பொது இடங்களிலுள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன. கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளின்போது கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது.

யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன. பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதி, உரிமம் வழங்கவில்லை. நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க காவல்துறைருக்கும், வருவாய்த் துறையினருக்கும் அதிகாரம் இல்லை.

எனவே தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும்.

அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் நிரந்தரமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த அதிகாரியும் அனுமதி வழங்கக் கூடாது. அரசியல் கட்சியினர், சமுதாயம் மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முறையாக அனுமதி பெற்று அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்களை வைக்கலாம். தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

பிரச்சாரம், பொதுக்கூட்டம், தர்ணா மற்றும் கூட்டங்களின்போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் நடலாம். இதற்கு முன்கூட்டியே வாடகை வசூலித்துக்கொண்டு அதிகாரிகள் அனுமதி வழங்கலாம். அனுமதி காலம் முடிந்த பின்னர் தற்காலிகக் கொடிக் கம்பங்கள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கொடிக் கம்பங்கள் நடப்பட்ட இடம் சுத்தம் செய்யப்பட்டு, அதற்காக தோண்டிய குழிகள் மூடப்பட்டு பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதில் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும். இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

L. முருகன் முன்னிலையில் பாஜக நிர்வாகிகள் மோதல்..!

பாஜகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனத்தில் முறையாக தேர்தல் நடத்தாமல் எந்த அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். இந்த தலைவர் தேர்தலை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் அறிவிப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவருக்கான போட்டியில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெய் சதீஷ், ஒரத்தநாடு கர்ணன் உஞ்சியவிடுதி துரை, கண்ணுகுடி துரைமுருகன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் பாஜக தெற்கு மாவட்ட தலைவராக ஜெய் சதீஷ் என்பவரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவித்தனர். ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்ட தலைவராக இருந்த ஜெய் சதீஷை எப்படி தேர்வு செய்யலாம். பட்டியலில் இல்லாதவர் பெயரை எப்படி அறிவிக்கலாம் என்று எதிர் தரப்பினர் தெரிவித்தனர். முறையாக தேர்தல் நடத்தாமல் எந்த அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். இந்த தலைவர் தேர்தலை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்கள். மத்திய அமைச்சர் எல் முருகன் முன்னிலையிலேயே பாஜக நிர்வாகிகள் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

எல். முருகன் இப்போ உதயநிதி ஸ்டாலின்.. சீக்கிரம் முதலமைச்சர் ஸ்டாலின்..!

தீபாவளிக்கு இதுவரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன், தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி அவர் தீபாவளியைக் கொண்டாடினார். அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார்.

அப்போது, தீபாவளிக்கு இதுவரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் இதுவே எங்களுக்கு வெற்றி தான் என்று குறிப்பிட்ட எல்.முருகன், முதலமைச்சரும் விரைவில் வாழ்த்து சொல்வார் என நம்புகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

திமுக தலைவர்கள் தீபாவளி வாழ்த்து சொல்லாதது ஆண்டுதோறும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகைகளின் போது பாஜக , அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், திமுக தலைமை சார்பில் இதுவரை தீபாவளி பண்டிகைகளுக்கு வாழ்த்து சொன்னதே கிடையாது. இதன் காரணத்தால், திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பவள விழா ஆண்டின் நிறைவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் சுமார் 4,250 கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துறைமுகம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திராவிடம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆளுநருக்கு அலர்ஜியாகிவிடும். திராவிடம் என்ற வார்த்தையை எடுத்து விட்டால் திராவிடமே அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். கலைஞரின் உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகள் இருக்கும் வரை தமிழகத்தையும் திராவிடத்தையும் எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. நீங்கள் என்ன முயன்றாலும் திராவிடம் இருக்கும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், “நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அனைவருக்கும் திமுக பவள விழா ஆண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்கு தீபாவளித் திருநாள் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகன் விமர்சனம்: தவெக விஜய் தெளிவான பாதையில் செல்லவில்லை..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” என்ற பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கும் தலைவர் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி, தற்போது வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய் அவரது கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் குழப்பான நிலையில்தான் இருக்கிறார்.

தேசமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என சொல்லியிருந்தால் வரவேற்றிருப்போம். திராவிடம் – தமிழ் தேசியம், இருமொழிக் கொள்கை எனவும் சொல்லியிருக்கிறார். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக இருக்கின்றன. இருப்பினும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து எல்.முருகன் பேசுகையில், அவரது செயல்பாடுகள் போகப் போகத்தான் தெரியும். அவரது கொள்கை, கோட்பாடுகள் தெளிவான பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் தெளிவான பாதையில் பயணிக்க விரும்பவில்லை என்பதையுமே காட்டுகிறது. திமுக, போலி திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் போலி திராவிட மாடல் ஆட்சியை அதிகமாக தாக்கியிருக்கிறார். குடும்ப அரசியல் பற்றியும் பேசியுள்ளார்.

