திருநாவுக்கரசர் சொன்னது: போயஸ் வீட்டில் சேலை இழுப்பு நாடகதிற்கு ஒத்திகை செய்தாராம் ஜெயலலிதா…!

மணிப்பூர் விவகாரம் குறித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கொதித்து எழுந்த கனிமொழி எம்பி மணிப்பூரில் திரௌபதியின் சேலைகள் உருவப்படுவதாக பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.

அவர் பேசுகையில், மணிப்பூர் விவகாரம் குறித்து கனிமொழி இன்று பொங்குகிறாரே, அன்று 1989 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை மறந்துவிட்டாரா…? அவர் அவமானப்படுத்தப்பட்ட போது அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

இதனால் கோபமடைந்த ஜெயலலிதா இனி இந்த அவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என சபதம் போட்டார். அப்படிப்பட்ட திமுக இன்று திரௌபதி குறித்து பேசுகிறார்கள். இது என்ன அநியாயம் என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் தகவலுக்கு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் சேலை கிழிப்பு சம்பவம் சட்டசபையில் நடைபெறவே இல்லை. இது ஜெயலலிதா போட்ட நாடகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்காக ஜெயலலிதா தனது வீட்டில் ஒத்திகை பார்த்ததாக அவருடன் இருந்த திருநாவுக்கரசரே தெரிவித்துள்ளார் என முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா சேலை இழுப்பு விவகாரத்தில் திருநாவுக்கரசர் கூறியது, எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து முதலமைச்சராக கருணாநிதி வந்தார். அப்படி முதலமைச்சரான போது அவரே நிதித்துறையையும் தன் வசம் வைத்துக் கொண்டார். 1989 -ம் ஆண்டு மே மாதம் மார்ச் 25 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பட்ஜெட் காப்பியை அதிமுக எம்எல்ஏ கிழிக்க முயற்சித்தார். இதை உணர்ந்த கருணாநிதி இரு கைகளை பரப்பி பட்ஜெட் பேப்பரை எடுக்காத வண்ணம் குனிந்தபடியே தடுத்தார். அப்போது அவருடைய கண்ணாடி கீழே விழுந்தது. உடனே திமுகவினர் கருணாநிதியை மூக்கில் குத்தியதால்தான் அவரது கண்ணாடி கீழே விழுந்ததாக சொன்னார்கள்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது அடி விழுந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவரான என் மீது அடி விழுந்தது. கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கொறடா பின்னாடி இருந்தார். ஜெயலலிதாவுக்கு விழுந்த அடியில் பாதியை நான் வாங்கிக் கொண்டேன். என் உச்சி மண்டை வீங்கியது. ஜெயலலிதா குனிந்து கொண்டு கையை வைத்து படுத்துக் கொண்டார்.

ஓரளவுக்கு மேல் அடிப்பது குறைந்ததும் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு நாங்கள் வெளியேறினோம். ஆனால் ஜெயலலிதாவின் சேலையை எல்லாம் உருவினார்கள் என வதந்தி பரவியது. கருணாநிதி முகத்தில் குத்தும் விழவில்லை, ஜெயலலிதாவின் சேலையும் இழுக்கப்படவில்லை. ஆனால் சேலை இழுப்பு விவகாரத்தில் ஜெயலலிதா அவருடைய வீட்டில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்ததை நானே பார்த்தேன் என திருநாவுக்கரசர் எம்.எல்.ஏவாக இருந்த போது சட்டசபையில் கூறியிருந்தார்.

சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா தலைமுடி கலைந்தபடியே வந்து தனது சேலையை துரைமுருகன் உருவியதாகவும் அங்கிருந்தவர்கள் எல்லாம் தன்னை பார்த்து சிரித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சம்பவத்தை துரைமுருகன் மறுத்துள்ளார். கடந்த 2003 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் இந்த பிரச்சினை எழுந்தது.

