசுகிற போது மிக இலகுவாக கிண்டல் அடித்து விட்டு பாசிச எதிர்ப்பையே ஒன்றுமில்லை அது தேவையில்லை என்பது போல கடந்து போகிறார். ‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா’ என்று கேட்கிறார். அதில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று பாசிச எதிர்ப்பு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என எடுத்துக் கொள்ளலாம். இன்னொன்று நீங்களும் பாசிஸ்டுகள் தான் நீங்கள் ஒன்றும் சனநாயக சக்திகள் இல்லை என்று சொல்வதாக புரிந்து கொள்ளலாம்.

நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று அவர் திமுகவை மட்டும் சொல்கிறாரா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாவை பொறுத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்றாலே பாஜக எதிர்ப்பு தான் சங்பரிவார் எதிர்ப்பு தான்.

ஆக ‘நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று சொல்லக்கூடாது’ என நான் சொல்ல முடியாது அது அவருடைய கருத்து. அப்படி என்றால் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என அனைவரையுமே பாசிஸ்டுகள் என கேலி செய்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அதிலே பாசிச எதிர்ப்பு தேவை இல்லை என்கிற கருத்து தொனிப்பின் மூலம் பாஜக எதிர்ப்பு தேவை இல்லை என்கிற பொருளும் வெளிப்படுகிறது. ஆக பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பது அவரது உரையில் வெளிப்படுகிறது.

அவரது உரையில் அதிகம் திமுக எதிர்ப்பு நெடி வீசுகிறது. அவரது ஒட்டுமொத்த உரையின் சாராம்சமும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் அரசியலை எதிர்ப்பதாக இருக்கிறது. நண்பர் விஜய் அவர்களிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் இல்லை, செயல் திட்டங்கள் இல்லை.” எனக் குறிப்பிட்டேன் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

H. ராஜா: பிரதமரே திராவிடத்தைச் சேர்ந்தவர்..! தான் யார் என்று தெரியாமல் விஜய் பேசுகிறார்..!

பிரதமரே திராவிடத்தைச் சேர்ந்தவர் தான். நாட்டின் சரித்திரம், தான் யார் என்று தெரியாமல் விஜய் பேசுகிறார் என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களின் கேள்விக்கு ஹெச்.ராஜா பதிலளித்தார்.

அப்போது, “ஆளுநர் தேவையில்லை என்று கூறும் விஜய்யை மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும்? அவர் அரசியலமைப்பை படிக்க வேண்டும். ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக பேசியது அறிவிலித்தனம். திமுகவை பின்தொடர்ந்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார்.

திராவிட மாடல் என்பது தேசிய வெறுப்பு அரசியலின் ஆணி வேர். பிரதமரே திராவிடத்தைச் சேர்ந்தவர் தான். நாட்டின் சரித்திரம், தான் யார் என்று தெரியாமல் விஜய் பேசுகிறார். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும். இனத்தை அல்ல. இது புரியாமல் கால்டுவெல் கற்பித்ததை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். திராவிட சித்தாந்தத்தை பேசும் விஜய்யும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.