  குடும்ப அரசியல் நம் நாட்டிற்கு நல்லதல்ல. ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு பற்றி விஜய் பேசியுள்ளார். அந்த கொள்கையை பாஜக ஏற்கனெவே பின்பற்றி, முன் உதாரணமாகத் திகழ்கிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்திலும் ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு கொடுக்கப்படுகிறது என எல்.முருகன் தெரிவித்தார்.

கிருஷ்ணசாமி: திருமா பிறந்த சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை..! ஆதரவு அளிக்கும் சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை…!

திருமாவளவன் சொந்த சாதி மக்களுக்கும் உண்மையாக இல்லை எனவும் கூட்டணிக் கட்சிக்கும் உண்மையாக இல்லை எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு குற்றச்சாட்டியுள்ளார். நவம்பர் மாதம் 7 -ஆம் தேதி அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மாஞ்சோலை தொழிலாளர் ஆதரவு தெரிவித்தும் புதிய தமிழகம் சார்பாகப் பேரணி நடத்தப்படும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக எல்.முருகனுக்கும் திருமாவளவனுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவி வருகிறது. ‘திருமாவளவன் தலித் மக்கள் அனைவருக்குமான தலைவர் இல்லை. ஆகவே அவர் முதலமைச்சராக முடியாது என மத்திய இணையமைச்சர் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இந்த எல்.முருகன் கருத்திற்கு, ‘முருகன் அருந்ததியர் அல்ல. RSS காரர்’ என தொல் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த திருமாவளவன் கருத்திற்கு எல்.முருகன், ‘RSS காரன் என்பதற்குப் பெருமை கொள்கிறேன்’ என பேசி இருந்தார்.

இப்படி இந்தச் சர்ச்சை தொடக்கப் புள்ளியே அருந்ததியர் Vs தலித் என்ற இரு துருவ மோதலாக மாறி இருக்கிறது. இதனிடையே அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை மு.கருணாநிதி அமல்படுத்திய போது அதை ஆதரித்துவிட்டு, இப்போது உச்சநீதிமன்றம் வரை போய் திருமாவளவன் நிற்பது ஏன்? தும்பை விட்டு வாலை பிடித்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டியில், “ஆரம்பத்திலிருந்தே அருந்ததியருக்குப் பிரித்து அளிக்கப்பட்ட 3% உள் ஒதுக்கீட்டை நான் எதிர்த்து வருகிறேன். அருந்ததியருக்கு அளிக்கப்படும் 3% உள் ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே 18% பட்டியலின மக்களின் ஒட்டுமொத்த ஒதுக்கீடும் அருந்ததியருக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் வேலைக்காக 8 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 4 இடங்களை BC மற்றும் MBCக்கு ஒதுக்கிவிட்டனர். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. மீதி இருந்த 4 இடங்களையும் மொத்தமாக அருந்ததியருக்கே அரசு ஒதுக்கிவிட்டது.

அது எப்படி நியாயமாகும்? பறையர், தேவேந்திரகுல வேளாளருக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளன. அதேபோல மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 92 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 92 இடங்களையும் அருந்ததியச் சமூகத்தினருக்கே அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு உதவிப் பெறும் ஆயிரக் கணக்கான தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இதில் பறையர் மற்றும் பள்ளர் வகுப்பினருக்கு 15% இடஒதுக்கீட்டின் படிப் பார்த்தால் ஒன்று அல்லது 2 பேருக்குத்தான் வேலை கிடைக்கும்.

ஆனால், இந்தப் பள்ளிகளில் கடந்த 14 வருடங்களில் ஒட்டுமொத்த இடங்களும் அருந்ததியருக்கே வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் பட்டியலின மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்படி எதிர்காலத்தில் பிரச்சினை வரும் என்றுதான் நான் தொடக்கத்திலேயே உள் ஒதுக்கீட்டை எதிர்த்தேன். 3% பிரிந்து அருந்ததியருக்கு வழங்கப்பட்ட பிறகு, மீதமுள்ள 15% என்பது பறையர் மற்றும் பள்ளர் சமூகத்திற்கானது. அதில் மீண்டும் ஏன் அருந்ததியரை அரசு நுழைக்கிறது. அது ஒரு அநீதி. அன்று இதை ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்க்கிறேன் திருமாவளவன் என்கிறார்.

அதையாவது உண்மையாக எதிர்க்கிறாரா? என்று அவர் சொல்லட்டும்? திருமா பிறந்த சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. ஆதரவு அளிக்கும் சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. இருக்கும் கூட்டணிக்கும் அவர் நேர்மையாக இல்லை. கருணாநிதி நடத்திய கூட்டத்தில் ஆதரித்துவிட்டு இப்போது நீதிமன்றம் திருமா போகிறார். வழக்கு 15 வருடங்களாக நடந்து வருவது அவருக்குத் தெரியுமா? தெரியாதா? கேட்டால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்கிறார்.