அப்போது பேசிய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதே சட்டசபையில் எம்ஜிஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 இல் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். இதில் என் சேலை கிழிந்துவிட்டது. ஆளும் கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை என்றார். உடனே துரைமுருகன், நீங்கள் கூறுவது தவறு. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன் என தெரிவித்தார்.

புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்..!

4 வருடங்களுக்கு முன் நிலம் ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்…? அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்…?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமாக தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்துக்கு மத்திய அரசு காரணம் இல்லை.” எனத் தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 9 வயது மாணவி மீது சாலையில் சுற்றுத் திரிந்த மாடு முட்டித் தாக்கியதில் சிறுமி காயமடைந்த அமைந்தகரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அந்த மாணவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மருத்துவர்கள் உடனடியாக வழங்கி தொடர்ந்து கவனித்து வருகின்றனர். தலை, கை ஆகிய பகுதிகளில் அடிபட்டு உள்ளதை, சி.டி ஸ்கேன் எடுத்து பெரிய பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். கண் அருகே இரத்தக் கசிவு இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் நாடாளுமன்றத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் குறித்து சொன்ன பதில், உண்மைக்கு மாறானது. மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் இப்படி மக்களை குழப்பும் வகையில் பேசக்கூடாது. வாய் கூசாமல் பொய் பேசியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது மெகா அண்டப்புளுகு என்று சொல்வார்களே, அப்படியான புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் மத்திய நிதி அமைச்சர். மத்திய பாஜக அரசு கடந்த 2015-ம் ஆண்டு 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது. அதில் உத்தர பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர், பீகார், தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ஆனால் உத்தர பிரதேசம் கோரக்பூரில் மருத்துவமனை இயங்கி வருகிறது. அசாம், ஜம்முவில் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இயங்கி வருகின்றன. பீகார் உள்ளிட்ட இடங்களிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் மதுரை நிலைமை நமக்கே தெரியும். 2017-ல் ஜார்க்கண்டில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை, தெலுங்கானாவில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம் இயங்கி வருகின்றன. 2022-ல் மணிப்பூர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அறிவித்த மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 2019-ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் இன்று சொல்கிறார்.

ஆனால் 4 வருடங்களுக்கு முன் நிலம் ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்? அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்? அடிக்கல் காட்டப்பட்ட இடம் என்பது ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டிய இடமே அல்ல. அது அந்த மாவட்ட நிர்வாகத்தின் வசமிருந்த இடம். அதனை மத்திய அரசுக்கு மாற்றிக் கொடுத்த பின்னர் தான், பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு பின், மத்திய அரசின் குழுவினர் வந்து ஆய்வு செய்து, 15 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது.

அது 2021-ல் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே நடந்தது. மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான நிலத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் மத்திய அரசுக்கு மாற்றியதற்கான கோப்புகளை அடிக்கல் நாட்டு விழா நடந்த பின்னர், கடந்த 2020 நவம்பர் 3 அன்று டெல்லிக்கு சென்று மத்திய அரசின் உரிய அலுவலர்களிடம் அன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அதெல்லாம் தெரியாமல் நிதி அமைச்சர் இவ்வாறு பேசி உள்ளார். இப்படி தவறான தகவலை மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது என்பது மிகவும் மோசமானது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசே முழு நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மட்டும் ஜப்பான் நிதியை நாடிச் செல்வது ஏன்? மற்ற மாநிலங்களை விட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் நிதி தேவை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் கூறி உள்ளார். அதையெல்லாம் காலதாமதம் ஆனதற்கு காரணமாக சொல்கிறார். ஆனால் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை ஆயிரம் படுக்கைகளுடன் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடித்து உள்ளோம். இன்று அது செயல்பாட்டிற்கே வந்துவிட்டது.” எனத் தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏ பரந்தாமன் பதிலடி: நிர்மலா சீதாராமன் புரிதல் இல்லாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்..!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தமிழர்கள் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திராவிடம் பற்றி எல்லாம் குறிப்பிடப்படவில்லை மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் சேலை இழுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது.. என்பது மாதிரியான கருத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு விஷயங்கள் குறித்து எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ பரந்தாமன் பதில் கூறுகையில், ” மணிப்பூரில் நடந்த மனிதாபிமானமற்ற, இந்திய நாடே வெட்கப்படக்கூடிய மிகப்பெரிய மோசமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதை பற்றி மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மணிப்பூர் சென்று பார்வையிட்டு வந்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் மீது, இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசினார்கள்.