சீராய்வு மனு போடுவதற்கு என்ன அர்த்தம்? எதிர்ப்பதா? ஆதரிப்பதா? காலையில் ஒன்று மாலையில் மற்றொன்று எனப் பேசக் கூடாது? வடமாவட்டத்தில் உள்ள பறையர் சமூகத்தினர் மத்தியில் நமக்குப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுப்போம் என்று பேசத் தயாரா? நம் மக்களுக்காக உண்மையாக இருக்கவேண்டும். திருமாவளவனுக்குப் பதவிதான் பெரிது என்றால் இடஒதுக்கீடு பற்றிப் பேச அவருக்கு உரிமை கிடையாது. அப்படி உண்மையாகவே உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவராக இருந்தால் எங்கள் பேரணியில் கலந்துகொள்வாரா? அதற்குத் தயாரா?” என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்

கிருஷ்ணசாமி சவால் நான் ரெடி..!? திருமா ரெடியா..!?

திருமாவளவன் சொந்த சாதி மக்களுக்கும் உண்மையாக இல்லை எனவும் கூட்டணிக் கட்சிக்கும் உண்மையாக இல்லை எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு குற்றச்சாட்டியுள்ளார். நவம்பர் மாதம் 7 -ஆம் தேதி அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மாஞ்சோலை தொழிலாளர் ஆதரவு தெரிவித்தும் புதிய தமிழகம் சார்பாகப் பேரணி நடத்தப்படும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக எல்.முருகனுக்கும் திருமாவளவனுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவி வருகிறது. ‘திருமாவளவன் தலித் மக்கள் அனைவருக்குமான தலைவர் இல்லை. ஆகவே அவர் முதலமைச்சராக முடியாது என மத்திய இணையமைச்சர் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இந்த எல்.முருகன் கருத்திற்கு, ‘முருகன் அருந்ததியர் அல்ல. RSS காரர்’ என தொல் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த திருமாவளவன் கருத்திற்கு எல்.முருகன், ‘RSS காரன் என்பதற்குப் பெருமை கொள்கிறேன்’ என பேசி இருந்தார்.

இப்படி இந்தச் சர்ச்சை தொடக்கப் புள்ளியே அருந்ததியர் Vs தலித் என்ற இரு துருவ மோதலாக மாறி இருக்கிறது. இதனிடையே அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை மு.கருணாநிதி அமல்படுத்திய போது அதை ஆதரித்துவிட்டு, இப்போது உச்சநீதிமன்றம் வரை போய் திருமாவளவன் நிற்பது ஏன்? தும்பை விட்டு வாலை பிடித்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டியில், “ஆரம்பத்திலிருந்தே அருந்ததியருக்குப் பிரித்து அளிக்கப்பட்ட 3% உள் ஒதுக்கீட்டை நான் எதிர்த்து வருகிறேன். அருந்ததியருக்கு அளிக்கப்படும் 3% உள் ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே 18% பட்டியலின மக்களின் ஒட்டுமொத்த ஒதுக்கீடும் அருந்ததியருக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் வேலைக்காக 8 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 4 இடங்களை BC மற்றும் MBCக்கு ஒதுக்கிவிட்டனர். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. மீதி இருந்த 4 இடங்களையும் மொத்தமாக அருந்ததியருக்கே அரசு ஒதுக்கிவிட்டது.

அது எப்படி நியாயமாகும்? பறையர், தேவேந்திரகுல வேளாளருக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளன. அதேபோல மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 92 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 92 இடங்களையும் அருந்ததியச் சமூகத்தினருக்கே அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு உதவிப் பெறும் ஆயிரக் கணக்கான தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இதில் பறையர் மற்றும் பள்ளர் வகுப்பினருக்கு 15% இடஒதுக்கீட்டின் படிப் பார்த்தால் ஒன்று அல்லது 2 பேருக்குத்தான் வேலை கிடைக்கும்.

ஆனால், இந்தப் பள்ளிகளில் கடந்த 14 வருடங்களில் ஒட்டுமொத்த இடங்களும் அருந்ததியருக்கே வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் பட்டியலின மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்படி எதிர்காலத்தில் பிரச்சினை வரும் என்றுதான் நான் தொடக்கத்திலேயே உள் ஒதுக்கீட்டை எதிர்த்தேன். 3% பிரிந்து அருந்ததியருக்கு வழங்கப்பட்ட பிறகு, மீதமுள்ள 15% என்பது பறையர் மற்றும் பள்ளர் சமூகத்திற்கானது. அதில் மீண்டும் ஏன் அருந்ததியரை அரசு நுழைக்கிறது. அது ஒரு அநீதி. அன்று இதை ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்க்கிறேன் திருமாவளவன் என்கிறார்.

அதையாவது உண்மையாக எதிர்க்கிறாரா? என்று அவர் சொல்லட்டும்? திருமா பிறந்த சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. ஆதரவு அளிக்கும் சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. இருக்கும் கூட்டணிக்கும் அவர் நேர்மையாக இல்லை. கருணாநிதி நடத்திய கூட்டத்தில் ஆதரித்துவிட்டு இப்போது நீதிமன்றம் திருமா போகிறார். வழக்கு 15 வருடங்களாக நடந்து வருவது அவருக்குத் தெரியுமா? தெரியாதா? கேட்டால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்கிறார்.

சீராய்வு மனு போடுவதற்கு என்ன அர்த்தம்? எதிர்ப்பதா? ஆதரிப்பதா? காலையில் ஒன்று மாலையில் மற்றொன்று எனப் பேசக் கூடாது? வடமாவட்டத்தில் உள்ள பறையர் சமூகத்தினர் மத்தியில் நமக்குப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுப்போம் என்று பேசத் தயாரா? நம் மக்களுக்காக உண்மையாக இருக்கவேண்டும். திருமாவளவனுக்குப் பதவிதான் பெரிது என்றால் இடஒதுக்கீடு பற்றிப் பேச அவருக்கு உரிமை கிடையாது. அப்படி உண்மையாகவே உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவராக இருந்தால் எங்கள் பேரணியில் கலந்துகொள்வாரா? அதற்குத் தயாரா?” என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்

தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு: விசிகவில் இருந்து அருந்ததியரை பிரிக்க RSS சதி நடக்கிறது..!

விசிகவில் இருந்து அருந்ததியின மக்களை வெளியேற்ற RSS சதித்திட்டம் தீட்டுவதாக அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

எல். முருகன் கேள்வி: அருந்ததியர் அல்லது தேவேந்திரர்களுக்கு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட திருமாவளவன் வாய்ப்பு கொடுத்தாரா..!?

கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதிலளித்தார். திருமாவளவன் என்னை RSS காரர் என கூறியுள்ளார். நான் RSS அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் சட்டரீதியாக போராடி பெற்றுள்ளோம்.

அருந்ததியின மக்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதைத்தான் பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ஒண்டிவீரனின் 251-வது நினைவு நாளில் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அஞ்சல் தலையை வெளியிட்டு, ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்த்தார். திருமாவளவன் எப்போதாவது திருநெல்வேலி சென்று ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தியது உண்டா?

கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? இடஒதுக்கீடு பற்றி பேச துளியும் தகுதியற்ற தலைவர் திருமாவளவன். பட்டியலின மக்கள் அனைவரும் மேம்பட வேண்டும் என்றுதான் பாஜக பணியாற்றி வருகிறது. ஆன்மிகத்தையும், சனாதனத்தையும் நாங்கள் ஆதரிப்போம். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை சட்டரீதியாக பெற்றுத் தருவதில் என்னுடைய பங்கு என்ன என்பது சமுதாயத்துக்கு தெரியும்.

அந்தந்த மாநிலங்கள், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடை வழங்கிக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்கி நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் மறுஆய்வு மனுவை கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், திருமாவளவன் எதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரா? என எல். முருகன் பேசினார்.

தொல் திருமாவளவன்: எல்.முருகன் அருந்ததியர் என்பது யாருக்கு தெரியும்..! RSS சொல்லித்தான் தெரியும்..!

எல்.முருகன் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும் என தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

எல்.முருகன்: இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை..!

இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதிலளித்தார். திருமாவளவன் என்னை RSS காரர் என கூறியுள்ளார். நான் RSS அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் சட்டரீதியாக போராடி பெற்றுள்ளோம்.

அருந்ததியின மக்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதைத்தான் பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ஒண்டிவீரனின் 251-வது நினைவு நாளில் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அஞ்சல் தலையை வெளியிட்டு, ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்த்தார். திருமாவளவன் எப்போதாவது திருநெல்வேலி சென்று ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தியது உண்டா?

கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? இடஒதுக்கீடு பற்றி பேச துளியும் தகுதியற்ற தலைவர் திருமாவளவன். பட்டியலின மக்கள் அனைவரும் மேம்பட வேண்டும் என்றுதான் பாஜக பணியாற்றி வருகிறது. ஆன்மிகத்தையும், சனாதனத்தையும் நாங்கள் ஆதரிப்போம். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை சட்டரீதியாக பெற்றுத் தருவதில் என்னுடைய பங்கு என்ன என்பது சமுதாயத்துக்கு தெரியும்.

அந்தந்த மாநிலங்கள், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடை வழங்கிக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்கி நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் மறுஆய்வு மனுவை கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், திருமாவளவன் எதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரா? என எல். முருகன் பேசினார்.