அப்போது மத்திய அரசு எங்கெல்லாம் தவறு செய்கிறது.. ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.. மொழி திணிப்பால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏதேச்சதிகாரம், ஒரே நாடு ஒரே மொழி இது மாதிரி எல்லாம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக செய்து கொண்டு வருகிறார்கள் என்று திமுக எம்பி கனிமொழி பேசினார். அப்போது அவர் நீங்க இந்தி மொழியை திணிக்கிறீர்கள்.. இந்தியாவின் பிற மொழிகளையும் பாருங்க என்பது தான் கனிமொழி பேச்சின் அர்த்தமாக இருந்தது.

தமிழில் உள்ள இலக்கியத்தை படிங்க.. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தை பாருங்கள் என்று மேற்கோள் தான் காட்டினார். சட்டசபையில் ஜெயலலிதா சேலையை திமுகவினர் பிடித்து இழுத்ததாக நிர்மலா சீதாராமன் பேச்சு.. சம்பவம் உண்மையா ? ஆனால் இன்றைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது , மணிப்பூர் சம்பவத்தை பற்றி மருத்துக்குக் கூட பேசவில்லை. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று பேசவில்லை.. அதைவிட்டுவிட்டு அரசியல் மேடை போல் அவையை மாற்றி உள்ளது பாஜக அரசாங்கம்.. வடக்கே வேங்கடமும், தெற்கே குமரியும் தெற்கிலும், கிழக்கிலும் கடலும் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தது என்று பாடப்புத்தகத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள்.

இதில் மாபொசியின் விளக்கத்தை சொன்னார்கள் .. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு எல்லைகள் மாறி உள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்தில் சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது என்று கற்பனையான ஆதாரமற்ற விஷயத்தை எழுதி கொடுத்ததை நிர்மலா சீதாராமன் படித்துள்ளார். இந்தியா என்ற சப்ஜெக்ட் எல்லாம் சிலப்பதிகாரம் காலக்கட்டத்தில் இல்லை.. பல சமஸ்தானங்கள் இருந்தது. வெள்ளையர்கள் வசதிக்காக இந்தியா என்று நிர்வாக ரீதியாக உருவாக்கப்பட்டது.

நிர்மலா சீதராமன் புரிதல் இல்லாமல் பட்ஜெட். வரி உள்பட பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் என்று பார்த்தால், வரலாறு குறித்தும் அரசியல் குறித்தும் புரிதல் இல்லாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார். இரண்டாவது ஜெயலலிதா சப்ஜெக்ட்டை எடுத்ததே மிகப்பெரிய அநாகரீகம்.. சாதாரண சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. பெண்கள் வல்லுறவுக்கு ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் வெளிப்படையாக மானபங்கம் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாமல் , நிர்மலா சீதாராமன், அரசியல் நாடகம் செய்த ஜெயலலிதாவின் செயலை, அதாவது ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டை போய் பேசுவது, இவர்களின் சிறு புத்தி மற்றும் சிறுபிள்ளைத்தனமாகும். ஒன்றுமே இல்லை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்ததாக பாஜக எம்பிக்கள் கூறினார்கள் அவர்களிடம் எப்படி தரமான வாதத்தை பார்க்க முடியும்” என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் கூறினார்.

நிர்மலா சீதாராமன்: ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து

45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது  ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.